என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புத்தக வெளியீட்டு விழா"
- நீதித்துறை போட்டி தேர்வு புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
- மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ராஜு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மதுரை
மதுரை சட்ட நூல் எழுத்தாளர் கே. சுவாமிராஜ் எழுதிய 'நீதித்துறை போட்டி தேர்வு' ஆங்கில புத்தக வெளியீட்டு விழா, மதுரை ஓட்டலில் நடந்தது. மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் ஆண்டிராஜ் தலைமை தாங்கினார். மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க செயலாளர் அன்பரசு புத்தகத்தை வெளியிட, சிதம்பரம் வக்கீல் ஜெயச்சந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வக்கீல் லீமா, ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ராஜு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
- பாலமுத்தழகு குழுமத்தின் பெஸ்ட் மணிகோல்டு நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
- திண்டுக்கல் ஐ.லியோனி நூலை வெளியிட அதனை பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெற்றுக்கொண்டார்.
உத்தமபாளையம்:
சென்னையில் உள்ள மியூசிக் அகடாமியில் பாலமுத்தழகு குழுமத்தின் பெஸ்ட் மணிகோல்டு நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு பாலமுத்தழகு குழுமத்தின் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி வெளியிட்டார். அதனை பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெற்றுக்கொண்டார்.
விழாவில் லியோனி பேசுகையில், பாலமுத்தழகு குழுமம் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இது பாராட்டுக்குரியது என்றார். நிகழ்ச்சியில், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் அயலக தமிழ்த்துறைத் தலைவர் குறிஞ்சிவேந்தன், பாலசாகித்ய புரஸ்கார் விருதாளர் ராணி பத்திரிகை ஆசிரியர் மீனாட்சி, ஓசூர் தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் எல்லோராமணி, தேசிய செட்டியார்கள் பேரவை மாநில கவுரவ தலைவர் வக்கீல் ஜெயராமன், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கவிஞர் தியாரூ வரவேற்று பேசினார். பேராசிரியர் நசீமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெஸ்ட் மணிகோல்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்