search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலி உயர்வு"

    • அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.
    • சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடைமுறை கூலியில் இருந்து 26 சதவீதம் உயர்த்தி வழங்குவது.

    ஈரோடு:

    ஈரோடு கூட்ஸ் டிரா ன்ஸ்போர்ட் அசோசியேசன், ஈரோடு ரெகுலர் லாரி சர்வீஸ் கீழ் 5,000-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    இவர்களுக்கு 6 ஆண்டாக கூலி உயர்வு வழங்காததால் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கால வரையற்ற வேலை நிறுத்த த்தில் சுமை தூக்கும் தொழி லாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து அறிந்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீ ர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி சுமைதூக்கும் தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக ஒரு குழு அமைத்து, அந்த குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் இரு தரப்புக்கும் பாதிப்பின்றி கூலி உயர்வு வழங்கப்படும் என உறுதி யளித்தார்.

    இதன்பேரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் கூட்டு டிரான்ஸ்போர்ட் அசோசியேசன், ரெகுலர் லாரி சர்வீஸ் அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் பிங்களன், செந்தில்ராஜா, கார்த்தியும், தொழி லாளர்கள் சார்பில் முன்னா ள் எம்.எல்.ஏ தென்னரசு, பெரியார் நகர் மனோகரன், எல்பி.எப். தங்கமுத்து, கோபால், சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜா உள்பட பலர் பங்கேற்று ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தில் பணி செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடைமுறை கூலியில் இருந்து 26 சதவீதம் உயர்த்தி வழங்குவது.

    ஈரோடு ரெகுலர் சர்வீஸில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 21 சதவீத கூலி உயர்வு வழங்குவது என்றும் உறுதி செய்யப்பட்டது. பிற வேலைகளுக்கு புதிய கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    புதிய கூலி உயர்வு வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 2026 ஜூலை மாதம் 30-ந் தேதி வரையிலான 3 ஆண்டுகள் அமலில் இரு க்கும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

    ஒப்பந்தத்தின்படி இரண்டாவது ஆண்டுக்கான 7 சதவீத கூலி உயா்வு வரும் ஜூன் 6-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

    திருப்பூர்:

    பவா்டேபிள் தொழிலாளா்களுக்கான 7 சதவீத கூலி உயா்வை வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பவா்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து அச்சங்கத்தின் செயலாளா் கே.எஸ்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் பவா்டேபிள் தொழிலாளா்களுக்கு கடந்த 2022 ஜூன் 6-ந் தேதி 4 ஆண்டுகளுக்கான புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயா்வும், அதற்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என மொத்தம் 38 சதவீத கூலி உயா்வுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

    இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டாவது ஆண்டுக்கான 7 சதவீத கூலி உயா்வு வரும் ஜூன் 6-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆகவே தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினா்கள், தையல் நிலைய உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்களும் தங்களது பவா்டேபிள் தொழிலாளா்களுக்கான 7 சதவீத கூலி உயா்வை ஜூன் 6-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 29.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பித்தளை, செம்பு, வார்ப்பு பாத்திரங்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து பின்னர் உற்பத்தியாளர்களுடன் பேசி முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமர–ம்) செந்தில்குமரன் முன்னிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பாத்திர வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் மனோகரன், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார் உள்ளிட்டவர்களும், தொழிற்சங்கம் சார்பில் கண்ணபிரான், தேவராஜ் (ஏ.டி.பி.), குப்புசாமி, குருணாமூர்த்தி (சி.ஐ.டி.யு.), வேலுச்சாமி, ரத்தினசாமி (எல்.பி.எப்.), செல்வராஜ், நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), திருஞானம், அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), பரமேஸ்வரன், அசோக் (ஐ.என்.டி.யு.சி.), சீனிவாசன், லட்சுமிநாராயணன் (பி.எம்.எஸ்.), அர்ஜூனன், ஆறுமுகசாமி (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்கப்பட்டது. தொழில் அமைதி ஏற்படுத்தும் வகையில் இருதரப்பினர் ஏற்றுக்கொண்டபடி ஒப்பந்தமானது. அதன்படி பித்தளை, செம்பு, வார்ப்பு அயிட்டங்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலியுடன் 22.5 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். பித்தளை ஈயப்பூச்சு அயிட்டமான டேசாவுக்கு 29.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இந்த கூலி உயர்வு 1-1-2023 முதல் 3 ஆண்டுகளுக்கு அதாவது 31-12-2026 வரை அமலில் இருக்கும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதுபோல் எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருப்பூர் வட்டார முழு கூலி பட்டறைதாரர்கள் சங்கம் தரப்பில் தலைவர் துரைசாமி, துணை தலைவர்கள் குமாரசாமி, மதிவாணன், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கம் தரப்பில் வேலுச்சாமி (எல்.பி.எப்.), ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), தேவராஜ் (ஏ.டி.பி.), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), அசோக் (ஐ.என்.டி.யு.சி.), அர்ஜூணன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    எவர்சில்வர் பாத்திர தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்போது 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் கூலியுடன் சேர்த்து 16 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். இந்த கூலி உயர்வு 1-1-2023 முதல் வருகிற 31-12-2026 வரை அமலில் இருக்கும் என்று ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    • நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.


