search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி மருத்துவமனை"

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK #MamataBanerjee
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே சமயம் கருணாநிதியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் அழுதபடி வருவதை கண்ட தொண்டர்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம் கருணாநிதி குணமடைந்து மீண்டு வரவும் பிரார்த்தனை மேர்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய இன்று சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK #MamataBanerjee
    தமிழகம் முழுவதும் மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KalaignarHealth #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சற்று முன்பு வெளியான காவிரி மருத்துவமனையின் அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதேபோல, வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஆம்னி பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க மத்திய மந்திரி நிதின் கட்கரி, தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். #Karunanidhi #NitinGadkari #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை:

    சென்னை காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக வெளியான தகவல் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீர்படுத்துவதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.



    இதையடுத்து, திமுக கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் காவிரி மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர். அதேசமயம் ஏற்கனவே மத்திய மந்திரி நிதின் கட்கரி கருணாநிதியை சந்திக்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி காவிரி மருத்துவமனைக்கு விரைந்தார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு சென்ற அவர்கள் காவிரி மருத்துவமனையில் இருந்த மு.க ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #Karunanidhi #NitinGadkari #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை:

    தி.மு.க தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதையடுத்து, இன்று காலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள தொண்டர்கள், கழக நிர்வாகிகள் என அனைவரும் காவிரி மருத்துவமனைக்கு வருவதும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதுமாக இருந்தனர். மேலும், கருணாநிதியை சந்திக்க அவரது மனைவி தயாளு அம்மாள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பு அதிகமானது.

    இந்நிலையில், காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்ச்சி காரணமாக நோய்வாய்பட்டு தற்போது காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதியின் உடல்நிலை தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது.

    இந்திய அரசியலின் உயிருடன் இருக்கும் மிக மூத்த தலைவர் ஆதலால் கருணாநிதியை சந்திக்க பல்வேறு அரசியல் தலைவர்களும் சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர்.



    அதன்படி, இன்று முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தார். முக ஸ்டாலினிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த தேவகவுடா, கருணாநிதி 100 ஆண்டுகள் கடந்தும் நலமுடன் வாழ்வார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை காவிரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
    காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பதற்றம் குறைந்தது.

    இந்நிலையில், இன்று வழக்கம் போல் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துமனை சார்பில் எவ்வித அறிக்கையும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. தற்போது மருத்துவமனையில் இருந்த புறப்பட்ட தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படியே கருணாநிதி தற்போதும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக தெரிகிறது.

    முக ஸ்டாலினை தொடர்ந்து துரை முருகனும் செய்தியாளர்களை சந்தித்தார். அவரும் கருணாநிதி தீவிர கண்காணிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில், அவரது உடல்நிலை சீராகி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை:

    இரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் விரைந்தது மற்றும் போலீசாரின் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கருணாநிதிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக மு.க அழகிரி தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi #MKAlagiri
    சென்னை:

    தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி நாட்டில் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.

    இதையடுத்து, மாலை 8 மணியளவில் அழகிரி, உதயநிதி ஸ்டாலின் உட்பட கருணாநிதியின் குடும்பத்தினர் காவிரி மருத்துவமனைக்கு சென்றனர்.



    இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    சற்றுமுன்னர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து, தற்போது மு.க அழகிரியின் இந்த கருத்து தொண்டர்களிடையே உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi #MKAlagiri
    சென்னை காவேரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர்  தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி இன்னும் 2 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இன்றிரவு 8 மணியளவில் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். இந்த மருத்துவ உதவிகளுடன் அவரது உடல்நிலை சீராக உள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    ×