என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தற்கொலை."
- காவேரிப்பட்டினம் அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
- கிருஷ்ணகிரி மனைவி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் காவேரிப்பட்ட ணம் எம்.எஸ். நகரை சேர்ந்தவர் அம்சவள்ளி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கணவன் - மனைவி பிரிந்தனர். அம்சவள்ளி காவேரிப்பட்டணம் எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு கிருஷ்ணகிரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை மோகன் பாபு அம்சவள்ளியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த மோகன்பாபு தனது மனைவி வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மோகன்பாபுவின் தந்தை கருணாநிதி காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட மோகன்பாபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று டியூசன் செல்லாமல் வீட்டில் இருந்ததால் சங்கீதா மகனை கண்டித்துள்ளார்.
- விரக்தியடைந்த ஹரிராம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 14 வயதில் மீனா என்ற மகளும், 15 வயதில் ஹரிராம் என்ற மகனும் உள்ளனர்.
சந்திரன் கடந்த 4 வருடமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சங்கீதா கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஹரிராம் மாரண்ட அள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று டியூசன் செல்லாமல் வீட்டில் இருந்ததால் சங்கீதா மகனை கண்டித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த ஹரிராம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்
- பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது,
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவகுமார் . இவரது மகள் சத்யா(வயது 17). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சத்யாவின் தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருவதாகவும், சத்யா தனியார் பள்ளியில் படிக்க விரும்பாமல் தோழிகளுடன் சேர்ந்து அரசு பள்ளியில் படிக்க விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று சத்யா பள்ளிக்குச் செல்லவில்லை.
இதனால் பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சத்யா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்