search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மாநில கூடைப்பந்து போட்டி: கிங்ஸ், எம்.ஆர்.எம். அணிகள் வெற்றி
    X

    மாநில கூடைப்பந்து போட்டி: கிங்ஸ், எம்.ஆர்.எம். அணிகள் வெற்றி

    • ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன.
    • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் கிளப் 62-31 என்ற புள்ளி கணக்கில் முகப்பேர் கிளப்பை தோற்கடித்தது.

    சென்னை:

    மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 19-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்குபிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நேற்று தொடங்கியது. அமெட் பல்கலைக்கழக இணைவேந்தர் திருவாசகம், மீஞ்சூர் யூனியன் சேர்மன் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

    போட்டி அமைப்பு குழுவை சேர்ந்த டாக்டர் ஏ.எம்.எம். செல்வராஜ், கே.எத்திராஜ், மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ. கே.கோபி, செயலாளர் எம்.கனகசுந்தரம், துணைத் தலைவர் எஸ்.எஸ்.குமார், பொருளாளர் கே.ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. நேரு ஸ்டேடியத்திலும் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் கிளப் 62-31 என்ற புள்ளி கணக்கில் முகப்பேர் கிளப்பை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எம்.ஆர்.எம். கூடைப்பந்து கிளப் 52-40 என்ற கணக்கில் ஒய் கூடைப்பந்து கிளப்பை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் சாம் கிளப், சென்னை கிளப், விக்னேஸ்வரா கிளப் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    Next Story
    ×