search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் செந்தில்பாலாஜி"

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள்.
    • செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர்.

    பல்லடம் :

    பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள். இதே திமுக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது, செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர். ஊழல் செய்தவர் இன்று திமுக கட்சியில் சேர்ந்து விட்டதால் அதை மறைத்து விட்டீர்கள், மறந்து விட்டீர்கள்.எதையும் சந்திக்க தயார் என சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென்று அன்று இரவே எப்படி உடல் நிலை சரியில்லாமல் போனார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

    வழக்கை அவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
    • தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் செயல்திறனை மேற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.

    இதில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலுரை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கடந்த 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பழுதடைந்த மின் மாற்றிகளை மாற்றம் செய்து மின்சாரத்துறை சாதனை படைத்துள்ளது. மின்னகம் மூலம் 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டன. இதில் 99.5 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு மின்வாரியத்தின் கடன் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருந்தது. 2 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.14 ஆயிரம் கோடி கடன் சேர்ந்துள்ளது. இதற்கு காரணம் வாங்கப்பட்ட கடன்களுக்கு செலுத்துகின்ற வட்டி ஆகும். இந்த கடன்களை முழுமையாக குறைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்.

    மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டிய தேதி 1.12.2019 ஆகும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்ததை ஏற்படுத்தி இருக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 7 முறை தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவில் தொழிற்சங்கங்கள் விரும்ப கூடிய வகையில் திருப்திகரமான ஒப்பந்தம் ஏற்படும். அதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய வடிவமைப்புடன் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி வீடுகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் மின்சாரத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    * நடப்பு 2023-ம் ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், சாதாரண வரிசை, சுயநிதி திட்டம், சிறப்பு முன்னுரிமை, தட்கல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டங்களின் மூலம் வழங்கப்படும்.

    * அரசு-தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.

    * தமிழ்நாட்டில் 72 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும்.

    * தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.

    * வடசென்னை அனல்மின் நிலையம் 1, 2-ன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் செயல்திறனை மேற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * மேட்டூர் அனல்மின் நிலையம் 1, 2 செயல் திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிவதற்கு டிரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.

    * நெல்லை, ஸ்ரீரங்கம், கோவை, அவிநாசி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேர் ஓடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.

    * தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் சென்னை தலைமை செயலக வளாகம், பள்ளி கல்வி இயக்குனரகம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 100 கி.வாட் திறன் கொண்ட 2 சூரிய சக்தியின் மூலம் இயங்கும் வாகன மின்னூட்டல் நிலையங்கள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

    • தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
    • தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை கே.கே.நகர் துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் தேங்கினாலும் மின் வினியோகம் பாதிக்காதவாறு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகள், ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 10 துணை மின் நிலையங்களில் உள்ள 16 மின்மாற்றிகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

    கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இப்போது அந்த இடத்திலிருந்து 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. சீரான மின் வினியோகம் செய்வதற்காக 2 ஆயிரத்து 700 பில்லர் பாக்ஸ் தரையிலிருந்து 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி சீரான மின்வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1,440 பேரும், இரவு நேரங்களில் 600 பேரும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையை பொறுத்துவரை 1,800 பீடர்கள் மொத்தம் இருக்கிறது. அதில் ஒன்று கூட மின்வினியோகம் நிறுத்திவைக்கப்படவில்லை. 100 சதவீதம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எல்லா பகுதியிலும் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வடகிழக்கு பருவமழையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக ஏறத்தாழ 18 ஆயிரத்து 380 மின்மாற்றிகள் கையிருப்பு உள்ளன. அதே போல 5 ஆயிரம் கி.மீ அளவுக்கு மின்கடத்திகள் கையிருப்பு உள்ளன.

