திருப்பூர் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விஜயதசமி நாளில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.கோவை குருக்கள் ராம் குமார் கணபதி ஹோமம் வளர்த்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
திருப்பூர் கிட்ஸ்  கிளப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 
திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 
Published on

திருப்பூர்:

விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தை துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பதன் காரணமாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதன்படி விஜயதசமி நாளில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.

இதையடுத்து அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றமும், வளமும் பெற்று என்றும் சிறப்புடன் விளங்க பெற்றோர்கள், பள்ளித்தலைவர் மோகன் கே. கார்த்திக், தாளாளர் வினோதினி, பள்ளி முதல்வர் நிவேதிகா, இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

திருப்பூர் வீரபாண்டி பிரிவு விருக்சா சர்வதேசப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி தாளாளர் ராஜலட்சுமி மற்றும் பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் முன்னிலையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை குருக்கள் ராம் குமார் கணபதி ஹோமம் வளர்த்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் அமர்ந்து சரஸ்வதி ஸ்லோகம் கூறியும் அரிசியில் ஓம், அ, A ஆகியவற்றை எழுதியும் புதிதாக தங்கள் கல்வியை வித்யாரம்பம் மூலம் தொடங்கினர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் உள்ள கே. எம். சி. சீனியர் செகண்டரி பள்ளியில் விஜயதசமி தினத்தையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது. நவராத்திரியையொட்டி கே.எம்.சி., பொதுப்பள்ளி வளாகத்தில் கொலு அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது . விஜயதசமி தினத்தையொட்டி பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கையில் புதிதாக சேர்ந்த மழலையர் மற்றும் மாணவ மாணவிகளை நவராத்திரி கொலுவுக்கு முன் பெற்றோர்களுடன் அமர வைத்து, தானியத்தில் அ, ஆ உள்ளிட்ட எழுத்துக்களை எழுத பழகும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமாக பள்ளி தாளாளர் மனோகரன் கூறினார். பள்ளித்தலைவர் கே. சி. சண்முகம் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் விழாவில் பள்ளி முதல்வர் சீனிவாசன் கற்றல் இனிது என்பது குறித்து பேசி, மாணவர்களை பாராட்டினார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர். 

திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விஜயதசமி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பள்ளி பொருளாளர் ராதாராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். அவினாசி குருக்கள் காமாட்சி தாசர் சாமிகளால் வித்யாரம்பம் பூஜைகள் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com