search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் மாணவர்"

    • மாணவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது.
    • சூரியபிரகாசை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த உடைந்த ஊசி அகற்றப்பட்டது.

    அம்பத்தூர்:

    பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மகன் சூரிய பிரகாஷ் (21). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சூரியபிரகாஷ் தடுப்பூசி போட சென்றார். அவருக்கு நர்சு ஒருவர் தடுப்பூசியை இடுப்பில் போட்டதாக தெரிகிறது. அப்போது ஊசி உடைந்து உடலுக்குள் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர்கள் உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் சூரியபிரகாசை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த உடைந்த ஊசி அகற்றப்பட்டது.

    உரிய சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்திலும், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மாணவரின் தந்தை புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • தந்தைக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்து விட்டு தென்னந்தோப்பில் கிடந்தார்
    • சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    மேலகிருஷ்ணன் புதூர் அருகே உள்ள நைனா புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரவீன் (வயது 24). இவர் பி.இ.4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை பிரவீன் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறிவிட்டு சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் பிரவீன் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பிரவீன் தந்தை முருகனுக்கு போன் செய்தார். அப்போது பக்கத் தில் உள்ள தென்னந்தோப்பில் அரளி விதையை தின்று விட்டதாக கூறினார். இதை கேட்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே முருகன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அங்கு பிரவீன் தென்னந்தோப்பில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி பிரவீன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான பிரவீன் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தனுஷ் சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவத்தன்று தனுஷ் பேனில் தனது லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    நீலகிரி மாவட்டம் இடுகட்டி தோட்டானி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் தனுஷ் (வயது 18). இவர் பெருந்துறை துடுப்பதி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தனுஷ் சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை தனது விடுதி அறை நண்பர்களுடன் சேர்ந்து கேண்டினில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். மற்ற மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல தனுஷ் மட்டும் தான் விடுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.

    இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் தனுஷ் வகுப்புக்கு வராததால் வகுப்பு ஆசிரியர் மூலம் போன் செய்து பார்த்துள்ளனர். பலமுறை போன் செய்தும் எடுக்காததால் விடுதி வார்டன் மகேந்திரகுமார் மற்றும் காவலாளியாக வீரமணி ஆகியோர் தனுசு அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளனர். அங்கு தனுஷ் ரூம் உள்புறமாக தாழ் போடப்பட்டு இருந்தது.

    உடனடியாக அவர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, தனுஷ் பேனில் தனது லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தனுஷை கீழே இறக்கி பார்த்துள்ளனர். அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

    உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு பெருந்துறை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஈச்சனாரியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
    • விடுதியில் இருந்த போது திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார்.

    கோவை

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவரது மகன் அஜய்குமார் (வயது 19).

    இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று விடுதியில் இருந்த போது திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜய்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×