search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர் போராட்டம்"

    வாணியம்பாடியில் கழிவறையில் மாணவியை பூட்டிச் சென்றதால் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 220-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த நதீம்பாபு என்பவரது மகள் ஷாஜீயா (வயது 5). 1-ம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று பள்ளிக்கு சென்ற ஷாஜீயா மாலை உடல்உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றார்.

    அப்போது பள்ளி நேரம் முடிவடைந்ததால் ஆசிரியர்கள் வகுப்பறையை பூட்டிவிட்டு பின்னர் சிறுமி கழிவறையில் இருப்பது தெரியாமல் கழிவறையையும் பூட்டிச் சென்று விட்டனர்.

    சிறிது நேரம் கழித்து சிறுமி கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் வெளிபக்கம் தாளிட்டு இருந்ததால் சிறுமியால் கதவை திறக்க முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அனைவரும் பள்ளியை விட்டு சென்று விட்டதால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் செய்வதறியாமல் சிறுமி அழுது கொண்டிருந்தார்.

    வெகு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் பதறிய பெற்றோர் பள்ளிக்கு வந்து சிறுமியை தேடிபார்த்தனர்.

    அப்போது கழிவறையில் இருந்து சிறுமியின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கழிவறையை திறந்து பார்த்தனர். அங்கு சிறுமி நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சிறுமியை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    இன்று காலை பள்ளி திறக்கப்பட்டதும் அங்கு திரண்டு வந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியர்களின் கவனகுறைவால் சிறுமி கழிவறையில் சுமார் 1 மணி நேரம் தவித்ததாகவும், இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பெற்றோரிடையே பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    காரியாபட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தினார்கள்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்குள்ளும், வீட்டைச் சுற்றியும் தண்ணீர் சூழ்ந்தது. அந்த கிராம மக்கள் காரியாபட்டி தாசில்தார் ராமநாதனிடம் முறையிட்டனர். தாசில்தார் பார்வையிட்டு அந்தந்த வீடுகளுக்கு முன்பு கிராவல் மண் அடிக்க கூறியுள்ளார். உடனே அவரவர் சொந்த செலவில் கிராவல் மண் அடித்துக் கொண்டார்கள்.

    சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. பள்ளியை சுற்றி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்து பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டம் செய்தனர். இந்த தகவல் அறிந்து வந்த தாசில்தார் ராமநாதன், சமத்துவபுரம் மக்களிடம் பேசி உடனடியாக பள்ளியை சுற்றி கிராவல் மண் அடிக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது, காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் அவர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பின்னர் தாசில்தார் ராமநாதனின் முயற்சியால் உடனடியாக பள்ளி வளாகத்தில் மண் அடித்து சீரமைக்கப்பட்டது. இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    ×