என் மலர்
நீங்கள் தேடியது "தைவான் விவகாரம்"
- ஜப்பான் பிரதமருக்கு சீன வெளியுறவு மந்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- ஜப்பான் நடவடிக்கையில் ஈடுபட்டால் சீனா பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
பீஜிங்:
தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமருக்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யீ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜப்பான் பிரதமரின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. தைவான் பிரச்சனையில் அவர்கள் ராணுவ தலையீட்டுக்கு முயற்சிப்பது தவறான சமிக்ஞையாகக் கருதப்படும். அவர்கள் சிவப்பு கோட்டை தாண்டக் கூடாது. ஜப்பான் நடவடிக்கையில் ஈடுபட்டால் சீனா உறுதியாக பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
- தைவான் மீதான வெளிப்புற தலையீட்டை எதிர்க்க வலிமையான நடவடிக்கை.
- ஐ.நா.சபையில் உரையாற்றிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி எச்சரிக்கை.
நியூயார்க்:
தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. அண்மையில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்ற நிலையில் சீனா-அமெரிக்கா இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீன படையெடுத்தால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளதாவது:
தைவான் மீது வெளிநாட்டு தலையீட்டை சீனா பொறுத்துக் கொள்ளாது. தைவானை மீண்டும் சீனாவுடன் ஒன்றிணைக்கும் உறுதிப்பாட்டின் வழியில் எவரும் குறுக்கிட்டால் கால சக்கரங்களால் நசுக்கப்படுவார்கள்.
சீனா முழுவதுமாக மீண்டும் ஒருங்கிணைப்பட்டால் மட்டுமே தைவான் ஜலசந்தி பகுதியில் உண்மையான அமைதி நிலவ முடியும். தைவான் மீதான வெளிப்புற தலையீட்டை எதிர்க்க மிகவும் வலிமையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சீனா உடனான விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.
- சீன படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்றார் அதிபர் ஜோ பைடன்.
வாஷிங்டன்:
தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவானை சுற்றி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் சீன போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றன என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையே, தைவானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ரூ.8,700 கோடி மதிப்பில் ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்க அமெரிக்க பாராளுமன்றத்தை அதிபர் ஜோபைடன் வலியுறுத்தி இருந்தார். தைவானுக்கு 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 100 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.






