search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார்"

    நாமகிரிப்பேட்டை அருகே தனியார் பஸ்-கார் மோதல்; 4 பேர் காயமடைந்தனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் இருந்து ஒரு கார் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் ஆத்தூரிலிருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. 

    ஆயில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது பஸ்சை கார் முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் மோதிக்கொண்டன.

     பஸ் சாலையோரத்தில் உள்ள தண்ணீர் இல்லாத சிறிய கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். 

    சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு  சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். 
    சேலம் இரும்பாலை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அகே உள்ள மாரமங் கலத்துப்பட்டி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ஹரிபிரகதீஷ் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். 

    இவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. 

    தகவல்அறிந்த இரும்பாலை போலீசார் அங்கு விரந்து சென்று அவரது உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம அரசு ஆஸ்பத்திரிக்கு அனுபபி வைத்தனர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?  என்பது குறித்து போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
    ×