search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஐ அதிகாரிகள்"

    மேற்கு வங்காள மண்ணை மம்தா களங்கப்படுத்தி விட்டார். சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளை பாதுகாப்பவர்களை இந்த காவலாளி தப்ப விடமாட்டான் என்று பிரதமர் மோடி கூறினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சூராபந்தரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், அதே வன்முறை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். அதனால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.

    லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த மோசடியாளர்களை பாதுகாக்க ஒரு முதல்-மந்திரி தர்ணா போராட்டம் நடத்தியது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த காவலாளி (மோடி), சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையோ, அவர்களை பாதுகாப்பவர்களையோ தப்ப விடமாட்டான்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட காண்டாமிருக பொம்மை நினைவுப்பரிசுடன் பிரதமர் மோடி.

    சுராபந்தரில், கொல்கத்தா ஐகோர்ட்டின் சர்க்யூட் கிளையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘‘வடக்கு வங்காள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. அவர்கள் வழக்கு தொடர இனிமேல் 600 கி.மீ. பயணம் செய்து கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டியது இல்லை. 100 கி.மீ.க்குள் இங்கு வந்து விடலாம்’’ என்று கூறினார்.

    சத்தீ‌ஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

    விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக பொய் சொல்லி, சத்தீ‌ஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளனர்.

    அப்படியானால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி பெற தகுதி இல்லையா? இந்த விதிமுறைகளை ஏன் முன்பே சொல்லவில்லை? அடகுகடைக்காரர்களிடமும், உறவினர்களிடமும் பெற்ற கடன்களை யார் தள்ளுபடி செய்வது?

    சத்தீ‌ஷ்கார் மாநில அரசு, சி.பி.ஐ.க்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துள்ளது. தவறு செய்தவர்கள்தான் விசாரணையை கண்டு பயப்படுவார்கள். காரணமின்றி யாராவது விசாரணை நடத்துவார்களா?

    இந்திரா காந்தி குடும்பத்தில் பெரும்பாலானோர், ஒன்று ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லது முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். மெகா கலப்பட கூட்டணியிடம் மக்கள் உ‌ஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
    கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை கைது செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #Mamata #MamatawelcomesSCorder
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

    மேற்கு வங்காளம் அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த  நீதிபதிகள் ‘சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  

    அதேவேளையில், கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நிர்பந்தமான முறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அத்துமீறலாக நடந்துகொள்ள கூடாது. அவரை கைது செய்யவும் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுக்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் கடந்த மூன்று நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


    சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு ஆறாண்டுகளுக்கு முன்னர் இம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தபோது போடப்பட்ட வழக்காகும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சுதிப்தா சென்-னை கைது செய்து வழக்கு போட்டோம். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, பணம் கட்டி ஏமாந்த  முதலீட்டாளர்களுக்கு 300 கோடி ரூபாயை பெற்றுத் தந்திருக்கிறோம். இப்போது இவ்விவகாரத்தில் எங்களை குற்றவாளிகள்போல் சித்தரிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.

    நீதித்துறையின் மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது செய்வதற்காக இங்கு வந்தனர். ஆனால், அவரை கைது செய்ய கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்துள்ள இந்த உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி.

    இந்த நாட்டில் யாருமே உயர்வான எஜமானர்கள் இல்லை. ஜனநாயகம் மட்டுமே நம் நாட்டின் எஜமானர். நான் கொல்கத்தா கமிஷனருக்காக போராடவில்லை. இந்த நாட்டு மக்கள் அனைவருக்காகவும், நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படவும், பாதுகாக்கப்படுவதற்காகவும் தான் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்விவகாரத்தில் இப்போது எங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இந்நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mamata #MamatawelcomesSCorder #democracy #bigbossofIndia

    கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முயன்றது தொடர்பாக சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குனர் ஷாந்தனு சென் கருத்து தெரிவித்துள்ளார். #WBgovt #CBIstandoff #CBIExJointDirector
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் போலீஸ் கமிஷனரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யச் சென்ற விவகாரம் தொடர்பான அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. 

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில அரசு மற்றும் சி.பி.ஐ. முகமைக்கு இடையில் தொடங்கியுள்ள இந்த பணிப்போர் பற்றி சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குனர் ஷாந்தனு சென் கருத்து தெரிவித்துள்ளார்.

    சி.பி.ஐ. முகமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அரசியல்வாதிகள் விரும்பலாம். ஆனால், அதற்கு அதிகாரிகள் இடமளித்து விடக் கூடாது. 

    தற்போது, மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருவதுபோன்ற விவகாரங்களுக்கான ஒரே தீர்வு என்னவென்றால், இதுதொடர்பாக சி.பி.ஐ, சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால், இந்த வழக்கில் சி.பி.ஐ, சிறப்பு நீதிமன்றத்தை அதிகாரிகள் ஏன் அணுகவில்லை? என்பது எனக்கு புரியவில்லை என ஷாந்தனு சென் குறிப்பிட்டுள்ளார். #WBgovt #CBIstandoff  #CBIExJointDirector
    சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்கிறது. #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி பூஷன் கேட்டுக்கொண்டார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும்படி பிரசாந்த் பூஷனை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் வழக்கு விவரங்களை ஆய்வு செய்து அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தனர். #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges

    ×