என் மலர்
நீங்கள் தேடியது "ஷீஷ் மஹால்"
- மற்றவர்கள் 'ஷீஷ்மஹால்' கட்டியதாகக் குற்றம் சாட்டிவிட்டு, தாங்கள் 'ரங்மஹால்' கட்டுவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
- முதல்வரின் குடும்பம் வசிக்க இந்த விரிவான புதுப்பித்தல்கள் மற்றும் மேம்பாடுகள் தேவை என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ரூ. 60 லட்சம் செலவில் புதுப்பிக்க பொதுப்பணித் துறை டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பித்தலில் ஏர் கண்டிஷனர்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பல்வேறு மின்னணு மற்றும் அலங்காரப் பொருட்கள் அடங்கும். இந்த இல்லம் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ராஜ் நிவாஸ் மார்க்கில் அமைந்துள்ளது.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் 'ஷீஷ்மஹால்' என்று பாஜகவால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரேகா குப்தாவின் இல்லப் புதுப்பித்தல் டெண்டர் வெளியாகியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி, ரேகா குப்தாவின் இல்லம் 'மாயாமஹால்' ஆக மாறுகிறது என்று விமர்சித்துள்ளது. மற்றவர்கள் 'ஷீஷ்மஹால்' கட்டியதாகக் குற்றம் சாட்டிவிட்டு, தாங்கள் 'ரங்மஹால்' கட்டுவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
டெண்டரின்படி, இந்த இல்லத்தில் 14 ஏர் கண்டிஷனர்கள், ஐந்து 4K அல்ட்ரா HD LED ஸ்மார்ட் டிவி செட்கள் (நான்கு 55 இன்ச் மற்றும் ஒரு 65 இன்ச்), 10 flood விளக்குகள், சரவிளக்குகள்(chandeliers) , சுவர் விளக்குகள் மற்றும் ஒரு மின்சாரப் புகைபோக்கி ஆகியவை பொருத்தப்படும்.
மேலும், 14 சிசிடிவி கேமராக்கள், ஒரு தடையில்லா மின்சாரம் (UPS) அமைப்பு, 23 ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன்கள், 16 சுவர் ஃபேன்கள் மற்றும் ஆறு கீசர்கள் ஆகியவை இடம்பெறும். ஒரு வாஷிங் மெஷின், பாத்திரம் கழுவும் இயந்திரம் மற்றும் ஒரு பெரிய RO தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பு ஆகியவையும் புதுப்பித்தலின் ஒரு பகுதியாகும்.
மொத்தம் 115 விளக்கு சாதனங்கள், சுவர் விளக்குகள், தொங்கும் விளக்குகள் மற்றும் மூன்று பெரிய சரவிளக்குகள் பொருத்தப்படும். சமையலறையில் ஒரு மின்சாரப் புகைபோக்கி, மின்காந்த பர்னர்கள் கொண்ட கேஸ் அடுப்பு, 20 லிட்டர் மைக்ரோவேவ் மற்றும் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பான் ஆகியவை சேர்க்கப்படும்.
முதல்வரின் குடும்பம் வசிக்க இந்த விரிவான புதுப்பித்தல்கள் மற்றும் மேம்பாடுகள் தேவை என்று ஒரு பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
- ஷீஷ் மஹாலுக்கு சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஏன் முன்னதாகவே செல்லவில்லை?.
- ஆம் ஆத்மி தலைவர்கள் டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, முதல்வர் இல்லம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. முதல்வர் வீட்டில் (ஷீஷ் மஹால்) தங்க முலாம் பூசப்பட்ட கழிவறை உள்ளது. டெல்லி மக்கள் பணத்தில் ஷீஷ் மஹால் கட்டப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியது.
இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி தலைவர்கள் ஷீஷ் மஹாலை பார்வையிடுவதற்காக சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஷீஷ் மஹாலை பார்வையிடச் சென்றது ஊழலில் இருந்து திசை திருப்பும் ஆம் ஆத்மியின் செயல் என டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீரேந்திர சச்தேவா கூறுகையில் "ஷீஷ் மஹாலுக்கு சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஏன் முன்னதாகவே செல்லவில்லை?. ஆம் ஆத்மி தலைவர்கள் டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள். ஷீஷ் ஊழலில் இருந்து திசை திருப்புவதற்கான முயற்சியை ஆம் ஆத்மி செய்து வருகிறது.
ஷீஷ் மஹாலை முன்னதாகவே பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு முன்னதாகவே தோன்றவில்லை. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது ஏன் செல்ல முயற்சிக்கிறார்கள். முதல்வர் அதிஷிக்கு ஏபி 17 மதுரா சாலை பங்களா ஒதுக்கப்படும்போது, அவர் ஏன் இன்னொரு பங்களாவை கோருகிறார்?.
ஷீஷ் மஹாலுக்கு குற்றச்சாட்டில் இருந்து திசைதிருப்பும் வகையில் பிரதமர் வீடு குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்புவது அற்ப அரசியல்.
இவ்வாறு வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
- ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
- ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.
'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக குற்றம் சாட்டியது.
ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.
பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் இல்லத்தை புதுப்பித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா அளித்த புகாரின் பேரில், விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய பொதுப்பணித் துறையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
- ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
- ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், பாஜகவினர் 'ஷீஷ் மகால்' என்று அழைக்கும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதலமைச்சர் இல்லத்தை 'மியூசியமாக' மாற்றுவோம் என்று டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த கெஜ்ரிவாலின் ஆட்சியின் பொது முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.
பாஜகவின் ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.