    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மே ளன தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவு தொழில் என்பது நூற்றாண்டு பாரம்பரிய மிக்க அரிய குடிசை தொழில். சிறு தொழிலாகும். தற்சமயம் கைத்தறி நெசவு கூட்டுறவு அமைப்பின் கீழ் அரசை நம்பி மட்டுமே நடந்து வருகிறது.

    தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நவீன விசைத்தறிகளின் வருகை யால் கைத்தறி நெசவை மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

    தொழில் துறை மாற்ற ங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றளவும் கிடைக்க பெறாததும் கைத்தறி நெசவின் அழி விற்கு முக்கிய காரணமாகும்.

    எனவே நெசவாளர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்று தர வேண்டியது நம் எல்லோ ருடைய முக்கிய கடமை யாகும். நெசவாளர்களுக்கு கூலியை அரசுதான் வழங்கி வருகிறது.

    நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    நெசவாளர் சங்கங்களில் நிதி ஆயிரத்திலிருந்து தான் கூலி வழங்கபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். நெசவாளர் ஊதியத்திற்கும், அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் எதற்காக ஊதிய உயர்வு வழங்கும் நிலையை அரசு தன்கட்டுப் பாட்டில் வைத்து கொண்டு உள்ளது.

    ஊதிய உயர்வை வழங்கும் நிலையை அரசு தன் கட்பாட்டிலிருந்து மாற்றி கூட்டுறவு சங்கங் களின் மண்டல அல்லது சரக அளவில் முடிவு செய்து கொள்ள உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட தங்களை அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் கைத்தறி நெசவா ளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்க அரசானை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.

    தற்சமயம் தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்வித மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.

    கடந்த காலங்களில் மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் மூலம் ஆண்டு ஒன்றிக்கு ரூ.30 ஆயிரம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.

    தற்சமயம் கைத்தறி நெசவில் ஈடுபட்டு உள்ளவர்கள் 60 வயதை நெருங்கியவர்களும் அதனை தாண்டியவர்களும் உள்ளனர்.

    மருத்துவ செலவினங்களுக்காக மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    இதை அறிந்து தான் தமிழக அரசே நெசவாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடைமுறை படுத்த கடந்த ஆண்டே அறிவிப்பு வழங்கி இருந்தது.

    எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி அரசைமட்டும் நம்பி வாழும் தமிழக கைத்தறி நெசவா ளர்கள் குடும்பங் களை காப்பாற்ற வேண்டுகி–றோம்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விதை, உரம், கூலி உயர்வால் கரிமூட்டம் தொழிலுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர்.
    • பெரும்பாலான விவசாயிகள் இதை ஒரு விவசாயம் சார்ந்த தொழிலாகவும் செய்து வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் இடுபொருள், உரம் விலை உயர்வால் விவசாயத்துக்கு அடுத்ததாக வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாக விளங்குகிறது கரி மூட்டம். இது விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். இத்தொழிலுக்கு பிரதான மூலப்பொருளாக காட்டு கருவேல மரங்கள் பயன்டுகின்றன.

    இது குறித்து விவசாயி விஜயன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவா டானை வட்டம் தமிழகத்தின் இரண்டாவது நெல் களஞ்சியமாக விளங்குகிறது. இங்கு சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.அத்தோடு அபிராமம், பரமக்குடி, முதுகுளத்தூர் , போகலூர், நயினார்கோவில், கடலாடி, சாயல்குடி கமுதி, ஆர்.எஸ்.மங்களம், திருப்புல்லாணி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் விவசாயம் பயிரிடப்படுகிறது.

