என் மலர்
நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி பெண் பலி"
- திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
- தண்ணீர் வீணாவதை பார்த்து பைப்பை நிறுத்த முயற்சி செய்தார்
கோவை:
கோவை ெபரியநாயக்கன்பாளையம் அடுத்த சாமி செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). டெய்லர். இவரது மனைவி ரோஷினி (33).இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ரோஷினி தனது கணவரின் கடைக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார்.அப்போது வீட்டின் இருகே வந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்தவரின் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டில் இருந்து நீர் வெளியேறி கொண்டு இருந்தது. தண்ணீர் வீணாவதை பார்த்த ரோஷினி அங்கு சென்று தண்ணீர் தொட்டியில் இருந்து பைப்பை நிறுத்த முயற்சி செய்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவர் மோட்டார் வயரை தொட்டார். இதில் திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் ரோஷினி மின்சாரம் பாய்ந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ரோஷினியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸபத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து ெபரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாறைக்குளம் என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 43). தனியார் கம்பெனியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (36). இவர்களுக்கு மாசிலா மணி (15), ஆறுமுகம் (13) என்ற மகன்கள் உள்ளனர்.
இன்று காலை ஆரோக்கியம்மாள் குளித்து விட்டு துணிகளை காய போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது மின்சார வயர் அறுந்து தொங்கியதை கவனிக்காததால் அதில் கைப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.
வீட்டுக்குள் இருந்த கருப்பையா தன் மனைவியின் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவரது மகன் ஆறுமுகமும் ஓடி வந்து தனது தந்தையை பிடிக்க முயன்ற போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.
2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த ஆரோக்கியம்மாள் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






