search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடைப்பந்து போட்டி"

    • மண்டல அளவிலான 11-வது கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
    • இப்போட்டியில் 9 கல்லூரிகள் பங்குபெற்றன.

    வடவள்ளி,

    ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறி யியல் கல்லூரியில் அண்ணா பல்கலைகழகத்தின் சார்பாக மண்டல அளவிலான 11-வது கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தலைவர் ஆர்.முருகேசன் மற்றும் துணைத்தலைவர் பி.தமிழரசி முருகேசன் பங்கேற்றனர். இப்போட்டியில் 9 கல்லூரிகள் பங்குபெற்றன. அவற்றுள் முதலாவதாக குமரகுரு பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 50 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.

    கே.ஜி.ஐ.எஸ்.எல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 42 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். ஜி.சி.டி. பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் நான்காம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

    ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜமூர்த்தி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.  

    • நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வத்தலக்குண்டு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயசிங் கலந்துகொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.இ. -பள்ளியில் பழனி, திண்டுக்கல், ஓடடன்சத்திரம் கொடைரோடு, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வத்தலக்குண்டு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயசிங் கலந்துகொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினார்களாக திண்டுக்கல் கூடைப் பந்தாட்ட கழக தலைவர் செண்பக மூர்த்தி, துணை செயலாளர் மருதன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டியில் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கயல்விழி முன்னிலை வகித்தார். ரியா அருண், கார்த்திகா, ஆஷித்தா, ஹேமாஸ்ரீ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன.
    • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் கிளப் 62-31 என்ற புள்ளி கணக்கில் முகப்பேர் கிளப்பை தோற்கடித்தது.

    சென்னை:

    மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 19-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்குபிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நேற்று தொடங்கியது. அமெட் பல்கலைக்கழக இணைவேந்தர் திருவாசகம், மீஞ்சூர் யூனியன் சேர்மன் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

    போட்டி அமைப்பு குழுவை சேர்ந்த டாக்டர் ஏ.எம்.எம். செல்வராஜ், கே.எத்திராஜ், மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ. கே.கோபி, செயலாளர் எம்.கனகசுந்தரம், துணைத் தலைவர் எஸ்.எஸ்.குமார், பொருளாளர் கே.ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. நேரு ஸ்டேடியத்திலும் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் கிளப் 62-31 என்ற புள்ளி கணக்கில் முகப்பேர் கிளப்பை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எம்.ஆர்.எம். கூடைப்பந்து கிளப் 52-40 என்ற கணக்கில் ஒய் கூடைப்பந்து கிளப்பை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் சாம் கிளப், சென்னை கிளப், விக்னேஸ்வரா கிளப் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    • பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 23-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
    • வரும் 5-ந் தேதி வரை, பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு, பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 23-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டிகள், பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடக்கிறது. தமிழக கூடைப்பந்து கழக ஒப்புதலுடன் நடக்கும் இப்போட்டிகள், முதல் சுற்றில் நாக் அவுட் முறையிலும், தொடர்ந்து, லீக் முறையிலும் நடக்கிறது. தமிழகத்தின் பிரபல அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், ஆண்கள் கூடைப்பந்து பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 11 அணிகள் என மொத்தம் 35 அணிகள் கலந்துகொள்கின்றன.

    நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான முதல் போட்டியில், சென்னை அரைஸ் அணியும், ஈரோடு எல்.எம்.ஆர். அணியும் மோதின. அதில், சென்னை அரைஸ் அணி, 85:67 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இன்று 2-ந் தேதி காலை நடைபெற்ற 2-ம் நாள் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும், கோவை குமரகுரு கல்லூரிஅணியும் மோதின.

    இதில் 99:85 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை குமரகுரு அணி வெற்றிபெற்றது. வரும் 5-ந் தேதி வரை, பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், திருச்செங்கோடு பி.ஆர்.டி., ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்மன் பரந்தாமன், நாமக்கல் கூடைப்பந்து கழக சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி உள்ளிட்டோர் செய்துள்ளனர். 

    • சோழவந்தானில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
    • இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அரசர் சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.

    சோழவந்தான் தி.மு.க. சார்பில் நடந்த இந்த போட்டியில் மதுரை, கோவை, ஏற்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், ெநல்லை, தூத்துக்குடி, வத்தலகுண்டு, திண்டுக்கல், சோழவந்தான் உள்பட 18 அணிகள் கலந்து கொண்டன. இதில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் 3 நாட்கள் நடந்தன.

    நேற்று இரவு இறுதிப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர்கள் (சோழவந்தான்) ஜெயராமன், (வாடிப்பட்டி) பால்பாண்டி, துணைத்தலைவர்கள் லதா கண்ணன், கார்த்தி, ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகரச் செயலாளர் கவுன்சிலர் வக்கீல் சத்ய பிரகாஷ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேட யங்களை வழங்கினார்.

    விழா ஏற்பாடுகளை ஜெ.ஜெ.கூடைப்பந்து போட்டி கிளப் தலைவர் முரளி சோழகர் செய்திருந்தார்.

    • மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற்றது.
    • மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி மற்றும் பெற்றோர்கள் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 2- வது கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரவி, பிரம்மானந்தம், பாலன், கிங்ஸ்டன்,போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், சிரில், ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், பெற் றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வடமதுரை அரசு பள்ளியில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • போலீசார், பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வடமதுரை:

    வடமதுரை போலீஸ் நிலையத்தின் சார்பில் புகையில்லாத உலகம் படைப்போம் விழிப்புணர்வு முகாம் மற்றும் கூடைப்பந்து போட்டி வடமதுரை ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்க்காதேவி தொடங்கி வைத்தார்.

    இதில் வடமதுரை தி.மு.க. நகர செயலாளர் கணேசன், இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன், மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட போலீசார், பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×