search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter murder"

    • முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல் காடு நம்பியான் குளம் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் (வயது 50), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரிச்சர் (43). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

    மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ரிச்சரை தாக்கியதாக நெல்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு நாவல் காடு பகுதியில் நெல்சன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரிச்சர் அவரை வழிமறித்து தகராறு செய்தார். இருவரும் தகாத வார்த்தையால் மாறி மாறி பேசினார்கள். இதில் ஆத்திரம் அடைந்த ரிச்சர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நெல்சனை சரமாரியாக வெட்டினார்.

    கன்னம், வயிறு, மணிக்கட்டு பகுதிகளில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரிச்சர், பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நெல்சனை கொலை செய்த தகவலை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நெல்சன் கொலை செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பிணமாக கிடந்த நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட நெல்சனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். இதற்கிடையில் போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரகுநாத்தை கொலை செய்த வெள்ளையன் மற்றும் அவனது கூட்டாளிகளான பிரபல ரவுடி மூர்த்தி, பிரகாஷ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மூர்த்தி மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாத் (வயது 29). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளையன் என்கிற மாரி கவுண்டர் (37). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கைக்கலப்பாக மாறியதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதனால் காயமடைந்த ரகுநாத், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று இரவு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை ஆஸ்பத்திரி நர்சுகள் செய்து வந்தனர்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற வெள்ளையன் மற்றும் அவரது கூட்டாளிகளான மேட்டூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (36), மேட்டூர் நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) ஆகியோர் மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ரகுநாத்தை, கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தனர். இதனால் ரத்த வெள்ளத்தில் ரகுநாத் அங்கே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரபல ரவுடி வெள்ளையன் உள்பட அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார், மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த நோயாளிகளிடம் கொலை குறித்து விசாரித்தனர்.

    இதையடுத்து, ரகுநாத்தை கொலை செய்த வெள்ளையன் மற்றும் அவனது கூட்டாளிகளான பிரபல ரவுடி மூர்த்தி, பிரகாஷ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மூர்த்தி மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ரவுடி பட்டியலிலும் உள்ளார். தற்போது மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கொலையுண்ட ரவுடி ரகுநாத்துக்கு மனைவியும், 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் கணவரின் உடலை பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    • ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கனகராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கனகராஜூக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    கோவை:

    கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    சம்பவத்தன்று கனகராஜூம், அவரது நண்பரான புளியம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிசீயனான வெங்கடேஷ் (31) ஆகியோர் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் சங்க அலுவலகம் முன்பு அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். அப்போது வெங்கடேஷ் தனது செல்போன் மற்றும் பணத்தை காணவில்லை என கனகராஜிடம் தகராறு செய்தார்.

    அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் அங்கு கிடந்த செங்கலை எடுத்து கனகராஜின் தலையில் அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து வெங்கடேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கனகராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு கனகராஜை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த வெங்கடேஷை தேடி வருகிறார்கள்.

    • ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த, மாரிமுத்துவை அக்கம், பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாரிமுத்துவுக்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). பெயிண்டர். இவர் அவரது நண்பரான பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த முத்துவேல் (வயது 52) என்பவருடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தனர்.

    இந்தநிலையில் முத்துவேலின் சம்பள பணம் மாரிமுத்துவிடம் இருந்துள்ளது. அந்த பணத்தை தா என்று மாரிமுத்துவிடம், முத்துவேல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த முத்துவேல் பீர் பாட்டிலை உடைத்து மாரிமுத்துவை குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த, மாரிமுத்துவை அக்கம், பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பல்லடம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர். இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடியில் மாடு வாங்கிய தகராறில் பெயிண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முள்ளக்காடு அருகே ராஜீவ்நகரில் நேற்று இரவு ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அங்கு சுமார் 40 வயதுடைய ஒரு ஆண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கம்பால் அடித்துக்கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதையடுத்து அவரது பிணத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் முத்தையாபுரம் அத்திமரப்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது52) என்பது தெரிய வந்தது. கண்ணன் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    இவரது சொந்த ஊர் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த 4 ஆண்டாக கண்ணன் அத்திமரப்பட்டியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜீவ்நகர் 7-வது தெருவை சேர்ந்த ராஜா(22) என்பவர் மாடு வாங்க கண்ணனை அணுகினார்.

    அதன்படி கண்ணன் மாடு வாங்கி கொடுத்துள்ளார். அந்த மாடு திருட்டு மாடு என அப்பகுதியினர் கூறியுள்ளனர். இதுபற்றி கண்ணனிடம் ராஜா கேட்டார். அதற்கு மாடு திருடப்பட்டது அல்ல என கண்ணன் கூறினார்.

    இந்த நிலையில் இதுபற்றி பேச வருமாறு கண்ணன் அழைத்தார். அதற்காக நேற்று இரவு கண்ணன் ராஜீவ்நகருக்கு வந்தார். வந்த இடத்தில் கண்ணனுக்கும், ராஜாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராஜா மற்றும் அவரது நண்பர் காந்திநகரை சேர்ந்த தினேஷ்குமார்(19) ஆகிய 2 பேர் சேர்ந்து கண்ணனை சரமாரியாக கம்பால் தாக்கினர்.

    இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த ராஜாவும், தினேஷ்குமாரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ராஜா, தினேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

    இன்று காலை அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை கண்ணகி நகரில் பெயிண்டர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது23). பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 6 வருடங்களாக அதே பகுதியில் வசித்து வந்தார்.

    சென்னை காரப்பாக்கத்தில் 2 நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் விமல் பங்கேற்றார். அப்போது கண்ணகி நகரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் திருமண நிகழ்ச்சியில் குடிபோதையில் ஆட்டம் போட்டனர். அப்போது விமலுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    நேற்று இரவு 8.30 மணியளவில் விமல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரை மது அருந்தலாம் என்று எழுப்பிச் சென்றார். இருவரும் அங்குள்ள ஏரிக் கரை பகுதிக்கு சென்றனர்.

    அப்போது திருமண வீட்டில் நடந்த மோதல் முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் விமல் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விமல் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகிறார்கள். #tamilnews

    ×