search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்லாந்து"

    • நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து நாடு நடவடிக்கைகளை எடுத்தது.
    • பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    மாஸ்கோ:

    அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷியா அந்நாடு மீது போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

    இதற்கிடையே நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து நாடு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பில் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்தது.

    பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்சில் நடந்த விழாவில் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டது. இதன்மூலம் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் ரஷியா பகிரும் எல்லை இரட்டிப்பாகி உள்ளது.

    பின்லாந்து, ரஷியாவுடன் 1340 கி.மீ கிழக்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளதால் நேட்டோ படைகள் தேவைப்பட்டால் பின்லாந்து எல்லைக்கு அனுப்பப்படலாம்.

    இது ரஷியாவுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறது. நேட்டோவில் பின்லாந்து இணைந்ததற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு கூறும் போது, 'பின்லாந்தை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டதால் உக்ரைன் போர் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    பெலாரஸ் நாட்டின் போர் விமானங்கள் எங்களது அணு ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல் நடத்தும் வகையில் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார்.

    இதன்மூலம் பின்லாந்து மீது ரஷியா போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகள் தீவிரமாக உள்ள நிலையில் பின்லாந்து மீதும் தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும் பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ உள்ளது.
    • இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    பிரெசெல்ஸ்:

    உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று இணைந்துள்ளது. நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.

    நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ளதால் அந்நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.

    உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.

    இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பின்லாந்து வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு அதிபர் சவுலி நீனிஸ்டோவை சந்தித்து உணவருந்தினார். #TrumpPutinmeeting #HelsinkiMeeting
    ஹெல்சின்கி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்புக்கு பின்னர், உலகம் உற்றுநோக்கும் மற்றொரு நிகழ்வாக டிரம்ப் - புதின் சந்திப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா - ரஷியா இடையே இன்னும் பல விஷயங்களில் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் - புதின் சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இன்னும் சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச இருக்கின்றனர். இதற்கான, ஹெல்சின்கி வந்துள்ள டிரம்ப், பின்லாந்து அதிபர் சவுலி நீனிஸ்டோவை இன்று சந்தித்தார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது சவுலியுடன் டிரம்ப் ஒன்றாக காலை உணவு அருந்தினார்.

    ஒன்றுபட்ட சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்த இடமான பின்லாந்தில் தற்போது ரஷியா - அமெரிக்கா சந்திப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் அடுத்த மாதம் ஜூலை 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். #TrumpPutinSubmmit #HelsinkiSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே ரஷியாவும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷிய உளவுத்துறை வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

    எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இரு நாடுகளும் மறுத்து வருகின்றன. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், மூன்றாம் நாட்டில் சந்திப்பு நடத்த இரு தலைவர்களும் தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் - புதின் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.

    இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ள இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த ஜி-5 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். ஆனால், பின்லாந்தில் நடக்க இருக்கும் இந்த சந்திப்பு விரிவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 12-ம் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேசிய டிரம்ப், வரலாற்றில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×