search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ground water level"

    • கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சராசரியாக 0.10 மீட்டர் அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • இந்த ஆண்டில் ஜூலை-ஆகஸ்டு மாத புள்ளி விவரங்களின் அடிப்படையில் 0.62 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. பொதுவாக இக்காலக் கட்டத்தில் குறைவான மழைப்பொழிவு தான் இருக்கும். அக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அதனை தொடர்ந்து அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்திற்கு போதுமான அளவு மழையை கொடுப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் சென்னையில் பெய்த மழையின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நீர்மட்டம் எவ்வளவு உயர்ந்து உள்ளது என்ற விவரத்தை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் திரு.வி.க. நகர் மண்டலத்தில் தான் அதிகபட்சமாக 1.74 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    ஜூலை மாதத்தில் 7.59 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் இருந்த நிலையில் ஆகஸ்டில் 5.85 மீட்டராக குறைந்து உள்ளது. 2 மாதத்தையும் ஒப்பிட்டு சராசரியாக பார்க்கும் போது 1.74 மீட்டர் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து உள்ளது. அம்பத்தூரில் சராசரி நீர்மட்ட அளவு குறைந்துள்ளது. 6.70 மீட்டர் அளவு குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சராசரியாக 0.10 மீட்டர் அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டில் ஜூலை-ஆகஸ்டு மாத புள்ளி விவரங்களின் அடிப்படையில் 0.62 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி ஜூனில் இருந்து 544.7 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது 66 சதவீதம் கூடுதல் மழையாகும். திரு.வி.க.நகரை தொடர்ந்து கோடம்பாக்கம் 1.41 மீட்டர் அளவில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதையடுத்து தேனாம்பேட்டை மண்டலம் 1.14 மீட்டராக பதிவாகி உள்ளது. குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நீடித்து வருபவதே நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும்.
    • பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டதால் நிலத்தடி நீர் மட்டம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஜனவரி மாதம் மழை பதிவாகவில்லை. பிப்ரவரி மாதம் மட்டும் 7.75 மி.மீ., அளவுக்கு மட்டும் மழை பதிவாகியுள்ளது.

    மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களை உள்ளடக்கிய கோடை பருவத்தில் 135.10 மி.மீ., என்ற இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்தது. மார்ச் மாதம் 27.34 மி.மீ., - ஏப்ரல் மாதம் 23.53 மி.மீ., - மே மாதம், 105.17 மி.மீ., என 156.04 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.

    ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவத்தில் கடந்த 2 மாதங்களில் மழை ஏமாற்றி விட்டது. இம்மாதமும் பருவமழை போக்கு காட்டி க்கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் 22 மி.மீ., அளவுக்கு பதிவாக வேண்டிய மழை 14.73 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.

    ஜூலையில் 27.10 மி.மீ., அளவுக்கு இருக்க வேண்டிய மழை 12.76 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. இம்மாத (ஆகஸ்டு) மாதத்தின் இயல்பான மழை அளவு 31.70 மி.மீ., ஆனால் நேற்று மாலை வரை 6.24 மி.மீ., அளவுக்கு மட்டும் பதிவாகியுள்ளது.

    ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மழையளவு குறைந்ததால் வறட்சி மெதுவாக தலைகாட்ட துவங்கி விட்டது. கோடை பருவம் விடைபெற்று 3 மாதமாகியும், வெப்பத்தாக்கம் குறையாமல் கொளுத்தி க்கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.

    இருப்பினும் இப்படியே மழை தலைகாட்டாமல் இருந்தால், வறட்சியின் பிடியில் சிக்க வேண்டியிருக்கும். கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வறட்சியை நெருங்கிவிட்டன. ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டில் 45 மி.மீ., மழை பதிவானது. இந்தாண்டு 30 மி.மீ., மழை குறைந்துபோனது.

    ஜூலையில் அதிகபட்ச அளவாக கடந்தாண்டு 68.77 மி.மீ., பதிவாகியிருந்தது. இந்தாண்டு 12.75 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2017ம் ஆண்டு மழை அளவு வெகுவாக குறைந்து போயிருந்தது.அடுத்தபடியாக இந்தாண்டு தென்மேற்கு பருவத்தில் மழை அளவு குறைந்து போயுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை மழை வழக்கம் போல் பொய்த்துவிட்டது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஏமாற்றிவிட்டது. இப்பருவ மழை நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு மிக முக்கியமானது. தென்மேற்கில் மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்ட பின்னரே வடகிழக்கு பருவத்தில் நிலத்தடி நீர் உயரும். இதேநிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் மட்டம் சரிவது மட்டுமல்ல, கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நிலத்தடியில் சேகரமாகும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
    • மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    அவிநாசி:

    கிராம ஊராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆட்சியின் போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டன.

    தற்போது கிராம ஊராட்சி பகுதியில் பொதுகுடிநீர் குழாய் உள்ள இடங்களில் உறிஞ்சு குழி அமைத்து, குழாயில் இருந்து வீணாகி வெளியேறும் தண்ணீர், நிலத்தடியில் சேகரமாகும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கடந்தாண்டுகளில் அவிநாசி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மழையால் குளம், குட்டைகள் நிரம்பி ததும்பின. இதனால், நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்தது.இதன் தொடர்ச்சியாகதற்போது கிராம ஊராட்சிகளில், சாலையோரம் உள்ள இடங்களில் உறிஞ்சு குழி அமைக்கும் பணி நடந்து வருகிறது.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும், இப்பணியில், தினமும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் தற்போது பெய்யும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    • நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • மேட்டூர் கிழக்குகரை வாயக்காலில் தண்ணீர் வரும் போது, விவசாயிகள் நெல் சாகுபடி செய்வார்கள்.

    பள்ளிப்பாளையம்:

    மேட்டூர் அணை நிரம்பி–யதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடபட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெ–ருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் வாய்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் நேற்று வந்து சேர்ந்தது. இதனால் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இதன் மூலம் சடையம்பாளையம், வட்டமலை, தட்டான்குட்டை, ஜெய்ஹிந்த் நகர், ஒட்டன்கோவில், கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலன் பெறுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் எளையாம்பாளையம், களியனூர், சமயசங்கிலி, எலந்தகுட்டை, ஆலாம்பாளையம், தெற்குபாளையம், சின்னார்பாளையம், மோள கவுண்டம்பாளையம். மற்றும் பல பகுதிகள் விவசாயம் நிறைந்தவை.மேட்டூர் கிழக்குகரை வாயக்காலில் தண்ணீர் வரும் போது, விவசாயிகள் நெல் சாகுபடி செய்வார்கள்.ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இது, நேற்று பள்ளிபாளையம் பகுதி எல்லைக்கு வந்தது. வாய்க்கால் தண்ணீர் வந்ததால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×