search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமிப்பு கிடங்கு"

    • முதல் -அமைச்சரால் காணொளி மூலம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதியதாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது.

    இந்த கிடங்கினை நேற்று தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சேமிப்பு கிடங்கை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த கிடங்கில் அரசு நிர்ணயித்துள்ள கட்ட ணத்தின் அடிப்படையில் தனியார் துறை நிறுவன ங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை வாடகையின் அடிப்படையில் சேமித்துக் கொள்வதற்கான வழிவகைகள் செய்ய ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,சேமிப்பு கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் வசந்த். மாவட்ட கவுன்சிலர் செல்வம்,ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரி, நகரமன்ற உறுப்பினர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தற்போது இருப்பில் உள்ள 7,500 டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக தார்பாலின் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • இன்னும் 3 நாட்களில், மாவட்டத்தில் உள்ள 62 அரவை முகவர்களுக்கு நெல் மூட்டைகள் விநியோகித்து அரவை செய்யப்படவுள்ளது.

    ஓசூர்,

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலமும் மற்றும் விவசாயிகளிடமிருந்தும் தருவிக்கப்பட்ட நெல் மூட்டைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தளி சாலையில் உள்ள அந்திவாடி விளையாட்டு மைதானத்திற்கு பக்கத்தில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல்மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி, திறந்த வெளியில் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது மழை காலமாக இருப்பதாலும், பருவ மழையும் தொடங்கி விட்டதாலும் இந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முழுவதுமாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர, அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளிலிருந்து நெல்மணிகள் குவியல், குவியலாக கீழே கொட்டி சிதறிக்கிடக்கின்றன.

    இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு கீழே கொட்டி கிடப்பதாலும், நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாலும் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்குள்ள நெல் மூட்டைகளை, மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இங்கு தற்போது இருப்பில் உள்ள 7,500 டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக தார்பாலின் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில், மாவட்டத்தில் உள்ள 62 அரவை முகவர்களுக்கு நெல் மூட்டைகள் விநியோகித்து அரவை செய்யப்படவுள்ளது.

    நெல்மூட்டைகள் எதுவும் மழையால் நனைந்து சேதமடையவில்லை. மாவட்ட பொறுப்பு மற்றும் உணவுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தின்படி 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்தி சரள், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • புதிய சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்களை இறக்குவதற்காக லாரியில் கொண்டு வந்துள்ளனர்.
    • கிராம மக்கள் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரூர் பகுதியில் உள்ள கியாஸ் முகவர் ராஜேந்திரன் என்பவர் விவசாய நிலத்தை வாங்கி, பெரிய அளவில் கட்டிடம் கட்டியுள்ளார். அப்பொழுது கிராம மக்கள் எதற்காக கட்டிடம் என கேட்டுள்ளனர். தனது மகன் மருத்துவம் முடித்துள்ளதால், மருத்துவமனை கட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பணி முடிந்த பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் சேமிப்பு கிடங்கு என கட்டிடத்தில் எழுதப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் குடியிருப்புகளை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டரை சேமித்து வைத்தால், ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் பேரிழப்பு ஏற்படும். எனவே இங்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சேமிப்பு கிடங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இது குறித்து கியாஸ் முகவர் ராஜேந்திரன் கண்டு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகளிடம் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அப்புறப்படுத்த வேண்டும் என மனு அளித்துள்ளனர். ஆனால் அதனை அப்புறப்படுத்துவதற்கு அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்களை இறக்குவதற்காக லாரியில் கொண்டு வந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிலிண்டர்களை சேமிப்பு கிடங்கில் இறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் சிலிண்டர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரூர்-தருமபுரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இதனை தொடர்ந்து தகவல் அறிந்த அரூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை அடுத்து லாரியிலிருந்து இறக்கப்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் ஏற்றப்பட்டது. ஆனால் பாதி சிலிண்டர்கள் சேமிப்பு கிடங்கில் இருந்ததால், கிராம மக்கள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உள்ளே இருக்கின்ற சிலிண்டர்களை லாரியில் எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் ஒருவர் சேமிப்பு கிடங்கின் பூட்டை கல்லால் உடைக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு அரூர் வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர சமாதான பேச்சு வார்த்தைக்கு பிறகு வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று முறையிடலாம். நமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், அரசு ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடலாம் என கூறி, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் தருமபுரி பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடுகுசந்தை ஊராட்சியில் நெல் உலர்களம்- சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்.
    • காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகு சந்தை ஊராட்சி தலைவர் காளிமுத்து. இவர் முன்னாள் அ.தி.மு.க. கடலாடி ஒன்றிய கவுன்சிலராகவும், 25 வருட மாக சத்திரம் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். கடுகு சந்தை ஊராட்சித்தலைவர் காளிமுத்து கூறுகையில்:-