    1.5 லட்சம் மின்கம்பங்கள் உள்ளன. கூடுதலாக 50 ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கிறது. எனவே, மின்வினியோகத்தை பொறுத்தவரைக்கும் தமிழகம் முழுவதும் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் பெய்த மழையால் எந்தவித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்வினியோம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முதல்-அமைச்சரின் வழிக்காட்டுதலின்படி எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    மின்கம்பிகளை பொறுத்தவரைக்கும் 1,800 கி.மீ அளவுக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர், இந்த வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு ஆய்வு கூட்டங்களை நடத்தி ஒவ்வொரு துறைகளில் என்னென நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படி, நடவடிக்கைகள் மேற்கொண்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து, சீரான மின் வினியோகம் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
    • மத்திய அரசுக்கு தமிழக மின்வாரியம் ரூ.67 கோடி நிலுவைத்தொகையை பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது.

    சென்னை:

    மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வு கூட்டம், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார்.

    ஆய்வு கூட்டம் நடந்து முடிந்ததும், அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து, சீரான மின் வினியோகம் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மின் வினியோகத்துக்கு தேவையான உதிரிபாகங்களை தயார்நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு தமிழக மின்வாரியம் ரூ.67 கோடி நிலுவைத்தொகையை பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு விடுவித்த தொகை குறித்த விவரங்கள் அதில் தெரிவிக்கப்படவில்லை. இப்போது வரை நாம் நிலுவைத்தொகை எதையும் வைக்கவில்லை. தற்போது 10½ நாளுக்கான நிலக்கரி இருப்பு கையில் உள்ளது.

    இந்த ரூ.67 கோடி நிலுவைத்தொகைக்காக நமக்கு வழங்கக்கூடிய மின்சாரத்தை கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது. மின்வாரியத்தில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை கேட்டு இருக்கிறோம். அது வந்தவுடன் அரசு அறிவிப்பின்படி எந்தெந்த பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. நிரப்புமோ, அதன் மூலம் நிரப்பப்படும். மற்ற இடங்களை வாரியம் நிரப்பும்.

    மின்சார கட்டண உயர்வு தொடர்பாக 'டாஸ்மா' அமைப்பு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. தவறான தகவலை தொடர்ந்து தடை வாங்கியிருந்தார்கள். தற்போது மேல்முறையீடு செய்து, இடைக்கால தடையை மின்வாரியம் வாங்கிவிட்டது. இனிமேல் மின்கட்டண உயர்வு என்பது எந்த தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஒழுங்குமுறை ஆணையம் தான் மின்வாரியத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும். அந்த உத்தரவுக்காக மின்வாரியம் காத்திருக்கிறது.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரையில், நிலைக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக கருத்துகள் தெரிவித்தனர். அதனை கருத்தில்கொண்டு, அதனை மட்டும் குறைத்து, பரிசீலித்து இருக்கிறோம். வேறு எதில் குறைக்கவேண்டும் என்பது பற்றியும் அதில் தெரிவித்து ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறோம். ஒழுங்குமுறை ஆணையம் எப்போது நடைமுறைப்படுத்த சொல்கிறதோ, அப்போதில் இருந்து புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.
    • தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர்.

    கோவை:

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின்சார வாரிய நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியினால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம். இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.

    ஆண்டுக்கு 16 ஆயிரத்து 500 கோடி வட்டி செலுத்தும் நிலைமைக்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டது. அப்போது மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மின்சார வாரியம் உற்பத்தி செய்தது.

    மீதி 2 பங்கு மின்சாரத்தை வெளியில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டு தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தவறான பிரசாரம் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர். தமிழகம் மின்மிகை மாநிலம் என்றால் பதிவு செய்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பை வழங்கி இருக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கவில்லை. கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் சில அரசியல் கட்சியினர் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?.

    மேலும் மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளோம். அடுத்த கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மின் கட்டணம் மாற்றத்தின் மூலமாக 2 கோடியே 28 லட்சம் பேருக்கு நிலை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வகையில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மரில் மீட்டர் பொருத்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு டெண்டர் வரை சென்று உள்ளது.

    எனவே மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×