என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுப்பழக்கம்"
- தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார்.
- நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வெமுலா பள்ளியை சேர்ந்தவர் நல்லப்ப ரெட்டி (வயது 47). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் தனியார் கிரானைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.
கிருஷ்ணவேணியின் தங்கை சுனிதாவுக்கும், நந்தியாலா மாவட்டம் ராவணூரை சேர்ந்த ரமேஷ் ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானார்.
இதனால் ரமேஷ் ரெட்டியையும், சுனிதாவையும், நல்லப்பரெட்டி தான் வேலை செய்யும் கிரானைட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்து, தங்களுடனே தங்க வைத்துக் கொண்டார்.
ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானது மட்டும் இன்றி, தான் சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்திலும் இழந்து வந்தார்.
தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார். மதுப்பழக்கத்தை கைவிடும் படி நல்லப்ப ரெட்டி, ரமேஷ் ரெட்டியிடம் வற்புறுத்தி வந்தார்.
இதனால் நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் வீட்டுக்கு வந்த ரமேஷ் ரெட்டி அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லப்ப ரெட்டி, அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகள் பூஜிதா ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் 3 பேரின் உடல்களும் தீப்பற்றி எரிய தொடங்கியது. 3 பேரும் அலறியபடி ஓடினர்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைக்காக கர்னூல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நல்லப்பரெட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் கிருஷ்ணவேணி, பூஜிதா ஆகியோர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரணமாக உயிர் பிழைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர் ஈரக்கஞ்சையன், கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது 30) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மது பழக்கத்தை நிறுத்துமாறு முத்துமாரி பலமுறை கணவரிடம் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை.
2 மாதத்துக்கு முன்பு இந்தப் பிரச்சினையில் கணவரை மிரட்டுவதற்காக முத்துமாரி பிளீச்சிங் பவுடரை கலந்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரண மாக உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் மனைவி தற்கொலைக்கு முயன்றும் ஈரக்கஞ்சையன் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 9-ந் தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த தின்னரை எடுத்து முத்துமாரி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள ஆத்திக்குளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜமுருகன் (38). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த ராஜமுருகன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியைச் சேர்ந்தவர் மிக்கேல் ஸ்டார்பின் (வயது 35). இவர் மீன் பிடித்தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி மேரி மஜோரா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.
மிக்கேல் ஸ்டார்பினுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். அவரது மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு உருவானது.
இந்தநிலையில் நேற்றும் இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரவு மிக்கேல் ஸ்டார்பின் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தொட்டில் கயிறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி குளச்சல் போலீசில் மேரிமஜோரா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து மிக்கேல் ஸ்டார்பின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்