    ஆனால் விவசாயத்தில் போதிய லாபம் இல்லை. மேலும் விதை நெல், உரம், விவசாய கூலி உயர்வு காரணமாக விவசாயம் நலிவடைந்துள்ளது. இதன் காரணமாக பலர் விவசாயத்தை கைவிட்டு கரிமூட்டம் ேபாடும் தொழிலுக்கு மாறி வருகின்றனர். மாவட்டத்தின் வறட்சியான சூழ்நிலையிலும் வளரக்கூடிய காட்டு கருவேல மரங்களை வெட்டி விறகு களை சேம்பர், காளவாசல் போன்ற செங்கல் தயாரிக்கும் சூளைக்கும் மேலும் சின்ன விறகுகள் தூர்கட்டைகளை அடுக்கி மூட்டம் போட்டு கரிகளை மூட்டையாக கோயமுத்தூர், திருப்பூர், நாமக்கல், சேலம் போன்ற இடங்களுக்கு சாயப்பட்டறை களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அதிக லாபம் கிடைக்கிறது இதனால் விவசாயத்திற்கு பதிலாக மாற்று தொழிலாக கரிமூட்ட தொழில் செய்யவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கரிமூட்ட தொழில் செய்யும் செல்வராஜ் கூறும்போது, விவசாயப்பணிகள் இல்லாத காலங்களில் கரிமூட்டம் போட்டு வருமானத்தை ஈட்டி வருகிறோம். ஏழ்மை நிலையிலும் விவசாயிகள் கருவேல மரங்களை வெட்டி விறகுகளாகவே பிற மாவட்ட, மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். கரிமூட்டம் போடுவதற்கு உடல் உழைப்பே மூலதனம். எனவே விவசாயிகள் கரிமூட்ட தொழிலை வாழ்வதாராமாக கொண்டுள்ளனர். தரிசு நிலங்களில் உள்ள கருவேல மரங்களை வெட்டி விறகுகளை அடுக்கி கரிமூட்டம் போடுகின்றனர். அதன்மூலம் உருவாகும் கரிகளை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங் களுக்கும் விற்பனைக்காக அனுப்புகின்றனர். இதனால் கோடைகாலங்களில் செய்து வந்த கரி மூட்ட தொழிலை மழை காலங்களிலும் செய்து தற்போது விவசாயத்திற்கு மாற்று தொழிலாகவும் விவசாயிகளுக்கு இது வாழ்வாதாமாக உள்ளது.

    பெரும்பாலான விவசாயிகள் இதை ஒரு விவசாயம் சார்ந்த தொழிலாகவும் செய்து வருகின்றனர். விறகுகளை ஒரு டன் ரூ.3000 முதல் 4000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கரிமூட்டம் போடுகிறோம். அதிலிருந்து 15 முதல் 20 மூட்டைகள் வரை கிடைக்கும் கரிகளை மூட்டை ரூ.1000 வரை விற்பனை செய்கிறோம். இதனால் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயத்தைவிட இப்பகுதி மக்கள் கரிமூட்ட தொழிலை செய்து வருகிறோம் என்றார்.

    விவசாயமும், விவசாயிகளும் நாட்டின் முதுகெலும்பு என்று இந்திய சுதந்திரம் அடைந்ததிலிருந்து மத்திய-மாநில அரசுகள் சொல்லி வந்தாலும் விவசாயம் சார்ந்த எந்த உருப்படியான திட்டங்களும் நிரந்தரமாக இல்லை. அதே போல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்பது இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது. அதிக அளவில் விவசாயிகளும் விவசாயமும் நிறைந்த தமிழகத்தில்தான் விவசாயத்திற்கு மாற்றாக காட்டு கருவேல விறகுகளை வெட்டி கரிமூட்டத்தொழில் செய்கிறார்கள் என்பது வேதனையான விசயமாகும்.

    வருடம் தவறாமல் விதைக்கும், உரத்திற்கும் விலையேற்றம் வருகிறதே தவிர அதை வாங்கி வேளாண்மை செய்து விவசாயி விற்கும் பொருளுக்கு மட்டும் விலையேற்றம் வருவதில்லை.

    • நைஸ் ரக கைத்தறி நெசவாளர்களுக்கு 40 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.
    • வாடகை உயர்வு காரணமாக மிக சிரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .

    மதுரை

    மதுரை அனைத்து நைஸ்ரக கைத்தறி தொழிற்சங்க ஐக்கிய குழு தலைவர் கே .என் .கோபிநாத் ,செயலாளர் என்.ஆர்.சுதர்சன், பொருளாளர் ஏ.எஸ்.ரவீந்திரன், இணைச் செயலாளர் டி.ஆர்.பத்மநாபன், துணை த்தலைவர்கள் ஈஸ்வரன், ஜெகன் நாதன், துணை செயலாளர் தாமோதரன் ஆகியோர் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை டவுன் ,மதுரை புறநகர் ,கைத்தறி நகர், சக்கிமங்கலம், வண்டியூர், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன் நகர், கடச்சனேந்தல், சீனிவாசா காலனி, எஸ் .கே .டி .நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ் ரக கைத்தறி ஜவுளி ரகமான வேஷ்டி ,கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யும் நெசவு தொழிலாளர்கள் உள்ளனர்.

    அவர்கள் தற்போது அத்வாசியமான பொருட்களின் கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக மிக சிரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .

    மாற்று வேலை வாய்ப்பு இன்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நெசவு தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் போனஸ் உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் வருகிற 23.10.2022 அன்றுடன் காலாவதி ஆகிறது.

    எனவே வருகிற தீபாவளி பண்டிகை (24.10.2022)-ந் தேதி முதல் கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 40 சதவீதம் கூலி உயர்வு, தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×