search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர் பன்வாரிலால் புரோகித்"

    சென்னையில் சன்சாத் ரத்னா விருது வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எம்பிக்கள் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    சென்னை:   

    பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்பிக்களை கவுரவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த பிரைம் பாயின்ட் பவுண்டேசன், பிரசன்ஸ் இ மேகசின் சார்பில் ‘சன்சாத் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுகின்றன.

    இந்த ஆண்டுக்கான சன்சாத் ரத்னா விருது வழங்கும் விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்கினார்.

    மக்களவையின் 9 எம்பிக்கள் மற்றும் ஒரு நிலைக்குழு உறுப்பினர் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றனர். அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:

    எம்.பி.க்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சொகுசு காரில் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல. நான் எம்.பி.யாக இருந்தபோது, சிறிய காரில்தான் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தேன். எளிமையாக இருந்து சேவையாற்ற வேண்டும்.

    அமெரிக்காவில் செனட் உறுப்பினர்கள், சொந்த பிரச்சினைகளை பேசாமல், கொள்கைகளை உருவாக்குவது போல,  இந்தியாவிலும்  நாடாளுமன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

    அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல உறுப்பினர்கள் பாடுபட வேண்டும். எம்.பி.க்கள் தங்களது தொகுதி மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்தார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். #DMK #MKStalin #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி கிடைக்காததால் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

    பின்னர் சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பேரிடர் 15.11.2018 நள்ளிரவில் நிகழ்ந்தது. மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டும், கஜா பேரிடர் நிதியாக 46 நாட்கள் கழித்து - அதுவும் உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மத்திய அரசு 1,146 கோடியே 12 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக கேட்ட 1500 கோடியைக் கூட பெற முடியாமல் அ.தி.மு.க. அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தோல்வி அடைந்துள்ளார்.

    இதைக் கேட்டு பெறுவதற்கான துணிச்சல் இல்லாமல் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரத் தகுதி இல்லாதவராக எடப்பாடி பழனிசாமி ஆகி விட்டார். “அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தவறியதால் இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அ.தி.மு.க. அரசின் தொழில் துறை அமைச்சர் சம்பத் தோல்வி கண்டிருக்கிறார்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு மேலாகியும் அதற்கு நிரந்தர தலைவர் நியமிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல், தமிழக விவசாயிகளுக்கு பெரும் கேடு விளைவித்து, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு இதுவரை தடை பெற முடியாமல்- மத்திய அரசு அனுமதியை திரும்பப் பெற வைக்க முடியாமலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்து இருக்கிறார்.

    புதிய எச்.ஐ.வி. தொற்றை தடுப்போம் என்று கூறிய அ.தி.மு.க. அரசு இன்றைக்கு அரசு மருத்துவமனையிலேயே எச்.ஐ.வி. ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய கொடுமை அரங்கேறி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் படுதோல்வி அடைந்து இருக்கிறார்.

    கார்ப்பரேசன் ஆபிசா அல்லது கரெப்சன் ஆபிசா என்று உயர்நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு தாண்டவமாடும் ஊழலால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தோல்வியடைந்து நிற்கிறார்.

    விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடும் விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண முடியாமல் மின்துறை அமைச்சர் தங்கமணி தோல்வி அடைந்து விட்டார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.


    இவர்களுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ அரசு நிர்வாகத்தை நடத்த முடியாமல், மத்திய அரசிடம் மாநில உரிமையை பாதுகாத்திட முடியாமல், குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரைக் கூட நீக்க முடியாமல், சட்டம்-ஒழுங்கை அறவே காப்பாற்ற முடியாமல், டெண்டர் ஊழல் என்ற அளவில் முதல்-அமைச்சர் பொறுப்பிலேயே முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார். ஒரு நாட்டின் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என அனைவர் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்து நிற்கிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்பால் எடுக்கப்பட்ட பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைச்சரவை. இவை அனைத்துக்கும் மேலாக தங்கள் கட்சித் தலைவரை இந்த நாட்டுக்கு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை காக்கத் தவறி இருக்கிறார்கள்.

    அவர் மரணத்தில் மர்மம் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தான் அப்போதே சொன்னேன். இன்றைக்கு சட்ட அமைச்சராக இருக்கக் கூடிய சி.வி.சண்முகம், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ராமமோகன்ராவ், தற்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

    ஜெயலலிதாவையே காப்பாற்ற முடியாத இவர்கள், கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்ற போகிறார்கள்? இப்படி எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்ட அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் அடங்கிய அ.தி.மு.க. அரசின் ஆளுநர் உரையால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.

    பதிலாக தமிழகத்தின் முன்னேற்றமும், வளர்ச்சியும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அ.தி.மு.க. அரசின் இந்த ஆளுநர் உரையைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த னர்.

    வெளிநடப்பு செய்தது குறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மக்கள் இன்னும் அதில் இருந்து மீண்டு வரவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய வகையில் இழப்புத் தொகை வழங்கவில்லை. மத்திய அரசு மிகக் குறைந்த அளவுதான் நிதி வழங்கியுள்ளது. இது கடலில் பெருங்காயத்தை அளித்தது போன்றதாகும். விவசாயிகளுக்கான எந்த அறிவிப்பும் கவர்னர் உரையில் இல்லை. இவற்றை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

    ஜெயலலதா மறைவுக்கு பிறகு அவரது மறைவு குறித்து சட்டத்துறை அமைச்சர் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். அவரது மரணத்தில் ஏதாவது காரணம் இருந்தால் ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெளிநடப்பு செய்த முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் நிருபர்களிடம் கூறுகையில், “கஜா புயலுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசும் அதை பெற தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய விவகாரத்தில் தமிழகஅரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதைகண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார். #DMK #MKStalin #TNAssembly
    தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். #BanwarilalPurohit #GajaCyclone
    நாகை:

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றவண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.

    இந்நிலையில், புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட முடிவு செய்த ஆளுநர் பன்வாரிலால் நேற்று இரவு சென்னையில் இருந்து நாகைக்கு புறப்பட்டார். இன்று காலை நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



    பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஆளுநர் ஆய்வு செய்தார். பின்னர் மற்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். #BanwarilalPurohit #GajaCyclone
    துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாகவும் இது தனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். #BanwarilalPurohit #ViceChancellors
    சென்னை:

    சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



    தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது. பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டது. துணைவேந்தர் நியமனத்தில்  முறைகேடு நடந்ததைக் கண்டு நான் வருத்தமடைந்து, அதை மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படையில்தான் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆளுநரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #BanwarilalPurohit #ViceChancellors
    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். #MKStalin #Governor #ITRaid
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். அவருடன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை குறித்து, நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் குறித்து விசாரிக்க வேண்டும்; சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.



    நாங்கள் அளித்த கோரிக்கை மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதி அளித்தார். ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Governor #ITRaid

    ×