search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத்தடி நீர்மட்டம்"

    • பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.
    • கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அங்கு குறைந்துள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் கிடைக்க பொதுமக்கள் சுமார் 5 நாட்கள் வரை காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. 5 ஆயிரம் லிட்டர் டேங்கர் குடிநீர் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது

    இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.

    இதே நிலை நீடித்தால் கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பெரும் பணக்காரர்கள் கூட உடற்பயிற்சி மையம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கழிவறைகளிலும் குளித்து வருகின்றனர்.

    அதே நிலை விரைவில் ஐதராபாத்தில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சராசரியாக 0.10 மீட்டர் அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • இந்த ஆண்டில் ஜூலை-ஆகஸ்டு மாத புள்ளி விவரங்களின் அடிப்படையில் 0.62 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. பொதுவாக இக்காலக் கட்டத்தில் குறைவான மழைப்பொழிவு தான் இருக்கும். அக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அதனை தொடர்ந்து அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்திற்கு போதுமான அளவு மழையை கொடுப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் சென்னையில் பெய்த மழையின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நீர்மட்டம் எவ்வளவு உயர்ந்து உள்ளது என்ற விவரத்தை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் திரு.வி.க. நகர் மண்டலத்தில் தான் அதிகபட்சமாக 1.74 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    ஜூலை மாதத்தில் 7.59 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் இருந்த நிலையில் ஆகஸ்டில் 5.85 மீட்டராக குறைந்து உள்ளது. 2 மாதத்தையும் ஒப்பிட்டு சராசரியாக பார்க்கும் போது 1.74 மீட்டர் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து உள்ளது. அம்பத்தூரில் சராசரி நீர்மட்ட அளவு குறைந்துள்ளது. 6.70 மீட்டர் அளவு குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சராசரியாக 0.10 மீட்டர் அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டில் ஜூலை-ஆகஸ்டு மாத புள்ளி விவரங்களின் அடிப்படையில் 0.62 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி ஜூனில் இருந்து 544.7 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது 66 சதவீதம் கூடுதல் மழையாகும். திரு.வி.க.நகரை தொடர்ந்து கோடம்பாக்கம் 1.41 மீட்டர் அளவில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதையடுத்து தேனாம்பேட்டை மண்டலம் 1.14 மீட்டராக பதிவாகி உள்ளது. குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நீடித்து வருபவதே நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும்.
    • பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டதால் நிலத்தடி நீர் மட்டம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஜனவரி மாதம் மழை பதிவாகவில்லை. பிப்ரவரி மாதம் மட்டும் 7.75 மி.மீ., அளவுக்கு மட்டும் மழை பதிவாகியுள்ளது.

    மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களை உள்ளடக்கிய கோடை பருவத்தில் 135.10 மி.மீ., என்ற இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்தது. மார்ச் மாதம் 27.34 மி.மீ., - ஏப்ரல் மாதம் 23.53 மி.மீ., - மே மாதம், 105.17 மி.மீ., என 156.04 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.

    ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவத்தில் கடந்த 2 மாதங்களில் மழை ஏமாற்றி விட்டது. இம்மாதமும் பருவமழை போக்கு காட்டி க்கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் 22 மி.மீ., அளவுக்கு பதிவாக வேண்டிய மழை 14.73 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.

    ஜூலையில் 27.10 மி.மீ., அளவுக்கு இருக்க வேண்டிய மழை 12.76 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. இம்மாத (ஆகஸ்டு) மாதத்தின் இயல்பான மழை அளவு 31.70 மி.மீ., ஆனால் நேற்று மாலை வரை 6.24 மி.மீ., அளவுக்கு மட்டும் பதிவாகியுள்ளது.

    ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மழையளவு குறைந்ததால் வறட்சி மெதுவாக தலைகாட்ட துவங்கி விட்டது. கோடை பருவம் விடைபெற்று 3 மாதமாகியும், வெப்பத்தாக்கம் குறையாமல் கொளுத்தி க்கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.

    இருப்பினும் இப்படியே மழை தலைகாட்டாமல் இருந்தால், வறட்சியின் பிடியில் சிக்க வேண்டியிருக்கும். கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வறட்சியை நெருங்கிவிட்டன. ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டில் 45 மி.மீ., மழை பதிவானது. இந்தாண்டு 30 மி.மீ., மழை குறைந்துபோனது.

    ஜூலையில் அதிகபட்ச அளவாக கடந்தாண்டு 68.77 மி.மீ., பதிவாகியிருந்தது. இந்தாண்டு 12.75 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2017ம் ஆண்டு மழை அளவு வெகுவாக குறைந்து போயிருந்தது.அடுத்தபடியாக இந்தாண்டு தென்மேற்கு பருவத்தில் மழை அளவு குறைந்து போயுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை மழை வழக்கம் போல் பொய்த்துவிட்டது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஏமாற்றிவிட்டது. இப்பருவ மழை நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு மிக முக்கியமானது. தென்மேற்கில் மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்ட பின்னரே வடகிழக்கு பருவத்தில் நிலத்தடி நீர் உயரும். இதேநிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் மட்டம் சரிவது மட்டுமல்ல, கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களின் நீர் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
    • ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஏழு குளங்கள் ஏற்படுத்தப்பட்டு பழமை வாய்ந்த பாசன திட்டமாக உள்ளது.இக்குளங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து அரசாணை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டு குளங்கள் நிரப்பப்படுகின்றன.

