search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை தந்தம்"

    • சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    • தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து யானை தந்தம் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைத்தொடந்து அங்கு சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 23 கிலோ எடையில், 2 தந்தங்கள் பறிமுதல் இருந்தது. இதைத்தொடர்ந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்து அங்கிருந்த ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்த முருகன் (வயது 34) உள்ளிட்ட 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் 2 பேரையும் ராஜபாளையம் சுங்க இலாகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது முருகன், சுங்க அலுவலக கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 6 கோடி என கூறப்படுகிறது.

    பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில் யானை தத்தங்கள் பதுக்கிய சம்பவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், வினித்குமார் ஆகியோரை போலீசார் இன்று பிடித்து கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • யானை தந்தம், தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் யானை தந்தத்தை விற்று வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    அந்த வாடிக்கையாளரிடம் கும்பலை சேர்ந்த ஒருவன், தன்னிடம் 14 கிலோ எடையுள்ள யானை தந்தம் இருப்பதை உறுதி செய்தான். அதை ரூ.35 லட்சத்துக்கு விற்க ஒப்புக்கொண்டான். இதைத்தொடர்ந்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    அவன் போலீசாரிடம், தான் 1999-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாகவும், சந்தனக்கடத்தல் வீரப்பன் உறவினர்களை தனக்கு நன்கு தெரியும் என்றும், இன்னும் நிறைய யானை தந்தங்களை தன்னால் வரவழைக்க முடியும் என்றும் தெரிவித்தான்.

    அவன் அளித்த தகவலின்பேரில், கும்பலை சேர்ந்த மற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். யானை தந்தம், தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ×