என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sheesh Mahal"

    • அதிக செலவழித்து ஆடம்பரமாக மாற்றி வாழ்ந்தார் என்று பாஜக தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தது.
    • மார்ச் 31, 2015 முதல் டிசம்பர் 27, 2022 வரை அரவிந்த் கெஜ்ரிவால் மொத்தம் 29.56 கோடி ரூபாய் செலவிட்டார்.

    கடந்த நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 10 வருடமாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. ரேகா குப்தா டெல்லி முதல்வர் ஆனார். ஆம் ஆத்மி தோல்விக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறை சென்றது ஒரு காரணம்.

    இரண்டாவதாக பாஜகவால் முன்னெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஷீஷ்மகால் பிரசாரம். அதாவது, கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது முதல்வர் இல்லத்தை, அதிக செலவழித்து ஆடம்பரமாக மாற்றி வாழ்ந்தார் என்று பாஜக தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தது.

    தங்கத்தில் கழிவறை இருந்ததாகவும் பாஜக கூறியது. இதுதொடர்பாக சிஏஜி அறிக்கை கசிந்ததாகவும் கூறியது. மேலும் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில் 2015 முதல் 2022 வரை முதல்வரின் பங்களாவைப் பராமரிக்க கெஜ்ரிவால் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் செலவிட்டார் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலைச் சுட்டிக்காட்டி, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது, ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முதல்வரின் பங்களாவை பராமரிக்க மார்ச் 31, 2015 முதல் டிசம்பர் 27, 2022 வரை அரவிந்த் கெஜ்ரிவால் மொத்தம் 29.56 கோடி ரூபாய் செலவிட்டார்.

    பங்களாவைப் பராமரிக்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை விசாரிக்க டெல்லி அரசிடம் கேட்போம்" என்றார்.

    • ஷீஷ் மஹாலுக்கு சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஏன் முன்னதாகவே செல்லவில்லை?.
    • ஆம் ஆத்மி தலைவர்கள் டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள்.

    அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, முதல்வர் இல்லம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. முதல்வர் வீட்டில் (ஷீஷ் மஹால்) தங்க முலாம் பூசப்பட்ட கழிவறை உள்ளது. டெல்லி மக்கள் பணத்தில் ஷீஷ் மஹால் கட்டப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி தலைவர்கள் ஷீஷ் மஹாலை பார்வையிடுவதற்காக சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஷீஷ் மஹாலை பார்வையிடச் சென்றது ஊழலில் இருந்து திசை திருப்பும் ஆம் ஆத்மியின் செயல் என டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வீரேந்திர சச்தேவா கூறுகையில் "ஷீஷ் மஹாலுக்கு சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஏன் முன்னதாகவே செல்லவில்லை?. ஆம் ஆத்மி தலைவர்கள் டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள். ஷீஷ் ஊழலில் இருந்து திசை திருப்புவதற்கான முயற்சியை ஆம் ஆத்மி செய்து வருகிறது.

    ஷீஷ் மஹாலை முன்னதாகவே பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு முன்னதாகவே தோன்றவில்லை. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது ஏன் செல்ல முயற்சிக்கிறார்கள். முதல்வர் அதிஷிக்கு ஏபி 17 மதுரா சாலை பங்களா ஒதுக்கப்படும்போது, அவர் ஏன் இன்னொரு பங்களாவை கோருகிறார்?.

    ஷீஷ் மஹாலுக்கு குற்றச்சாட்டில் இருந்து திசைதிருப்பும் வகையில் பிரதமர் வீடு குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்புவது அற்ப அரசியல்.

    இவ்வாறு வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

    • குடிசைகளில் வசிக்கும் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள், டெல்லி ஏன் உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்று
    • பாஜகவின் கேவலமான அரசியலை முழு ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி,பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த சமயத்தில் அரசின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் தங்கியிருந்தபோது அங்கு ரூ.3 கோடி வரை புதுப்பிப்பு பணிகளுக்கு செலவு செய்து சொகுசாக இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை பாஜக முன்னிலைப் படுத்தி பிரசாரம் செய்து வருகிறது.

    கடந்த செப்டம்பரிலேயே கெஜ்ரிவால் அந்த வீட்டை விட்டு வெளியேறியபோதிலும், அது கெஜ்ரிவாலின் ஷீஷ் மகால் [சொகுசு மாளிகை] என பாஜக கூறி வருகிறது. அங்கு  தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருந்ததாகவும் பாஜக கூறியது.

    இந்நிலையில் நேற்று டெல்லி ஜேஎல்என் மைதானத்தில் நடைபெற்ற 'சேரி குடியிருப்பாளர்கள்' மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியின் சேரிகளில் வசிக்கும் மக்களுக்கு அசுத்தமான நீர் வருகிறது.

    குடிசைகளில் வசிக்கும் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள், டெல்லி ஏன் உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்று. கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார்? ஏழைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை வழங்கியுள்ளார்.

     

    இது பிரதமர் மோடியின் உத்தரவாதம், குடிசையில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் நிரந்தர வீடு வழங்கப்படும். அவரது (அரவிந்த் கெஜ்ரிவால்) 'ஷீஷ் மஹாலில்' உள்ள கழிப்பறை சேரிகளை விட விலை அதிகம் என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷா ஜி என்னையும், டெல்லி மக்களையும் மிகவும் அவதூறு செய்துள்ளார். இதற்கு டெல்லி மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள்.

