search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஏஎஸ் தேர்வு"

    ஐஏஎஸ் தேர்வில் புளூ டூத் வைத்து காப்பியடித்து கைது செய்யப்பட்ட தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #SafeersKarim
    சென்னை:

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஎஸ், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் புளூ டூத் வைத்து காப்பி அடித்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் கையும் களவுமாக பிடிபட்டார். சபீர் கரீம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். கேரளாவில் அவரது பெயரில் அவருடைய மனைவி ஐஏஎஸ் பயிற்சி அகாடமி நடத்துகிறார்.



    காப்பி அடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்சி, அவரது நண்பரும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனருமான ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சபீர் கரீமிடமிருந்து தேர்வு அறைக்குள் மறைத்துக் கொண்டுசென்ற 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சபீர் கபீர் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், யுபிஎஸ்சி தேர்வாணைய  விசாரணைக்கு பின், சபீர்கரீம் ஐபிஎஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் வரலாற்றில் பதவிநீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை ஆகும். #SafeersKarim
    ஐ.ஏ.எஸ். தேர்வில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் கிராமப்புற இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எவ்வித சார்பும் இன்றி, அனைத்து பணிகளுக்கும், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பணியாளர்களாக நியமனம் செய்கிறது.

    ஆனால் தற்பொழுது பிரதமர் அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் முறையில் ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ மதிப்பெண்களை, யு.பி.எஸ்.சி.யின் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து, இறுதி நியமனப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பணியாளர் நியமனம் தேர்வு மற்றும் தர அடிப்படையில் மட்டும் நடைபெறாமல் ஒரு சில பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் தலையீட்டுக்களுடன் நடைபெறுவதற்கு வழிவகுக்கும்.

    கிராமப்புற இளைஞர்கள் மற்றும் எளிமையான பின்புலத்தில் இருந்து தேர்ச்சி பெறுகின்ற இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த மாற்றம் சில உயர் நிலையிலிருப்பவர்கள். தங்களைச் சார்ந்தவர்களுக்கு சலுகையளிப்பதற்கும் வழிவகுக்கும்.

    ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ எனும் இந்த பயிற்சியில் இந்தி மொழித்தேர்வும் நடைபெறுவதால் இந்தி மொழி பேசாத இளைஞர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ என்பது முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியைத் தவிர்த்து மேலும் 3 இடங்களில் நடைபெறும். பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றத்தின் மூலமாக அனைத்து இடங்களிலும் உள்ள தேச்சி பெற்றவர்களை சரிவர மதிப்பீடு செய்ய முடியாது.

    1978-ல் கோத்தாரி கமிட்டியால் பரிந்துரை செய்யப்பட்டிருந்த இதுபோன்ற மாற்றத்தை அன்றைய ஜனதா கட்சி அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. எனவே மத்திய அரசு நடப்பில் உள்ள யூ.பி.எஸ்.சி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையிலும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீட்டு முறையிலும், எவ்வித மாறுதல்களும் செய்யக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். #Nitishkumar #IAS
    பாட்னா: 

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் சமீபத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த நிலை தேர்வுக்கு தயாராகும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    இதேபோல், பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர். #Nitishkumar #IAS
    ×