search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி சாகுபடி"

    • வயல்களில் நீர் தேங்காமல் வடிய வைத்திட விவசாயி களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
    • கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் எள் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் மற்றும் வலங்கை மான் வட்டாரங்களில் எதிர்பாராமல் பெய்த கோடை மழையினால் பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் எள் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.

    இந்த வயல்களை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பார்வையிட்டு பயிர் நிலவரங்களை ஆய்வு செய்தார்.

    வயல்களில் நீர் தேங்காமல் வடிய வைத்திடவும், வாடல் நோய் தாக்கத்தினை குறைத்திடவும், விவசாயி களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேஸ்வரன், சூரியமூர்த்தி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரவி மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியைச் சார்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • குறிப்பாக பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், கொண்டல், மங்கைமடம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது பருத்தியில் களை வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக நெல், உளுந்து, கடலை சாகுபடியில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்த நிலையில், விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி ஓரளவிற்கு லாபத்தை ஈட்டி தந்தது.

    இதனால் கோடையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

    இதனிடையே கடந்த ஆண்டு பருத்தி விலை கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டதால் அதிக லாபம் கிடைத்தது. குறிப்பாக பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது.

    மேலும் கடற்கரையை ஒட்டி உள்ள நிலங்களில் பருத்தி நன்றாக விளையக்கூடியது.

    அதன் காரணமாகவே விவசாயிகள் பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

    இதுவரை பூச்சி தாக்குதல் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் விலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

    ஏனென்றால் உலக அளவில் இந்தியாவில் விளையக்கூடிய பருத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    பருத்தி சாகுபடி செய்யும்போது திடீரென கனமழை பெய்தால் பருத்தி காய்கள் கொட்டிவிடும்.

    பருத்தி சாகுபடியிலும் சில இடர்பாடுகள் இருப்பதால் பருத்தி சாகுபடிக்கு காப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர்
    • அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

    கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதும், சம்பா மற்றும் குறுவை, தாளடி நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் பிறகு உளுந்து பயறு மற்றும் வரப்பு உளுந்து சாகுபடிகளை செய்து வருகின்றனர்.

    இத்தகைய சாகுபடி பணிகளுக்கு பிறகு, மாற்று பயிராக பருத்தி சாகுபடி பணிகளை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    என்றாலும், ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு முதல் அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

    அதேபோல, நடப்பு ஆண்டில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள், வயல்களில் பருத்தி பயிர்கள் இட்டனர்.

    அப்போது, சிறு பயிர்களாக பருத்தி பயிர்கள் இருந்த போது, பருவம் தவறிய மழையால், அவைகள் சேதமாயின.

    அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

    தற்போது, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் எந்திரம் மூலம் பாத்திகட்டும் பணிகள் மற்றும் களைகள் அகற்றும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் பருத்தி சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பருத்தி விளைச்சல் குறைந்ததன் விளைவாக தற்போது ஒட்டுமொத்த ஜவுளி துறையும் முடங்கியுள்ளது.
    • பருத்திக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து விலை சரியும்போது அதை அரசே கொள்முதல் செய்யலாம்.

    குடிமங்கலம்:

    தொடர் நஷ்டம், விலைவாசி உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விவசாயிகள் மெல்ல மெல்ல பருத்தி விவசாயத்தை கைவிட்டு வேறு பயிர்களுக்கு மாற துவங்கினர்.பருத்தி விளைச்சல் குறைந்ததன் விளைவாக தற்போது ஒட்டுமொத்த ஜவுளி துறையும் முடங்கியுள்ளது.

    ஜவுளி துறைக்கு மூலப்பொருளான பருத்தி விவசாயத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை பருத்தி விவசாயத்தின் பக்கம் திருப்பலாம். பருத்திக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து விலை சரியும்போது அதை அரசே கொள்முதல் செய்யலாம். பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பருத்தி விவசாயத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
    • மரபணு மாற்றப்பட்ட விதையால் விதை அழிந்து விட்டது.

