search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு கத்திகுத்து"

    பிரிந்து சென்ற மனைவியை பார்க்கச் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவரின் மகள் அகிலேஸ்வரி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அகிலேஸ்வரி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக கண்ணன், மாமனார் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனார் கண்ணன், இவரது மனைவி செல்வி (39), உறவினர்கள் பஞ்சு (50), சத்யா (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    முசிறியில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி விட்டு 2 பேர் தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி குடிகாரதெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 25). இவருக்கும் அதே பகுதி ஏவூர் மேலதெருவை சேர்ந்த முருகானந்தம் மற்றும் தாஸ் (25) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முசிறி அய்யம்பாளையம் கடைவீதியில் ஆனஸ்ட்ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகானந்தம் மற்றும் தாஸ் ஆகிய 2 பேரும் ஆனஸ்ட்ராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் விரைந்து சென்று ஆனஸ்ட்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  
    பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள டி.கல்லுப்பட்டி நேருஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது45). இவர் வீடு கட்டும் பணிக்காக ஜல்லி கற்களை குவித்து வைத்திருந்தார். இவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் எதற்காக இங்கே ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளாய்? என கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முனியாண்டி கத்தியால் ராஜாமணியை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த ராஜாமணி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மகன் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.

    உத்தனபள்ளி அருகே முன் விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனபள்ளி அருகே உள்ள தேன் துருகம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ருணப்பா மகன் அருண்குமார் (வயது25). அதே பகுதியை சேர்ந்த மற்றொரு அருண்குமார் (27). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.  

    இந்த நிலையில் நேற்று காலை இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதனை அருண்குமார் நண்பர் மகேஷ் தட்டி கேட்டார். அப்போது திடீர் என கிருஷ்ணப்பா மகன் அருண்குமார் அவர் நண்பர்கள் சிவப்பா, மாதேவப்பா, தருன்குமார், அருண்குமார் ஆகிய 4 பேர் சேர்ந்து மகேஷை சரமாரி தாக்கி மறைத்து வைத்து இருந்த கத்தியால் மகேஷ் கால், தொடை பகுதியில் குத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஒடினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த மகேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து  உத்தனபள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
    திருவிழாவில் நடனமாடிய தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் அடுத்த நீடாமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பரப்பனமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சூர்யா. அதே ஊரை சேர்ந்தவர் முருகையன். கடந்த 3-ந்தேதி அப்பகுதி மாரியம்மன்கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சூர்யா நடனமாடி உள்ளார். இதனை முருகையன் தடுத்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் செந்தில்குமார் வீடு வழியாக முருகையன் சென்றபோது அவரை வழி மறித்த செந்தில்குமார் மற்றும் அவரது மகன் சூர்யா ஆகிய இருவரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாசன் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தை-மகனை தேடி வருகிறார்.

    ×