search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவனங்கள்"

    • ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை 17-ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து

    செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார் துறை நிறுவனங்கள்மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்க ளும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:- 

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளை ஞர்கள் பயன்பெற, சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமும், காலாண்டுதோறும் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்க ளும் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20-ந் தேதி) சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10-க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

    விழுப்புரம் மாவட்டத் தைச் சார்ந்த 18 முதல் 30 வயது வரையுள்ள வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனு தாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • இம்முகாமில் 714 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கே.எஸ்.கே.பொறியியலில் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.

    இந்த முகாமில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்சி.வி.கணேசன் ஆகியோர் அரசு தலைமை கொறடாகோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.பி.க்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் வழங்கினர். பின்னர் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கும்பகோணம் கே. எஸ். கே. பொறியியலில் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது .

    முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தனியார் முன்னணி நிறுவனங்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவை கலந்தகொண்டன.

    இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என 4300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதில், 714 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. 416 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 64 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இம்முகாமில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபத்ரா, எம்.எல்.ஏ.க்கள்அன்பழகன், துரைசந்திரசேகரன், கும்பகோணம் மாநகராட்சி மேயர்சரவணன், துணை மேயர்தமிழழகன், மாநகராட்சிஆணையர்செந்தில்முருகன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர்லதா ,மண்டல இணை இயக்குனர்சந்திரன், உதவி இயக்குநர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம்) வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ரமேஷ்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்காயத்ரி அசோக்குமார், கே.எஸ்.கே. பொறியியல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவர்கள் கலந்துகொண்டனர்.

    ×