    கடுகு சந்தை ஊராட்சியில் மினி பாரஸ்ட் என ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மெகா பாரஸ்ட் என 5 ஆயிரம் மரக் கன்றுகள் வளர்த்து கடுகு சந்தை ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்றி உள் ளேன். இந்த கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கிணறு அமைத்து தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட் டம் தேவர்நகர், கடுகுசந்தை பகுதிகளுக்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவர்நகர் உயர் நிலைப்பள்ளி, தொடக்கப்ப ள்ளியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது.

    தேவர் நகர் உயர்நிலைப் பள்ளி சமையலறை கட்டிடத்திற்கு ரூ.7.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சத்தி ரம் கிராமத்தில் இருந்து கூரான்கோட்டை செல்லும் சாலை அருகே புதிய ஊருணி அமைத்து படித்துறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடுகு சந்தை ஊராட்சி சத்திரம், நடுத்தெரு, மேற்கு தெரு, கிழக்குத் தெரு, பகுதியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை அமைக் கப்பட்டுள்ளது.

    கடுகுசந்தை ஊராட்சியில் ஆயிரம் ஏக்கர் நிலப்ப ரப்பில் 5லட்சம்பனை மரங்கள் உள்ளன. ஆகையால் பனை தொழி லாளர்களுக்காக கடுகு சந்தை ஊராட்சி யில் பனங்கற்கண்டு தொழிற் சாலை அமைக்க வேண்டும். சத்திரம் பகுதியில் ராமேசுவரம் முதல் திருச்செந்தூர் செல் லும் பக்தர்கள் சத்திரத்தில் உள்ள ராஜாசத்திரம் பகுதியில் தங்கி செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக சத்திரத்தில் உள்ள ராஜா ஊரு ணிக்கு படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    சத்திரம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்திரம், கடுகுசந்தை, முத்துராம லிங்கபுரம், தேவர் நகர், ஆதிதிராவிடர் காலனி, ஆகிய பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கட்டிடம் புதிதாக கட்டித் தரவேண்டும். கண்மாய்களை தூர் வாரி, மடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண் டும். தெருவிளக்குகள் விஸ்தரிப்பு செய்து தர வேண்டும்.

    நெல் உலர்க்களம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். கடுகுசந்தை ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வா ய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது. அதனை தூர்வாரி கடுகு சந்தை ஊராட்சியில் உள்ள கண் மாய்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர கோடைகால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1, 250 டன் புழுங்கல் அரிசி ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • காயமடைந்தவர்களுக்கு ராணுவ கிளினிக்குகள் உள்பட உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது.

    வங்கதேசத்தின் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதி வெளியே 40 கி.மீ தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த தீ விபத்தில், 5 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் 60 முதல் 90 சதவீதம் தீக்காயங்களுடன் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு ராணுவ கிளினிக்குகள் உள்பட உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படடு வருகின்றன.

    விபத்து குறித்து வங்கதேச இன்லேண்ட் கண்டெய்னர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரூஹூல் அமின் சிக்தர் கூறியதாவது:-

    30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது. கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×