    இத்திட்டத்தில் உள்ள ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், வலையபாளையம் குளம் ஆகிய குளங்களின் வாயிலாக 2,786 ஏக்கர் நேரடி பாசனமும், பல ஆயிரம் ஏக்கர் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் உதவியாக உள்ளது.இக்குளங்களின் நீர்த்தேக்க பரப்பை ஆக்கிரமித்து, பலர் விவசாயம் செய்து வருகின்றனர். இத்தகைய ஆக்கிரமிப்புகளால் நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களின் நீர் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

    நீர் தேக்க பரப்பும் படிப்படியாக குறைந்து கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. பருவமழை குறைவு உட்பட காரணங்களால் ஏழு குளங்களில் நிரப்பபடும் தண்ணீரை அடிப்படையாக கொண்டே அப்பகுதியில் கரும்பு, தென்னை உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நீர் தேக்க பரப்பு ஆக்கிரமிக்கப்படுவதால் குளத்தில் தண்ணீர் தேக்கப்படுவது பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் அப்பகுதியில் குறைந்து வருகிறது.இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த 2014ல் 174 ஏக்கர் நீர் தேக்க பரப்புள்ள ஒட்டுக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.

    குளத்தின் நீர்த்தேக்க பரப்பில் ஆக்கிரமித்து நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் அகற்றப்பட்டன. கடந்த ஆண்டும் சில குளங்களில், ஆக்கிரமிப்பு அகற்ற, முதற்கட்ட பணிகள் துவங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது.பழமை வாய்ந்த பாசன திட்டத்தையும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், அனைத்து குளங்களிலும் பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை சார்பில், இப்பணிகளை உடனடியாக துவக்க விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    ஏழு குளங்களுக்கு தளி கால்வாய் வழியாக நீர் செல்கிறது. தளி கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ளது. கால்வாயிலிருந்து குளங்களுக்கு நீர் செல்லும் வழித்தடம் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும் செடி, கொடிகள் முளைத்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது.மேலும் ஒவ்வொரு குளமும் நிரம்பியதும் உபரிநீர் எளிதாக மற்ற குளத்திற்கும், பெரியகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களிலிருந்து உபரி நீர் மதகுகளும், அதன் நீர்வழித்தடமும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், வீட்டுமனைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

    எனவே குளங்களின் நீர்வழித்தடங்களையும், வெளியேறும் கட்டமைப்புகளையும் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த மாதம் ஏரிகளிலும் உபரிநீர் வெளியேற்றும் அளவுக்கு மழைப்பொழிவும் இருந்தது.
    • தற்போது மழை அளவு குறைந்ததால் ஏரிகளில் நீர் சேமிக்கும் பணியும் நடந்து வருகிறது.

    சென்னை :

    மக்கள் தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக பராமரிக்காதது போன்ற காரணத்தால், நிலத்தடியில் போதிய நீர் தங்குவதில்லை. சென்னையை பொறுத்தவரை மணல், களிமண் பாறையால் ஆன அடுக்குகளை கொண்ட நிலப்பரப்பாகும். நிலத்தடி நீரை கணக்கிடுவதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக் கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் நிலத்தடி நீர் இருப்பு நிலவரம் கணக்கிடப்படுகிறது.

    தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் சேர்த்து 9 ஆயிரத்து 627.15 மில்லியன் கன அடி (9.62 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. போதிய நீர் இருப்பு ஏரிகளில் இருப்பதால், தற்போது சென்னை மாநகர பகுதிகளுக்கு 974 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஏரிகளிலும் உபரிநீர் வெளியேற்றும் அளவுக்கு மழைப்பொழிவும் இருந்தது. தற்போது மழை அளவு குறைந்ததால் ஏரிகளில் நீர் சேமிக்கும் பணியும் நடந்து வருகிறது.

    கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது சென்னை மாநகர பகுதிகளில் 5 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது, சென்னை மாநகரின் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு, குடிநீர் வினியோகம் செய்யும் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட தகவல்களை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

    • உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது.
    • ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை.

