search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vidyut Jamwal"

    • சிவகார்த்திகேயனுடன் வில்லன் நடிகர் மோதும் ஒரு பயங்கர சண்டை காட்சி இதில் இடம் பெறுகிறது.
    • இந்த படத்திலும் வித்யுத் ஜம்வால் வில்லனாக இணைந்து உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK-23 புதிய ஆக்ஷன் படத்தில் சிவகார்த்திகேயன்நடிக்கிறார். கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

    தற்போது இந்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் 3- வது முறையாக இணைந்து உள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ்' இந்த படத்தை தயாரிக்கிறது.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் தொடங்கியது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மணி வசந்த் நடிக்கும் முதல் ஷெட்யூல் முன்னதாகவே முடிவடைந்து உள்ளது. தற்போது பாண்டிச்சேரியில் 2- வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

    இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்க இணைந்து உள்ளார். சிவகார்த்திகேயனுடன் வில்லன் நடிகர் மோதும் ஒரு பயங்கர சண்டை காட்சி இதில் இடம் பெறுகிறது.




    இந்த சண்டை காட்சி பார்வையாளர்களை, ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் எடுக்கப்பட உள்ளது. 'துப்பாக்கி' படத்தில் வித்யுத் ஜம் வாலின் 'வில்லன்' கேரக்டர் ரசிகர்களிடம் சிறந்த பாராட்டு பெற்றது. அந்த படத்துக்கு வில்லன் வேடம் மிக பொருத்தமாக அமைந்தது.

    அதுபோல இந்த படத்திலும் வித்யுத் ஜம்வால் வில்லனாக இணைந்து உள்ளதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.
    • வித்யுத் ஜம்வால் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.

    பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வருபவர் வித்யுத் ஜமால். இவர் பில்லா 2, அஞ்சான் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் இன்று (டிசம்பர் 10) தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், பிறந்தநாளை ஒட்டி நடிகர் வித்யுத் ஜமால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

    இமய மலை தொடர்களில் ஒருவார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில், மூன்று புகைப்படங்களையும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார் என்பது பற்றியும் வித்யுத் ஜம்வால் விளக்கம் அளித்து இருக்கிறார். 14 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வரை வித்யுத் ஜம்வால் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.

     


    ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து காட்டு பகுதியில் யார் உதவியும் இன்றி இயற்கையுடன் ஒன்றி இருக்கும் வகையில், வித்யுத் ஜம்வால் ஏழு முதல் பத்து நாட்கள் வரை காட்டு பகுதியில் தனது உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக கழித்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு இமய மலை பகுதிகளில் நிர்வாணமாக வசித்துள்ளார்.

    இவ்வாறு செய்யும் போது, தன்னால் இயற்கையுடன் ஒன்றி இருக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படி இருக்கும் போது தனக்கு புதுவித சக்தி கிடைப்பதாகவும், இங்கிருந்து கிளம்பும் போது அந்த சக்தியுடன் வீட்டுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்த அனுபவம் தன்னை புதிதாக பிறந்ததை போன்ற அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில், தனது வாழ்க்கையின் அடுத்த பக்கத்திற்கு அவர் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் க்ராக் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 



    பிரபல இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கும் புதிய படத்திற்காக கேங்ஸ்டராக மாறியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். #ShrutiHaasan #Shruti
    புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் பிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 

    இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. 

    பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர், அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்த படப்பிடித்தின் படப்பிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

    ×