search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பான் பிரதமர்"

    • ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பயண ரத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பயண ரத்துக்கான காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

    சமீபத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார்.
    • கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

    சியோல்:

    வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வடகொரியாவை சமாளிப்பதற்காக தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்தின.

    இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். அங்கு அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

    இந்த சந்திப்பின்போது இரு தரப்பு வர்த்தகம், வடகொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரிய தீபகற்பத்தில் கடந்த 1910 முதல் 1945-ம் ஆண்டு வரை நடந்த ஜப்பானிய காலனிய ஆதிக்கத்துக்கு பிரதமர் புமியோ கிஷிடா மன்னிப்பு கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பையும் இது ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக பிரதமர் புமியோ கிஷிடாவும், அவரது மனைவி யூகோ கிஷிடாவும் போரின்போது உயிரிழந்த தென்கொரிய ராணுவ வீரர்களுக்கு தங்களது நாட்டின் வழக்கப்படி தூபம் காட்டி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரதமரின் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தலைநகர் டோக்கியோவில் பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் துப்பாக்கி சத்தம் கேட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள கழிப்பறை அருகே போலீஸ்காரர் ஒருவர் தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரதமரின் அலுவலகத்திலேயே போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த சம்பவம் நடந்தபோது பிரதமர் புமியோ கிஷிடா தனது அலுவலகத்தில் இல்லை. அவர் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • இதைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதுடெல்லி:

    ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. இச்சம்பவத்தில் பிரதமர் புமியோ கிஷிடா பத்திரமாக மீட்கப்பட்டார்.

    பிரதமரை நோக்கி குண்டை வீசியதாக ஒருவரை கைதுசெய்த ஜப்பான் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பானில் உள்ள வயகமாவில் எனது நண்பர் பிரதமர் கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் வன்முறை சம்பவம் நடந்ததை அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருப்பது அறிந்து நிம்மதி அடைந்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கைகாசாகி துறைமுகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
    • பிடிபட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று வாகயாமா மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.

    உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கைகாசாகி துறைமுகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    அவரை பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சூழந்து இருந்தனர். அப்போது அவர் பேச தொடங்குவதற்கு முன்பு கூட்டத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் பிரதமர் புமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டை வீசினார்.

    அந்த குண்டு, புமியோ கிஷிடா அருகே விழுந்தது. இதில் குண்டு வெடித்து புகை மூட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடினார்கள். உடனே பிரதமர் புமியோ கிஷிடாவை பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

    மேலும் குண்டை வீசிய மர்ம நபரை மடக்கி பிடித்தனர். தப்பி ஓட முயன்ற அவரை கீழே தள்ளி பிடித்து அங்கிருந்து கொண்டு சென்றனர். பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினா் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக இருக்கிறார்களா? மர்ம பொருள் ஏதாவது இருக்கிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது. குண்டு வீசிய நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

    அது தொடர்பாக விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பிடிபட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசி கொண்டிருந்தபோது அவா் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷின்சோ அபே உயிரிழந்தார்.

    இந்த நிலையில் பலத்த பாதுகாப்பை மீறி ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது.
    • அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதே சீனாவின் நிலைப்பாடு என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    பீஜிங்:

    போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தலைவர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று திடீரென உக்ரைனுக்கு சென்றார். இந்தியாவில் இருந்து விமானம் மூலம் போலந்து சென்ற ஜப்பான் பிரதமர், அங்கிருந்து உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார்.

    போர் தீவிரமடைந்துள்ள இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது. ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பான் ஏற்றுள்ள நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆயுத பலத்தால் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றும் நடவடிக்கையை ஜப்பான் பிரதமர் உறுதியாக நிராகரிப்பார். சட்டத்தின் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தவேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவார். ஜப்பானின் பிரதம மந்திரியாகவும், ஜி7 நாடுகளின் தற்போதைய தலைவராகவும் உக்ரைனுக்கான ஆதரவை கிஷிடா நேரடியாக தெரிவிப்பார் என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.

    மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசிய நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் அமைந்துள்ளது. இதனால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. நிலைமையை மோசமாக்குவதற்கு பதிலாக, பதற்றத்தை தணிக்க ஜப்பான் இன்னும் நிறைய செய்யும் என எதிர்பார்ப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பி பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

    அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதே சீனாவின் நிலைப்பாடு எனவும், அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க உலகத்துடன் இணைந்து சீனா பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

    அப்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுவாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வென்பின், தங்கள் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும், அனைத்து தரப்பினருடனும் தொடர்பு கொள்வதாகவும் கூறினார்.

