search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி பதவியேற்பு"

    17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார். அவரது தலைமையிலான புதிய மந்திரி சபையும் பதவியேற்றது. மோடி மற்றும் அவரது மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் இன்று பொறுப்பேற்றனர்.

    மோடி தலைமையில் புதிய மந்திரிசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்நிலையில், 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    இந்திய பிரதமர் மோடி அடுத்த மாத துவக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபர் சிறிசேனா உறுதி செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, வெளிநாட்டுப் பயணத்தில் முதல் நாடாக மாலத்தீவு செல்கிறார். ஜூன் மாத துவக்கத்தில் மாலத்தீவு செல்லும் மோடி, அங்கிருந்து இலங்கைக்கு செல்ல உள்ளார். இத்தகவலை இலங்கை அதிபர் சிறிசேனா இன்று உறுதி செய்துள்ளார். 

    டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். அவரை மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர்.

    மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறிசேனா, மோடியின் இலங்கை பயணத்தை உறுதி செய்தார்.

    இலங்கைக்கு இந்திய பிரதமர் மோடி வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவரது வருகையை பெருமையாக கருதுவதாகவும் சிறிசேனா கூறினார். 

    ‘மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் தலை தூக்கி உள்ளது. சில நாடுகளில் உள்நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்’ என்றும் சிறிசேனா கூறினார்.
    நேபாளம், மொரிஷியஸ், பூடான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை நேற்று பொறுப்பேற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த அதிபர்களும் பிரதமர்களும் இந்தியா வந்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து, வங்காளதேசம் அதிபர் அப்துல் ஹமித், மொரிஷியஸ் பிரதமர் பிரவின்ட் குமார், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி அந்நாடுகளுடனான இந்தியாவின் பல்வேறுதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.
    முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மத்திய மந்திரியாக இன்று பதவியேற்றார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். மோடியைத் தொடர்ந்து அவரது மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

    மோடி மந்திரிசபையில் முன்னாள் வெளியறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கரும் இடம் பெற்றுள்ளார். அவரும் இன்று பதவியேற்றார். 

    மோடி அரசில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஜனவரி மாதம் வரை வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றியவர் ஜெய்சங்கர். 2017ல் டோக்லாம் எல்லையில் இந்திய படைகளும், சீன படைகளும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியபோது, போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றினார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் ஜெய்சங்கர் பணியாற்றி உள்ளார். ஓய்வுக்குப் பிறகு டாடா குழுமத்தின் உலகளாவிய பெருநிறுவன விவகாரங்கள் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். 

    அரசுப் பணியில் அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மோடி அரசு அவருக்கு கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றதை, அவரது தாயார் தன் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தார்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். 

    இந்நிலையில் மோடியின் தாயார் ஹீராபென், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவை கண்டுகளித்தார். தன் மகன் மீண்டும் பிரதமராக பதவியேற்றதை பார்த்து, உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. 
    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். அவரது மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகளும் பதவியேற்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். 

    இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

    முதலில் ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா பதவியேற்றார். குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமித் ஷாவுக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷாவைத் தொடர்ந்து, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பிற மந்திரிகளும் பதவியேற்றனர்.
    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். 30-ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின. ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுடெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலை துறை சார்பில், ஜனாதிபதி மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளிலும் அலங்கரிக்கப்பட்டன.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர்.

    பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

    வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
    புதிய அமைச்சரவையில் தனக்கு பதவி வேண்டாம் என அருண் ஜெட்லி கூறிய நிலையில், அவரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமருடன், பல்வேறு அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

    ஆனால், புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தற்போது மத்திய நிதி மந்திரியாக பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு அருண் ஜெட்லியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, 
    அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்ற முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

    உடல் நிலை காரணமாக பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திலும் அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை. கடந்த சில தினங்களாக பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. எனினும், சமீபத்தில் தனது வீட்டில் நிதித்துறை பணிகள் தொடர்பாக, உயர் அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
    மேற்கு வங்கத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாஜக தொண்டரின் குடும்பத்தினர், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். நாளை மாலை ஜனாதிபதி மாளிகையில் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 

    அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்கிறார்கள்.

    மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    இது தவிர மாநில கட்சிகளின் தலைவர்கள், தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல தரப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில், மேற்கு வங்கத்தில் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர் சந்தன் ஷாவின் குடும்பத்தினரும், மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி சென்று பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கான்கிநாரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, சந்தன் ஷா சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதனை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

    மோடியின் வெற்றிக்காக தன் கணவர் உயிரையே கொடுத்திருப்பதாகவும், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் சந்தன் ஷாவின் மனைவி கூறியிருக்கிறார். 
    டெல்லியில் வரும் 30-ம் தேதி மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

    மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுக சார்பில் எம்பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    தமிழகம் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
    ×