    உடுமலை :

    பருத்தி,நூல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்ததால் ஒட்டு மொத்த ஜவுளி துறையும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதை சமாளிக்க அரசு வெளிநாட்டில் இருந்து பருத்தி இறக்குமதி செய்கிறது. தற்போது அங்கும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.உள்நாட்டில் பருத்தி சாகுபடி அதிகரிக்காவிட்டால் ஒட்டுமொத்த ஜவுளி துறையும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

    உலக அளவில் நம் ஏற்றுமதி வாய்ப்பு பறிபோய் விடும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அரசு பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொழிலாளர்கள் முன்பு 10 மணி நேரம் வேலை பார்த்தனர். தற்போது 6மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கின்றனர். கடின வேலை என்பதால் ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. மரபணு மாற்றப்பட்ட விதையால் விதை அழிந்து விட்டது. தற்போது ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு வெளியில் தான் வாங்க வேண்டும். செலவு அதிகரிப்பால் பருத்தி சாகுபடியை தவிர்த்து வருகிறோம். எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளை அரசு பாதிக்கும் மேல் இறக்குமதி செய்கிறது.

    இதனுடன் பருத்தியும் இணைந்துள்ளது. விலை உயராமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. தொடர் நஷ்டம் வருவதால் நாங்களும் உற்பத்தியை குறைக்கிறோம்.இதனால் ஒட்டுமொத்த தொழில்துறையும் முடங்கியுள்ளது. அரசு தன் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தாலே பருத்தி சாகுபடி உயர்ந்து விடும் என்றனர்.

    • பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், தண்ணீர் சுற்றுகள் குறைவு.
    • நூற்பாலை நிறுவனங்களின் தேவைக்கும், பருத்தி உற்பத்திக்கும் பெரிய இடைவெளி உள்ளது.

    குடிமங்கலம் :

    உடுமலை சுற்றுப்பகுதியில் பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், தண்ணீர் சுற்றுகள் குறைவு, தொழிலாளர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், நிலையில்லாத விலை உள்ளிட்ட காரணங்களால் பருத்தி சாகுபடி பரப்பை விவசாயிகள் கைவிட துவங்கினர்.இதனால் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி பரப்பு சில ஏக்கராக சரிந்தது.

    கடந்த 2008ல் மிக நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு நல்ல விலை கிடைத்ததால் குடிமங்கலம் வட்டாரத்தில், 100 ஏக்கருக்கும் குறைவாக பருத்தி சாகுபடியானது.இதே போல் 2012-13ம் ஆண்டில் பருவமழை மற்றும் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் போது 200 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்தனர். அப்போது மத்திய அரசின் சிறப்பு மானியத்திட்டமும் செயல்படுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பருத்திக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

    நாமக்கல், கொங்கணாபுரம் உள்ளிட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில், பருத்தி அதிக விலைக்கு விற்பனையானது.குறிப்பாக மிக நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு, அதிகப்பட்சமாக குவிண்டால் 10,399 ரூபாய், நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு அதிகப்பட்சமாக குவிண்டால் 12,900 ரூபாய் வரையும் விலை கிடைத்தது.இதனால் நடப்பு சீசனில் பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    நூற்பாலை நிறுவனங்களின் தேவைக்கும், பருத்தி உற்பத்திக்கும் பெரிய இடைவெளி உள்ளது. இதனால் இச்சாகுபடி பரப்பை அதிகரிக்க முன்பு மத்திய அரசு சார்பில் மானியத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அத்தகைய சிறப்புத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். விதை, இடுபொருட்களை மானியத்தில் வழங்குவதுடன், உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறை வாயிலாக வழங்க வேண்டும்.மேலும் அருகிலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் மத்திய பருத்திக்கழகம் வாயிலாக நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்.

    இதனால், நூற்பாலை நிர்வாகத்தினர், விவசாயிகள் என இருதரப்பினரும் பயன்பெறுவார்கள்.விவசாயிகள் கூறுகையில், பருவமழை சீராக பெய்ததால் நடப்பு சீசனில், பருத்தி சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தொழிலாளர் பற்றாக்குறையே இச்சாகுபடியில் முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணியாளர்களை சாகுபடி பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசு உத்தரவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • 6 மாதமாக பஞ்சு, நூல் விலை உயர்வால் பருத்திக்கு வரலாறு காணாத விலைகிடைத்தது.
    • நிலக்கடலை விவசாயிகள் சிலர் பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளனர்.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், அந்தியூர், கோபி உள்ளிட்ட இடங்களில் 15 முதல் 20 ஆயிரம் ஏக்கர் வரை நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் தான் நிலக்கடலை பயிரிடப்படும் என்ற நிலையில் பருவமழையை கணித்து, எதிர்பார்த்து தான் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர்.மே மாதம் சாகுபடி செய்த விவசாயிகளின் தோட்டங்களில் தற்போது நிலக்கடலை பயிர் பூத்து, காயாக உருமாறும் நிலைக்கு வந்துள்ளது. இவை செப்டம்பரில் அறுவடை செய்யப்படும்.