    போரை நிறுத்த அமெரிக்காவுடன் இணைந்து சீனா செயல்படுமா? என்ற கேள்விக்கு சற்று காட்டமாக பதிலளித்தார். அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும் போரை நிறுத்தவும் விரும்புகிறதா? என்று அமெரிக்காவிடம் முதலில் கேட்க வேண்டும் என்றார் வென்பின். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி விமான நிலையத்தில் ஜப்பான் பிரதமருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார்.
    • 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார்.

    ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார்.

    2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

    குறிப்பாக இந்தோ- பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்றுள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருந்தப்படுகிறது.

    • பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது அவரை ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புமியோ கிஷிடா அழைப்பு விடுப்பார்.
    • ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் மே மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 19ம் தேதி இந்தியா வர திட்டமிட்டுள்ள அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    அப்போது பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இது தொடர்பாக நிக்கி ஏசியா ஊடகம் கூறும்போது, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வருகிற 19ம் தேதி முதல் 3 நாட்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த ஆண்டு ஜி-7 மற்றும் ஜி-20 தலைவர்களாக ஜப்பானும், இந்தியாவும் இணைந்து செயல்படுவார்கள் என்பதை இந்திய பிரதமர் மோடியுடன் உறுதிப்படுத்த புமியோ கிஷிடா ஆர்வமாக உள்ளார்.

    ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் மே மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில், மற்ற நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த புமியோ கிஷிடா விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது அவரை ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புமியோ கிஷிடா அழைப்பு விடுப்பார்.

    மோடி- புமியோ கிஷிடா சந்திப்பின்போது ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படு கிறது.

    • டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
    • முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே (63), ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. ஷின்சோ அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் பாசமிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, ஜப்பான் அரசு ஏற்பாடு செய்திருந்த ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். அதன்பின், இருநாட்டு தலைவர்களும் பேசினார்கள்.

    முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து அவர் ஜப்பான் பிரதமரை சந்தித்தார்.

    இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

    • டோக்கியோ விமானநிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
    • ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை நினைவுகூர்கிறது இந்தியா.

    ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது63). கடந்த ஜூலை மாதம் இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார். பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த இரங்கல் செய்தியில் பாச மிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இன்று ஜப்பான் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதை ஏற்று பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலை வர்களும் பேசினார்கள்,

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இந்த சந்திப்பு நடந்தது. கடந்த முறை ஜப்பான் வந்த போது நீண்ட நேரம் அபேயுடன் உரையாடினேன். இந்தியா அவரை இழந்து தவிக்கிறது. அவர் இல்லாதததை இந்தியா உணர்கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்து உள்ளார்.

    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

    ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

    துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை என்றும், இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டது.

    பின்னர் அபேயின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது அருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் எப்போதும் இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.
    • ஷின்ஸோ அபே, சுயநினைவின்றி இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஜப்பான் ஊடகம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

    ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணி அளவில் அவர் மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். ஏராளமான பொதுமக்கள் இந்த பிரசார கூட்டத்துக்கு திரண்டு வந்து ஷின்சோ அபேயின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் ஷின்சோ அபேயை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டான். அந்த குண்டு அவரது மார்பில் பாய்ந்தது. இதனால் ஷின்சோ அபே தனது நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே சரிந்தார்.

    உடனே அவரது பாதுகாவலர்கள் அவரை நோக்கி வேகமாக ஓடினார்கள். அதற்குள் அவர் கீழே விழுந்தார். அவரது மார்பு பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி சட்டை முழுவதும் ரத்தம் காணப்பட்டது.

    உடனே அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அவரை உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உடனடியாக டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கூட்டத்தில் முதலில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது குண்டு பாய்ந்ததை அறிந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த உடனே துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனது பெயர் யமாஹமி (வயது 41). அவன் அருகில் நின்றபடியே ஷின்சோ அபேயை துப்பாக்கியால் சுட்டான்.

    இதற்காக அவன் சிறியரக கைத்துப்பாக்கியை பயன்படுத்தினான். யமஹாமி துப்பாக்கியால் சுட்டதை அங்கு நின்றுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் தான் பார்த்துள்ளார். அவர்தான் அவனை போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

    ஷின்சோ அபேயை, யமாஹாமி எதற்காக சுட்டான்? அவன் எப்படி பொதுக்கூட்ட மேடை அருகே வந்தான் என்பது தொடர்பாக போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

    ஷின்சோ அபே சுடப்பட்ட தகவல் அறிந்ததும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷ்கிடாவும், மந்திரிகளும் டோக்கியோவுக்கு திரும்பியுள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட சம்பவம் ஜப்பான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×