என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசர ஆலோசனை"

    • தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
    • தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.

    பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.

    தொகுதி பங்கீட்டில் நிதீஷ், சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கறார் காட்டுவதால் சிக்கீல் நீடித்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.

    இதனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து அமித்ஷா தலைமையில் பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    • தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
    • அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா 23 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 19 தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டார்கள்.

    கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 பேர் தாமரை சின்னத்தில போட்டியிட்டார்கள்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. 2 ஆண்டுகளுக்கு முன்பே வியூகம் அமைத்து பணியாற்றியது.

    குறிப்பாக சில தொகுதிகளை தேர்வு செய்து தனிகவனம் செலுத்தி தேர்தல் பணியாற்றியது. பா.ஜ.க.வின் வெற்றி கணக்கு தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

    கள நிலவரங்களை ஆய்வு செய்து கூட்டணி கட்சிகள் உள்பட 5 முதல் 10 தொகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.

    குறிப்பாக மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில தலைவர் அண்ணாமலை, ராம.சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பொன் பாலகணபதி உள்ளிட்டவர்களை கட்சி மேலிடம் நட்சத்திர வேட்பாளர்களாக நம்பியது.

    ஆனால் தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இது பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    கூட்டணி பலமின்மை, தேர்தலின்போது சில தொகுதிகளில் தேர்தல் செலவினத்தில் நடந்த முறைகேடுகள் போன்ற சில முக்கிய காரணங்களை தோல்விக்கான அடிப்படை காரணங்களாக கூறினார்கள்.

    இது ஒருபக்கம் இருந்தாலும் முதல் முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை இருந்தது. ஆனாலும் அப்போது பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவீதத்தைவிட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    இதற்கான காரணங்களை டெல்லி மேலிடமும் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் நாளை (புதன்) காலையில் கமலாலயத்தில் கூடுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.கேசவ விநாயகம், ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கிறார்கள். 

    • தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை.
    • சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்க திட்டம் ?

    தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

    தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 228 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
    • மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை.

    மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, பாஜக கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 228 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இதையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அங்கு, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் ? அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    ×