search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமத்துவபுரம்"

    • உலகிலேயே முதன் முதலாக யாருக்கும் தோன்றாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர்.
    • அடுத்த நூற்றாண்டில் உலகிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாய் சமத்துவபுரங்கள் அமைத்திட வேண்டும்.

    சென்னை:

    சிவசேனா கட்சி (யுபிடி) மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகிலேயே முதன் முதலாக யாருக்கும் தோன்றாத சமத்துவ சமுதாயத்தை சொல்லிலே மட்டும் இல்லாமல், எழுத்திலே மட்டும் இல்லாமல் செயலிழை செய்து காட்டி சாதித்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு தினத்தை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 100 சமத்துவ புரங்களை அமைத்து அதற்கு கலைஞர் சமத்துவபுரம் என்று பெயர் சூட்டி, கலைஞர் சமத்துவ படங்கள், அனைத்து புதிய தலைமுறையை புதிய பொருளாதார ஏற்றத்தை, புதிய மாற்றத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உருவாக்கி, அடுத்த நூற்றாண்டில் உலகிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாய் அமைந்திட 100 கலைஞர் நூற்றாண்டு சமத்துவபுரங்கள் அமைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • அடுத்த கட்டமாக அரசு பஸ்களை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன்புதூர் அருகே சமத்துவபுரம் உள்ளது.

    இங்குள்ள மரப்பாலம் முதல் பொய்கை அணை வரை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது.

    இதனால் அந்த சாலை வழியே பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் பல தடவை மனு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் துணைத் தலைவர் தேவதாஸ் முன்னிலையில் இன்று காலை கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற இந்தப் போராட்டம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறும் போது, இனியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்டமாக அரசு பஸ்களை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    • ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
    • சமத்துவபுரத்தை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அமுதா, நேரில் பார்வையிட்டு அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் சமத்துவ புரத்தை திறப்பதற்கான பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து சாலைவசதி, குடிநீர்குழாய், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதனை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இதற்கிடையே சமத்துவபுரத்தை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அமுதா, நேரில் பார்வையிட்டு அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கூடுதல் இயக்குனர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சமத்துவபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
    • சொந்த செலவில் வீட்டின் பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெக்களூர் மக்கள் சமத்துவபுரம் பராமரிப்பு பணி தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.அதில், நாங்கள் அவினாசி வட்டம், தெக்களூர் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகளை விலைக்கு வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அதற்கு பட்டா கேட்டு மனு அளித்துள்ளோம். தற்போது சமத்துவபுரம் வீடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சொந்த செலவில் வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்து கொள்ள வேண்டும் என எங்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
    • பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடியும்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    கீழையூர் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பா கோவிலில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் கட்டிட பணிகளை தரமாகவும் துரிதமாகவும் கட்டி முடித்திட பயணாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்‌.

    தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான 6.84 கோடி மதிப்பீட்டில் 188 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

    விழாவில் பேசிய அமைச்சர் இந்தாண்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு 20ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 21ஆயிரத்து 760கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கி தமிழக அரசு சாதனை படைத்ததாக தெரிவித்தார்.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    • அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்
    • சப்பாத்து பாலம், மாத்தூர் தொட்டில் பாலம் ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் பழங்குடி மக்கள் மற்றும் சமத்துவபுரம் மக்களுடன் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று கலந்துரையாடியதுடன் சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகளையும் பார்வையிட்டார். அப்போது நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை அரங்கை பார்வையிட்டு, விற்பனை நிலவரங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சப்பாத்து பாலம், மாத்தூர் தொட்டில் பாலம் ஆகிய பகுதிகளையும் அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளாலும், நிர்வாக திறமையின்மையாலும் தமிழகத்தின் முன்னேற்றம் பாழ்பட்டுள்ளது. அதனை சீரமைத்து தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அதற்காக அவருக்கு அனைத்துத் துறைகளும் ஒத்துழைப்பு கொடுப்பது அவசியமாக உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 சமத்துவபுரங்களில் முதற்கட்டமாக 2 சமத்துவபுரங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.1.348 கோடி நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் தான் சமத்துவபுரம் திட்டம். ஒரு மாநிலத்தில் தொழில்வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் பெருக வேண்டுமென்றால் அம்மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டும். அதற்கு மக்களை ஜாதி மத வேறுபாடின்றி வாழ வைக்கும் திட்டம் தான் இந்த சமத்துவபுரங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மகளிர் திட்ட இயக்குனர் திவ்ய தர்ஷினி, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாக இயக்குநர் நரேஷ் அகமது, பத்மநாபுரம் சப் - கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ஆணையாளர் கீதா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவர் தேவதாஸ்,

    முன்னாள் எம்.எல்.ஏ புஷ்ப லீலாஆல்பன், திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்சன், குலசேகரம் பேருராட்சி துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின்பால்ராஜ், குமரி மேற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், பொன்மனை கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர் சுருளோடு சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே எம்.ஆர். ராஜா, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
    • பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியம்கோட்டமங்கலத்தில் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    குடியிருப்பு கட்டும் போதே வடக்கு பகுதியில் மழை நீர் உள்ளே வராமல் தடுக்க சுற்றுசுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தொடர்ந்து, இக்குடியிருப்பில் பிற மேம்பாட்டு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதே போல், முன்பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவும் பொலிவிழந்து விட்டது. பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.பிற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. குடியிருப்புக்கான பஸ் ஸ்டாப் நிழற்கூரையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் சமத்துவபுர குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்தை அரசு செயல்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்தது.உடுமலை ஒன்றியம், பாலப்பம்பட்டி உள்ளிட்ட சமத்துவபுரங்கள் இத்திட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோட்டமங்கலம் குடியிருப்பு கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இந்தாண்டு இக்குடியிருப்பு மேம்பாட்டுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • கல்குறிச்சி சமத்துவபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி ஊராட்சி யில் உள்ள சமத்துவபுரத்தில் வீடுகள், பள்ளிகள், கழிப்பறைகள், நுழைவு வாயில் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைதொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுபட்டி ஊராட்சியில் ரூ.1.84 லட்சம் மதிப்பில் மறுசீரமைத்து புதுப்பிக்கப்பட்ட நூலகத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.1.15 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணியையும், கம்பிக்குடி ஊராட்சியில் ரூ.4.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை யை(நர்சரி)யும், வினோபா நகரில் பிரதான் மந்திரி ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் பார்வை யிட்டார்.

    சத்திரபுளியங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7.68 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளையும், முடுக்கன்குளம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும், சூரனூர் ஊராட்சி, உவர்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையினையும், உவர்குளம் கண்மாயில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.55 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நீர்உறிஞ்சி குழிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு இந்த பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உதவி பொறி யாளர்கள் சுப்பையா, காஞ்சனாதேவி, காரியா பட்டி ஊராட்சி ஒன்றியகுழு துணைத்தலைவர் ராஜேந்தி ரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன், பிரமுகர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×