search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatening to kill"

    • புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
    • ஏல சீட்டு பணத்தை செலுத்த வில்லை என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை காலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ஏல சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண் ஏல சீட்டு சேர்ந்துள்ளார். இதற்கிடையே முத்தியால் பேட்டையை சேர்ந்த பெண் ஏல சீட்டு தொகையை பெற்றுள்ளார். ஆனால் அதன் பின் ஏல சீட்டு பணத்தை செலுத்த வில்லை என கூறப்படுகிறது.

    சுமார் ரூ.14 லட்சம் வரை அவர் கட்ட வேண்டி இருந்தது. இதனை ஏல சீட்டு நடத்தும் பெண் பல முறை கேட்டும் அந்த பணத்தை அவர் கொடுக்க வில்லை.

    இதனால் அந்த பெண்ணை ஏல சீட்டு நடத்தி வரும் பெண் திட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சீட்டு பணம் எடுத்த அந்த பெண் இது குறித்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் பணி புரிந்து வரும் தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஐ.டி.கம்பெனி ஊழியர் வாட்ஸ்-அப் கால் மூலம் ஏல சீட்டு நடத்தி வரும் பெண்ணை தொடர்பு கொண்டு அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து அந்த பெண் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ கோயம்புத்தூர் ஐ.டி கம்பெனி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே வாலிபரை கடத்தி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பழைய செந்நெல்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது32). முதுகலை பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் பஸ்சில் சென்று வந்த போது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த மாரீஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மாரீஸ்வரியின் கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் தான் அவருக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதனை பயன்படுத்தி மாரீஸ்வரியிடம் இருந்து நகைகளை வாங்கி ரூ.3.50 லட்சத்திற்கு முருகன் அடகு வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பகுதியில் முருகன் நின்று கொண்டிருந்த போது மாரீஸ்வரியின் சகோதரன் மாரீஸ்வரன் அவரது நண்பருடன் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் இருவரும் சேர்ந்து முருகனை இருசக்கர வாகனத்தில் விஜயகரிசல்குளம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாரீஸ்வரியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரும் வந்துள்ளனர். 4 பேரும் சேர்ந்து முருகனை கடுமையாக தாக்கினர்.

    மேலும் மாரீஸ்வரி யுடனான தொடர்பை கைவிட வேண்டும் என்றும், நகைகளை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறி எச்சரித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் காயமடைந்த முருகன் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செயல் அலுவலர் சுப்பிரமணிய–னுக்கும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • வாக்குவாதத்தை தொடர்ந்து துப்புரவு மேற்பார்வையாளர், செயல் அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வில் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ் உட்பட 3 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செயல் அலுவலர் சுப்பிரமணிய–னுக்கும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தை தொடர்ந்து துப்புரவு மேற்பார்வையாளர், செயல் அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து செயல் அலுவலர் சுப்பிரமணியன் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் செயல் அலுவலர் சுப்பிரமணியன் இதுதொடர்பாக சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு புகார் அளித்ததின் பேரில், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷை, தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புது வீட்டில் மது குடித்து ரகளை செய்ததை தட்டிக்கேட்ட கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • வீட்டில் கடந்த சில நாட்களாக சிலர் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசுவது உள்ளிட்ட தகாத சம்பவங்களை செய்து வந்தனர்

    புதுச்சேரி:

    புது வீட்டில் மது குடித்து ரகளை செய்ததை தட்டிக்கேட்ட கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டியாண்டி. இவரது மனைவி புஷ்ப வாணி(வயது28) குட்டியாண்டி கப்பலில் வேலை செய்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சிலர் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசுவது உள்ளிட்ட தகாத சம்பவங்களை செய்து வந்தனர். இதனை அவ்வப்போது புஷ்பவாணி சுத்தம் செய்து விட்டு வருவார்.

    இந்த நிலையில் குட்டியாண்டியும், அவரது மனைவி புஷ்பவாணியும் புதிய வீட்டை பார்வையிட சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மலர்மாறன் மற்றும் முகேஷ் ஆகியோர் இந்த வீட்டில் சிகரெட் புகைத்துகொண்டிருந்தனர். இதனை கணவன்-மனைவி இருவரும் தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த மலர்மாறன் மற்றும் முகேசும் சேர்ந்து அங்கு கிடந்த வானலை எடுத்து புஷ்பவாணியின் தலையில் தாக்கினர். இதனை குட்டியாண்டி தடுத்தப்போது அவரையும் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு மலர்மாறனும், முகேசும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து புஷ்பவாணி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மலர்மாறன் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டிய நபருக்கு 37 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #USman #threateningTrump #killTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்ட். தவறான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நெப்ரஸ்கா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த வழக்கு தோல்வியில் முடிந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெர்ராட், நெப்ரஸ்கா நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் போவதாக தொடர்ந்து மிரட்டினார். மேலும், நீதிமன்ற குமாஸ்தா மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.


    இதைதொடர்ந்து, அவரை மோப்பம் பிடித்து கைது செய்த போலீசார், அரிசோனா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஸ்டீவன் பி லோகன், குற்றவாளி ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்-டுக்கு 37 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    விடுதலைக்கு பின்னர் அவரை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பில் வைத்திருக்குமாறும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். #USman #threateningTrump #killTrump
    சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலான்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி ஆறுமுகத்தாய் (வயது 29). இதே பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் அருள்ராஜ் (20). அருள்ராஜ் ஊரில் உள்ளவர்களிடம் ஆறுமுகத்தாய் பற்றி அவதூறாக கூறி வந்துள்ளார். 

    இதனை ஆறுமுகத்தாய் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அருள்ராஜ் அவதூறாக பேசி ஆறுமுகத்தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். 

    இது குறித்து ஆறுமுகத்தாய் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள்ராஜை கைது செய்தனர்.
    ×