search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prevention of Cruelty to Animals Act"

    • விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
    • மனிதாபிமானமற்ற செயலாகும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தன்று தனது நாயை ஸ்கூட்டரில் இரும்பு சங்கிலியால் கட்டி சாலை வழியாக ஷிர்வா என்ற பகுதிக்கு சுமார் 6 கி.மீ. தூரம் இழுத்துச் சென்றார்.

    இதை அந்த வழியாக பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இதையடுத்து மொபட்டில் நாயை கட்டி இழுத்து சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து போலீசார் வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் நாயை மொபட்டில் கட்டி இழுத்துச் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் கொம்புகுடேவை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதுகுறித்து உடுப்பி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் அருண் கூறியதாவது:-

    நாயை மொபட்டில் கட்டி இழுத்துச் சென்றது தொடர்பாக தீவிர விசாரணை செய்து சம்மந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்.

    மேலும் சிலர் நாயை இழுத்துச் சென்றபோது இறந்துவிட்டதாகவும், சிலர் இறந்த பின்புதான் அந்த நாயை இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். எனவே அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    இதுகுறித்து பிராணிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த மஞ்சுளா கரகேரா கூறும்போது, `இந்த சம்பவம் ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். நாயை இழுத்து சென்ற நபர் ஹெல்மெட் அணியாமல் மிகவும் தைரியமாக இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளார். அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது.
    • தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    தமிழ்நாடு அரசின் 2017- ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×