search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த போலீஸ் பாதுகாப்பு"

    • குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
    • வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 74 -வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை தீவரப்படுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு பஸ் நிலையம், ஜி. எச். ரவுண்டானா, கருங்கல்பாளையம், காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பார்க் உள்பட மாநகர் பகுதி முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதே போல் கோபி, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ரெயில் நிலையம் நுழைவாயிலில் பயணிகள் உடமைகள் தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பயணிகள் உடமை பரிசோதிக்கப்படுகிறது.

    சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் பெயர், முகவரி, செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகின்றனர்.

    இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ெரயில்களையும் ெரயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயில் நிலையங்களில் கேட்பாராற்று கிடக்கும் பொருட்கள் இருந்தால் அதனை தொட வேண்டாம். அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நாளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசார் அலுவலர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து தியாகிகளை கவுரவப்படுத்துகிறார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள்.

    • எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கல் நார்சம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாடுவிடும் விழா நடந்தது. இதில் பெரிய கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த முஷாரப் (வயது 19) என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

    அந்த நேரத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த முஷரப் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து வாலிபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல் வீச்சில் சப் கலெக்டர் மற்றும் போலீசார் வாகனங்கள் தாக்கப்பட்டன.

    இறந்த முஷரப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு உதவி கலெக்டர் பானு தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று வாலிபரின் உடன் பெரிய கம்மியம்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

    திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று வாலிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேவராஜி எம்எல்ஏ இறந்த வாலிபர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.மேலும் வாலிபர் உடலை இடுகாடு வரை தன் தோளில் சுமந்து சென்றார்.நகர செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் வாலிபர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையொட்டி அந்த பகுதியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
    • இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    ஈரோடு:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

    இதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றன.

    இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. உடனடியாக இந்த தடை அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    ஈரோடு காவிரிரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் பச்சபாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கும், இந்து முன்னணி கட்சி அலுவல கத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம் கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சத்தியமங்கலம் கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர்.

    திருப்பூரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தல் மனு தாக்கலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 2 மாதத்திற்கு முன் நடைபெற்றது. அப்போது தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் திரண்டு வந்ததால் தள்ளு முள்ளு உருவானது. போலீசாருடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கு திரண்டு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். அங்கு பதட்டம் நிலவியதால் வேட்பு மனு தாக்கல் ஒத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. இதனை தொடர்ந்து திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முன் பல்வேறு கட்சியினர் திரண்டு இருந்தனர்.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்பகுதியில் பேரிகார்டு அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட அளவிலானவர்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    சுதந்திர தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கோவை:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தீவிரவாதிகள் ஊடுருவி சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர் குலைக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனையடுத்து தமிழகத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் இடம், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    கோவையில் சுதந்திர தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை சோதனை செய்து வருகின்றனர்.மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களை மாவட்டத் தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

    ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக் கின்றனர்.மேலும் பிளாட் பாரங்களில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    ×