search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு பிரீமியர் லீக்"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. #TNPL2018 #CSG#TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 25-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியின் எஸ் கார்த்திக், பாஸ்கரன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எஸ் கார்த்திக் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையிலும், பாஸ்கரன் ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது வீரராக களம் இறங்கிய கோபிநாத் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் ரன்குவிக்க இயலவில்லை.

    ஏ ஆரிஃப் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 34 பந்தில் 36 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் எம் சிலம்பரசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். 

    பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 

    10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



    அடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. #TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் நேற்று நடைபெற்ற போட்டியில் காரைக்குடி காளை அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணியை வெற்றி பெற்றது. #TNPL2018 #IKKVSMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 24-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. காரைக்குடி காளைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளையின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதித்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 43 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.

    அதன்பின் வந்த ஷாஜகான் 1 ரன்னில் வெளியேறினார். 6-வது வீரராக களம் இங்கிய ராஜ்குமார் 9 பந்தில் 20 ரன்களும், ஸ்ரீனிவாசன் 20 பந்தில் 23 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மதுரை பாந்தர்ஸ் அணியின் கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, கவுசிக், தன்வர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர், 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.


    அடுத்து களமிறங்கிய சுப்ரமணியம் 2 ரன்கள், தலைன் சற்குணம் 7 ரன்கள் மற்றும் கார்த்திகேயன் 8 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் கார்த்திக் மட்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அடுத்து களமிறங்கிய சந்திரன் 38 ரன்கள் அடித்து யோ மகேஷ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்து மதுரை பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.

    சிறப்பாக விளையாடிய கார்த்திக் 50 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனாகவும் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #IKKVSMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது. #TNPL2018 #TPvTW
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் எஸ் தினேஷ், கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவுசிக் காந்தி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எஸ் தினேஷ் 18 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.

    நிதிஷ் ராஜகோபால் 26 பந்தில் 41 ரன்களும், எஸ் அபிஷேக் 27 பந்தில் 30 ரன்களும் அடிக்க ரூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சோனு யாதவ், குமரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    பின்னர், 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியில் பரத் ஷங்கர் மற்றும் மணி பாரதி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். கனேஷ் வீசிய 8-வது ஓவரில் மணி பாரதி 26 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருந்த பரத் ஷங்கர், 51 ரன்களில் கனேஷ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் குமார் ரன் அடிக்காமலேயே வந்த வேகத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா இந்திரஜித்தும், கனபதியும் அதிரடியாக விளையாடினர்.

    இதனால், 19 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்து ரூபி திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 50 ரன்கள், கனபதி 27 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் கனேஷ் 2 விக்கெட்டுக்களையும், ரங்கராஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    சிறப்பாக விளையாடி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாபா இந்திரஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #TPvTW
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுகல் டிராகன்ஸ் அணி மோதின. திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் ராஜகோபால் சதீஸ் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திண்டுக்கல் அணியின் மோகன் அபினவ் 2 விக்கெட் வீழ்த்தினார். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

    ஜெகதீசன் 31 ரன்கள், விவேக் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகம்மது ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 19 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பரத் ஷங்கர் 24 ரன்களும், பாபா இந்திரஜித் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

    அடுத்து வந்த மணி பாரதி 10 ரன்னிலும், எஸ் அரவிந்த் டக்அவுட்டிலும் பெவிலியன் திரும்பினார்கள். சுரேஷ் குமார் 33 பந்தில் 35 ரன்களும், சோனு யாதவ் 20 பந்தில் 21 ரன்களும் அடிக்க திருச்சி வாரியர்ஸ் சரியாக 20 ஓவரில் 124 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக் கான் நல்ல தொடக்கம் தந்தனர். ஷாருக்கான் 67 ரன்களிலும், அந்தோனி தாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    14 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு கோவை அணி வெற்றி இலக்கை எட்டியது. அபினவ்  முகுந்த் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக்கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    ×