search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
    X

    தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

    • காவேரிப்பட்டினம் அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
    • கிருஷ்ணகிரி மனைவி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் காவேரிப்பட்ட ணம் எம்.எஸ். நகரை சேர்ந்தவர் அம்சவள்ளி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கணவன் - மனைவி பிரிந்தனர். அம்சவள்ளி காவேரிப்பட்டணம் எம்.எஸ். நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு கிருஷ்ணகிரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை மோகன் பாபு அம்சவள்ளியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த மோகன்பாபு தனது மனைவி வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மோகன்பாபுவின் தந்தை கருணாநிதி காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட மோகன்பாபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×