     

    அமித் ஜி குடிசைவாசிகளிடம் நிறைய பொய் சொன்னார். தேர்தலுக்கு பிறகு பாஜக இடிக்கத் திட்டமிட்டுள்ள குடிசை பகுதியில் நான் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறேன். பாஜகவின் கேவலமான அரசியலை முழு ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறேன் என்று தெரிவித்தார். 

    • 2020 தேர்தலில் பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
    • சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது.

    டெல்லி தேர்தல்: 

    70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்குக் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பாஜக 43 இடங்களைக் கைப்பற்றி சுமார் 27 வருடங்கள் கழித்து ஆட்சி அமைக்கிறது.

    22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகளாக தக்கவைத்த ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கோட்டை விட்டது. கடந்த 2020 தேர்தலில் 62 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆதமி ஆட்சி அமைத்தது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.

    ஆம் ஆத்மி - காங்கிரஸ் பிளவு:

    இந்த நம்பிக்கையில் தான் இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காமல் ஆம் ஆத்மி தனித்து களம் கண்டது. ஆனால் கடைசியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி பிரிவு பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.

    பல்வேறு இடங்களில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாஜகவிடம் ஆம் ஆத்மி தோற்றுள்ளது. காங்கிரஸ் இவ்விடங்களில் வாக்குகளை வெகுவாக பிரித்துள்ளது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைந்திருந்தால் ரிசல்ட் மாற அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.

    புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் தொற்றுள்ளார். ஜங்கிபூரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 675 வாக்கு வித்தியசாத்தில் தொற்றுள்ளார்.

    கட்சியின் தோல்வி என்பதையும் தாண்டி அதன் முக்கிய தலைவர்களே தோற்றுள்ளதற்கு காங்கிரசை தவிர்த்து வேறு காரணிகளும் உண்டு.

    ஆம் ஆத்மி மீதான அதிருப்தி:

    2015 மற்றும் 2020 தேர்தல்களில் பெரு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது. மின்சாரம் மற்றும் குடிநீர் சலுகைகள் டெல்லி வாசிகளைப் பெரிதும் கவர்ந்தது.

    இதனால் மத்தியில் பாஜக வென்றபோதிலும் டெல்லியைப் பிடிக்கத் திணறியது. ஆனால் காலப்போக்கில், ஆம் ஆத்மியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், காற்றின் தரம் குறைவு, யமுனை நதி மாசுபாடு ஆகியவை டெல்லி மக்களை தொந்தரவு செய்யத் தொடங்கின.

    மத்தியில் உள்ள பாஜக அரசு தடைகளை உருவாக்குவதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில், வாக்காளர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சாக்குப்போக்காகக் கருதினர். ஆம் ஆத்மி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசுடன் மோதுவதிலேயே கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது. 

     

    மதுபானக் கொள்கை:

    டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் ஆம் ஆத்மி தோல்வியில் முக்கிய பங்காற்றியுள்ளன.

    புதிய கொள்கைபடி மதுபான பாட்டில்களில் '1 வாங்கினால் 1 இலவசம்' போன்ற சலுகைகள் டெல்லியை குடிகாரர்களின் நகரமாக மாற்ற ஆம் ஆத்மி முயல்வதாக பாஜக குற்றம் சாட்ட வழிவகுத்தது.

    மேலும் புதிய மதுபான கொள்கை வகுப்பதில் பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் விசாரணைகள் அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைக் கைது செய்தது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆம் ஆத்மி அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டது.

    பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தார். பல உயர்மட்டத் தலைவர்களின் கைதுகள் ஆம் ஆத்மி கட்சியை வலுவிழக்க செய்தன.

    முக்கிய தலைவர்கள் இல்லாமல் 2020 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மிக்கு சிரமம் ஏற்பட்டது. சிறையிலிருந்து ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் மக்கள் சம்மதம் இல்லாமல் மீண்டும் முதல்வர் ஆக மாட்டேன் என பதவியை ராஜினாமா செய்து அமைச்சர் அதிஷியை முதல்வர் ஆக்கினார்.

    ஷீஷ் மஹால்

    தேர்தலுக்கு முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தொடுத்த அஸ்திரம் 'ஷீஷ் மஹால்'. கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக பிரசாரம் செய்தது. 'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது.

    2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக கூறியது. ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.

     

    இதனையடுத்து ஷீஷ் மகால் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும் அதை நிரூபிக்க தான் தயார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடம்பரமான வாழ்க்கை முறை குறித்தும், பிரதமரின் ராஜ்மகால் இல்லத்தைக் காட்ட பாஜகவுக்கு துணிவு இருக்கிறதா என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

    ஆனால் பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாக பாதித்ததாகத் தெரிகிறது. குறிப்பாக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு எதிரான 'தூய்மையான அரசியல்' என்ற பிம்பத்தை உடைத்து. தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன. 

    • ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.

    'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக குற்றம் சாட்டியது.

    ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.

    பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் இல்லத்தை புதுப்பித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) உத்தரவிட்டுள்ளது.

    பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா அளித்த புகாரின் பேரில், விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய பொதுப்பணித் துறையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், பாஜகவினர் 'ஷீஷ் மகால்' என்று அழைக்கும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதலமைச்சர் இல்லத்தை 'மியூசியமாக' மாற்றுவோம் என்று டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த கெஜ்ரிவாலின் ஆட்சியின் பொது முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.

    பாஜகவின் ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    ×