என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
தைவான் மீதான வெளிநாட்டு தலையீட்டை பொறுத்துக் கொள்ள முடியாது- சீனா உறுதி
- தைவான் மீதான வெளிப்புற தலையீட்டை எதிர்க்க வலிமையான நடவடிக்கை.
- ஐ.நா.சபையில் உரையாற்றிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி எச்சரிக்கை.
நியூயார்க்:
தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. அண்மையில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்ற நிலையில் சீனா-அமெரிக்கா இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீன படையெடுத்தால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளதாவது:
தைவான் மீது வெளிநாட்டு தலையீட்டை சீனா பொறுத்துக் கொள்ளாது. தைவானை மீண்டும் சீனாவுடன் ஒன்றிணைக்கும் உறுதிப்பாட்டின் வழியில் எவரும் குறுக்கிட்டால் கால சக்கரங்களால் நசுக்கப்படுவார்கள்.
சீனா முழுவதுமாக மீண்டும் ஒருங்கிணைப்பட்டால் மட்டுமே தைவான் ஜலசந்தி பகுதியில் உண்மையான அமைதி நிலவ முடியும். தைவான் மீதான வெளிப்புற தலையீட்டை எதிர்க்க மிகவும் வலிமையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்