search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Powertable workers"

    ஒப்பந்தத்தின்படி இரண்டாவது ஆண்டுக்கான 7 சதவீத கூலி உயா்வு வரும் ஜூன் 6-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

    திருப்பூர்:

    பவா்டேபிள் தொழிலாளா்களுக்கான 7 சதவீத கூலி உயா்வை வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பவா்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து அச்சங்கத்தின் செயலாளா் கே.எஸ்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் பவா்டேபிள் தொழிலாளா்களுக்கு கடந்த 2022 ஜூன் 6-ந் தேதி 4 ஆண்டுகளுக்கான புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயா்வும், அதற்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என மொத்தம் 38 சதவீத கூலி உயா்வுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

    இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டாவது ஆண்டுக்கான 7 சதவீத கூலி உயா்வு வரும் ஜூன் 6-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆகவே தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினா்கள், தையல் நிலைய உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்களும் தங்களது பவா்டேபிள் தொழிலாளா்களுக்கான 7 சதவீத கூலி உயா்வை ஜூன் 6-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×