    உடுமலை :

    நீராதாரங்கள் பராமரிப்பில் அக்கறை காட்டாததால் நீர் வழித்தடங்கள் குளம் குட்டை உள்ளிட்டவை நாளடைவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இதனால் அடைமழை பெய்தாலும் அவை நீர்வரத்தை பெற முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வகையில் உடுமலை தளி பகுதியில் ஒரு சில நீராதாரங்களைத் தவிர மற்றவைகள் நீர் இருப்பை பெற முடியாமல் தவித்து வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீராதாரங்களை மையமாகக் கொண்டு அனைத்து விதமான உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது. அவற்றை ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை. இதனால் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளானதுடன் மண் சூழ்ந்து மேடாகி விட்டது. இதன் காரணமாக முழுமையான நீர் வரத்தை பெற முடியாமலும் அதையும் மீறி வெள்ளப்பெருக்கு நீராதாரத்தை அடைந்தால் வீணாகி வருவதும் தொடர்கதையாக உள்ளது. நீராதாரங்கள் பராமரிப்பில் முனைப்பு காட்டாததால் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தும் நீர்வரத்தை பெறாமல் குளம் குட்டைகள் தவித்து வருகிறது. இதனால் கிணறு ஆழ்குழாய் கிணறுகள் விரைவில் வறண்டுவிடுவதுடன் விவசாய தொழிலும் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது.

    விவசாயத் தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தளிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள நீராதாரங்கள் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்து அவற்றில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்வர வேண்டும். இதனால் மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் இருப்பு உயர்ந்து வருவதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக இருப்பதில் கிணறு, குளம், குட்டை, ஏரி, ஓடை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாலும், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் பாழாகி வருகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் உப்பாறு ஓடை வழியாக செல்கிறது. இதனால் குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

    உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் இறுதியாக உப்பாறு அணைக்கு செல்கிறது . உப்பாறு அணை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. உப்பாறு ஓடை செல்லும் வழிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. சில இடங்களில் ஓடை தெரியாத அளவிற்கு சீமைகருவேல மரங்களாக காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் ஓடை வழியாக செல்லும் மழை நீர் வீணாகிறது. சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.

    நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ள நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட உப்பாறு ஓடை பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.எனவே உப்பாறு ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை மழைக்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரையில் கன மழை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • முல்லை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நீர்மட்டம் உயர்வு

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம்முழுவதும் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அலங்கா நல்லூர், கள்ளந்திரி, வாடிப்பட்டி உள்ளிட்ட முல்லைப் பெரியாறு வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் 52 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிட்டம் பட்டி- 27

    கள்ளந்திரி-12

    தனியாமங்கலம்-41

    மேலூர் -57

    சாத்தையாறு அணை- 5

    வாடிப்பட்டி-14

    திருமங்கலம் -52

    உசிலம்பட்டி -14

    மதுரை வடக்கு -24

    தல்லாகுளம்-35

    விரகனூர்-12

    விமான நிலையம்- 21

    இடையபட்டி-31

    புலிப்பட்டி-39

    சோழவந்தான்-30

    மேட்டுப்பட்டி-8

    குப்பனம்பட்டி-20

    கள்ளிகுடி-66

    பேரையூர் -18

    ஆண்டிப்பட்டி-27 முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,132 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 2,016 கன அடி தண்ணீர் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது. வைகை அணையில் நீர்மட்டம் 59.38 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி க்கு 1,546 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை குடிநீர் விநியோகத்திற்காகவும், விவசாய தேவைகளு க்காகவும் 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    • நிலத்தடியில் சேகரமாகும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
    • மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    அவிநாசி:

    கிராம ஊராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆட்சியின் போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டன.

    தற்போது கிராம ஊராட்சி பகுதியில் பொதுகுடிநீர் குழாய் உள்ள இடங்களில் உறிஞ்சு குழி அமைத்து, குழாயில் இருந்து வீணாகி வெளியேறும் தண்ணீர், நிலத்தடியில் சேகரமாகும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கடந்தாண்டுகளில் அவிநாசி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மழையால் குளம், குட்டைகள் நிரம்பி ததும்பின. இதனால், நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்தது.இதன் தொடர்ச்சியாகதற்போது கிராம ஊராட்சிகளில், சாலையோரம் உள்ள இடங்களில் உறிஞ்சு குழி அமைக்கும் பணி நடந்து வருகிறது.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும், இப்பணியில், தினமும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் தற்போது பெய்யும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது என்று செயற்கைக்கோள்கள் மூலம் நாசா கண்டறிந்துள்ளது. #NASA
    வாஷிங்டன்:

    பூமியின் நிலத்தடி நீர்மட்டத்தை (நன்னீர்) அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலக அளவில் 34 மண்டலங்களை சுமார் 14 ஆண்டுகளாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதன் முதற்கட்ட தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளனர்.

    இதில் பூமியின் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரமாகவும், உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்து கொண்டே போவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு மோசமான நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை சுழற்சி உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் ஏற்கனவே பிரச்சினைகள் உருவாகி இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்காலத்தில் வட இந்தியாவில் போதுமான மழை இருந்தபிறகும் அரிசி, கோதுமை போன்ற பயிர்களுக்காக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சியதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

    இது எதிர்கால வறட்சிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், பூமியை பொறுத்தவரை நிலத்தடி நீரே மிகவும் அத்தியாவசிய வளமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  #NASA
    ×