search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
    X

    விழுப்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்க ளும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளை ஞர்கள் பயன்பெற, சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமும், காலாண்டுதோறும் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்க ளும் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20-ந் தேதி) சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10-க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

    விழுப்புரம் மாவட்டத் தைச் சார்ந்த 18 முதல் 30 வயது வரையுள்ள வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனு தாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    Next Story
    ×