search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலை துறை"

    • புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
    • சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன

    இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).

    இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது;

    அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை திருடி செல்வது அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
    • மதுபோதை ஆசாமிகள் திருட்டுகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர்-புள்ளம்பாடி, முடி கொண்டான்-கல்லக்குடி, கீழ காவட்டாங்குறிச்சி-கீழப்பழுவூர், திருமானூர்-ஏலாக்குறிச்சி ஆகிய சாலைகளில் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகைகள், எச்சரிக்கை பலகைகள் சமீபத்தில் திருட்டுப் போனது. இதேபோன்று கிராம சாலைகளில் வைக்கப்பட்ட சிறிய எச்சரிக்கை பலகைகளும் காணாமல் போயின ஆகவே அந்த இடங்களில் பலகை இல்லாமல் சட்டங்களாக அவை காட்சியளிக்கின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டி கள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.

    இந்த எச்சரிக்கை மற்றும் பெயர் பலகைகள் அலுமினியத்தால் ஆனவை. இதனை மர்மநபர்கள் குறிவைத்து திருடிச் செல்வது நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருடர்கள் சிக்கவில்லை. தொடக்கத்தில் அந்த பெயர் பலகைகள் காணாமல் போனபோது காற்றில் விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது.

    ஆனால் பல்வேறு இட ங்களில் மாயமானதால் இது திட்டமிட்ட திருட்டு என்பது உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத, சி.சி.டி.வி. கேமரா வசதி இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் இந்த பலகைகள் திருடப்பட்டுள்ளது. மதுபோதை ஆசாமிகள் இது போன்ற திருட்டுகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த வகை திருட்டு புதுவிதமாக இருப்பதாக காவல்துறையினரும் நெடுஞ்சாலை துறையினரும் தெரிவித்தனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை திருடி செல்வது அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

    • நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் பகுதியில் சாலையோரம் படவேடு செல்லும் இடத்துக்கு வழிகாட்டி பலகை சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதனை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    லோக் ஆயுக்தா மசோதாவில் அரசு ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது என்ற தனிப்பிரிவை சேர்த்தன் பின்னணி தற்போது தெளிவாகிறது என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். #IncomeTaxRaid #MKStalin
    சென்னை:

    தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனம் ஆகியவற்றில் சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் அரசு ஊழல் செய்திருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    நெடுஞ்சாலை திட்டங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. 

    இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலங்கோல அ.தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும் அவருடைய பினாமியுமான செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை ரெய்டும், அங்கு கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரொக்கப்பணமுமே சாட்சி



    தன்னுடைய உறவினர்கள், பினாமிகளுக்கு மட்டும் நெடுஞ்சாலைத் துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கி விட்டு,வலிமைமிக்க லோக் ஆயுக்தா அமைப்பில் “காண்டிராக்டுகளை விசாரிக்கக் கூடாது”என்ற தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி நடுங்கி ஏற்படுத்தியதன் பின்னணி தற்போது தெளிவாகிறது

    கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதைய வருமான வரித்துறை  வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடைபெற தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் கஜானாவில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

    என ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
    ×