search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலாண்மை"

    • கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
    • பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    நாகர்கோவில்:

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 8-வது மேலாண்மை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் மரியவில்லியம் தலைமை தாங்கினார். மாணவி சகாய ரினோஷா வரவேற்றார். விழாவின் அமைப்பு செயலாளர் பேராசிரியை பமிமா விழாவிற்கான அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.

    கல்லூரி பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேசினார். பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.

    விழாவில் மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் போட்டி, படத்தொகுப்பு போட்டி, வினாடி-வினா, மவுன மொழி நாடகம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இணை ஒருங்கிணைப்பா ளர் மாணவர் சேக் சித்தா அர்ஷக் நன்றி கூறினார்.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
    • போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    நாமக்கல்:

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிதல், தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மேலாண்மை மீட்புக்கு ழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

    போலீசாருக்கு பயிற்சி

    நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    3 நாட்கள்

    தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியை அதிரடி கமாண்டோ படை சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழங்கி வருகிறார். இப்பயிற்சியில் 25 பெண் போலீசார் உள்பட 60 போலீசார் பங்கேற்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 30 திட்டப்பகுதிகளில் 11,890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் 1,184 குடியிருப்புகள் முடிவுற்று 997 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு குடியேற்றப் பட்டுள்ளார்கள்.

    பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7689 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6316 கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புதாரர்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன் சரிசெய்ய அதிகாரி களிடம் அறிவுறித்தினார்.

    மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட பவானி சாலை பகுதி திட்டப்பகுதியில் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் 336 குடியிருப்புகள் கட்டும் பணிகளைஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் மற்றும் பெரியார் நகர் திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1072 குடியிருப்புகளை ஆய்வு செய்து குடியிருப்புகளை பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க வீட்டுவசதி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ஆலமரத்து மேடு திட்டப்பகுதியில் ஆய்வு செய்து மக்களிடம் கலந்துரையாடி நிலுவை தொகையினை செலுத்தி விற்பனை பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுருத்தினார்.

    மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டப்பணிகளைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    மத்திய அரசின் தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுழைவு தேர்வு நாளை நடக்கிறது.

    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.சி. (உபசரிப்பு மற்றும் ஓட்டல் மேலாண்மை) படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு -2022 அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந்தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

    சேலம், நாமக்கல்

    இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4/2/2022 தொடங்கி, 3/5/2022 அன்று முடிவடைந்தது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் திரளானோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு கணினி வழியாக நாளை (18-ந்தேதி) நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, ேகாவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சேலம், நாமக்கல் மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கோவையில் உள்ள மையத்தில் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற உள்ளது.

    அனுமதி அட்டை

    தேர்வுக்கான அனுமதி அட்டைகள் என்.டி.ஏ. இணையதளத்தில் வழங்கப்–பட்டுள்ளன. விண்ணப்ப–தாரர்கள் அனுமதி அட்டை–களை பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வேண்டும். மேலும் அதை சரிபார்த்து கொள்ளுமாறும், தேர்வு குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக படிக்குமாறும் என்.டி.ஏ. அறிவுறுத்தி உள்ளது.

    அனுமதி அட்டை தபால் மூலம் அனுப்பப்படாது. விண்ணப்பதாரர் அனுமதி கார்டை சிதைக்கவோ அல்லது அதில் உள்ள எந்தப் பதிவையும் மாற்றவோ கூடாது. அவற்றின் நகலை எதிர்கால குறிப்புக்காக நல்ல நிலையில் வைத்திருக்குமாறு என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

    • ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தாளவாடி, ஜூன்.16-

    ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க ப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.

    மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×