அகஸ்தீஸ்வரம் அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரம் அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி
Published on

தென்தாமரைகுளம்:

அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்குட்பட்ட பாலசவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவில் நவராத்திரி விழாகடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கடைசி நாளானநேற்று விஜயதசமியை முன்னிட்டு ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை விவேகானந்தா கல்லூரியின்முன்னாள் தமிழ் துறை தலைவர் மரிய ஜூலியட் ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியை ரேணுகா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுமார் 20 குழந்தைகள் கலந்து கொண்டனர். பின்பு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள் கே.எஸ்.மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜசுந்தரபாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com