    சில இடங்களில் உள்ள விவசாயிகள் இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் சாகுபடியை துவக்குவர். இது நவம்பர் மாதம் அறுவடைக்கு தயாராகும். விளைவிக்கப்படும் நிலக்கடலை சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் ஏலத்தில் விற்கப்படும்.

    இந்நிலையில்கடந்த 6 மாதமாக பஞ்சு, நூல் விலை உயர்வால் பருத்திக்கு வரலாறு காணாத விலைகிடைத்தது.அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் கூட அதிகபட்சம், கிலோ பருத்திக்கு 100 முதல் 140 ரூபாய் வரை கிடைத்தது.

    இந்த விலை நீட்டிப்பு தொடரும் என்ற எதிர்பார்ப்பில் நிலக்கடலை விவசாயிகள் சிலர் பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளனர் என கூறப்படுகிறது. இது குறித்து வேளாண்மை துறையினர் கூறுகையில்,நிலக்கடலை சாகுபடி பரப்பு குறைந்திருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பு குறித்த துல்லியமான விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரம் இந்த வாரம் தெரிய வரும் என்றனர்.

    சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில்,கடந்தாண்டு(2021) 4,000 மெட்ரிக் டன் நிலக்கடலை விற்பனை செய்யவும், 40 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யவும் விற்பனை வணிகத்துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த இலக்கை எட்டி விட்டோம். நடப்பாண்டு 4,500 மெட்ரிக்., டன் நிலக்கடலை விற்பனை செய்யவும் ரூ. 48 கோடிக்கு வர்த்தகம் செய்யவும் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏல விற்பனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

    • சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
    • நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.

    உடுமலை:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டு வந்தது.பி.ஏ.பி., மண்டல பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பருத்தி சாகுபடியை விவசாயிகள் கைவிடத்துவங்கினர்.கடந்த 2000ம் ஆண்டுக்குப்பிறகு, பருத்தி சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்டு, மக்காச்சோள சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.

    பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், கடந்த 2008ல் நூற்பாலை நிர்வாகத்தினர் ஒப்பந்த சாகுபடி முறையில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கமளித்தனர்.அந்த ஆண்டு பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு 100 ஏக்கர் பரப்பு வரை பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.பின்னர், மிக நீண்ட இழை பருத்தி மற்றும் நீண்ட இழை பருத்தி ரகங்களுக்கு நல்ல விலை கிடைக்க தொடங்கியது.இது விவசாயிகளை பருத்தி சாகுபடியை நோக்கி திரும்ப செய்தது.கடந்த 2009ல் உடுமலை பகுதியில் பரவலாக 200 நாட்கள் வயதுடைய மிக நீண்ட இழை பருத்தி, 150 நாட்கள் வயதுடைய நீண்ட இழை பருத்தி ரகம் பயிரிடப்பட்டு ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்தது.

    மிக நீண்ட இழை பருத்திக்கு ஒரு குவிண்டாலுக்கு 9 ஆயிரம் ரூபாயும், நீண்ட இழை பருத்தி 6 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது. நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.கடந்தாண்டு பருத்தி சாகுபடி பரப்பு குறைவாகவே இருந்தது. ஆனால்அனைத்து ரக பருத்திக்கும் நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஆர்வம் பருத்தி சாகுபடிக்கு அதிகரித்துள்ளது.காரிப் பருவம் மற்றும் வரும் ஆகஸ்டு மாதத்தில் துவங்கும் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கும், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வேளாண்துறை வாயிலாக பருத்தி சாகுபடிக்கு ஊக்கமளிக்க வேண்டும்.இதனால் பருத்தி வரத்து அதிகரித்து நூற்பாலைகளின் தேவையில் நிலவும் பற்றாக்குறையை சிறிது சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×