search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழைய ரூபாய் நோட்டுகள்"

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    கோயம்புத்தூரில் ரூ.1 கோடி மதிப்பிலான கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் பிடிபட்ட சில நாட்களிலேயே இன்று ரூ.60 லட்சம் மதிப்புடைய பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் குடோன் அமைத்து கள்ளநோட்டு அச்சடித்து சமீபத்தில் அக்கும்பல் போலீசில் சிக்கிய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் நாமக்கலில் இருந்து வருவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துள்ளார்.

    நீண்ட நாட்களாக வீடு பூட்டியிருந்த நிலையில், அவர்கள் திரும்பி வராததால் குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து வீட்டை சோதனையிட்டதில், ரூ.60 லட்சம் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடந்துள்ளன.

    பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூ.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். #demonetisednotes
    மும்பை:

    மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பழைய ரூபாய் நோட்டுகளுடன் சில தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 4.93 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்துடன் தங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் எனவும், பணத்தை பரிமாற்றம் செய்யவே இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    2016-ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு செய்தது முதல் சட்ட விரோதமாக பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. #demonetisednotes

    ×