search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "normal life"

    • 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
    • 50 நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை பனிக்காலம் ஆகும்.

    மிச்சாங் புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நவம்பரில் துவங்க வேண்டிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது.

    மழை முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அத்துடன் உறைபனியும் கொட்டுகிறது.

    50 நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம், படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல் தரைகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காட்சியளித்தது.

    இதுதவிர கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மீதும் உறைபனி கொட்டி யிருந்தது.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்சமாக 7.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில் இன்று 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    கொட்டும் உறைபனி காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகின்றனர். இன்னும் வரக்கூடிய நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தேயிலை செடிகள் மட்டுமின்றி புல் வெளிகள், செடி, கொடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற நாட்களில் வெப்பநிலையானது 0 டிகிரிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
    • வாகன ஓட்டைகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த மே 4 -ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனல் காற்று கடுமையாக வீசி வருகின்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் புயல் ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக ஆங்காங்கே பயிர் வகைகள் நாசமாயின. இருந்த போதிலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து காண ப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி வருகிறது. இதில் கடந்த மே 19-ந்தேதி மற்றும் இரண்டு நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது.

    இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு பழச்சாறுகள், பழ வகைகள், குளிர்பானங்கள், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு அவைகளின் தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இது மட்டுமின்றி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து வருவதையும் காண முடிந்தது. இதன் காரணமாக வழக்கமான சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டைகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சதம் அடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து தாக்கத்தால் அவதி அடைந்து வருவது காண முடிந்தது. ஆகையால் பொதுமக்கள் உணவு வகைகளை பாதுகாப்பாக எடுத்து தேவையின்றி வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்த க்கதாகும்.

    • வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
    • புதுவையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. புதுவையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இ ந்நிலையில் நேற்று முதல் புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது. கடுமையான வெப்பம் அடித்த நிலைமாறி புதுவை குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு மாறியுள்ளது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வந்தது. சுமார் 8.30 மணியளவில் மழை வேகமெடுத்தது. கனமழை காரணமாக நகர பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளமாக ஓடியது.

    இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கியுள்ளது.

    தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் கடந்த மாதம் பெய்த மழையினாலும் பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளில் 11 ஏரிகள் நிரம்பி வழிகிறது. தற்பொழுது பெய்து வரும் மழையில் மற்ற ஏரிகளை நிரப்ப பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரி மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்பொழுது பெய்து வரும் மழையால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகூர் பகுதியில் உள்ள வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது.

    மேலும் வரத்து மற்றும் போக்கு வாய்க்கால்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி நிலத்திலும் வீடுகளிலும் தண்ணீர் புகாதவாறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவசரமாக நடக்கும் வாய்க்கால் தூர்வாரும் பணியினால் கன மழை பெய்தால் மீண்டும் வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுவது உறுதியென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தெற்கு பகுதி பொதுப்பணித்துறை சாலை மற்றும் போக்குவரத்து பிரிவு மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து பராமரிப்பில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாகூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்து வருகிறது.

    போளூரில் மூதாட்டி கொலை சம்பவத்தை தொடர்ந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களில் ஒரு மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

    இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த உறவினர்களான மோகன்குமார், சந்திரசேகரன், கஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் இரவு பகலாக கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 62 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 44 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 18 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    போலீசாருக்கு பயந்து தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, அண்ணாநகர், திண்டிவனம் உள்பட 10 கிராம மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்று தலைமறைவாகி விட்டனர்.

    சிலவீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. விவசாய பணிகள் முடங்கியது. பஸ்கள் பயணிகள் இன்றி சென்றன. அந்த கிராமங்கள் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பில் இருந்தன.

    தற்போது படிப்படியாக வெளியூர் சென்ற கிராம மக்கள் ஊர் திரும்பி வருகின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.




    தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பியது. காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் காலையில் வழக்கம் போல் திறக்கப்பட்டு கூட்டம் அலைமோதியது. #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டன‌ர். கடைகள் அடைக்கப்பட்டன.

    பஸ்கள் இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று மதியத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. காய்கறி மார்க்கெட்டில் காலையில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. இன்றும் காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    ஏராளமான மக்கள் வந்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். தூத்துக்குடியில் இருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் குறைந்த அளவே பயணிகள் இருந்தனர். மேலும் ஆட்டோக்கள், வேன்கள் வழக்கம் போல் ஓடின. கார், மோட்டார் சைக்கிள்களில் மக்கள் வழக்கமான பணிகளுக்கு சென்றனர். இன்று காலை பழக்கடைகள், சிறு சிறு ஓட்டல்கள் திறக்கப்பட்டன.

    ஆட்டோக்கள் முழு அளவில் ஓடத்தொடங்கியது. நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லவேண்டிய மினி பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இன்று மாலைக்குள் மினி பஸ்களையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நகர பகுதியில் உள்ள 10 அம்மா உணவகங்களிலும் 3 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு வேன்கள், பூத்கள் அமைக்கப்பட்டு பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும், ஏற்கனவே அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் பால், ரொட்டி, உணவுகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி மூலமாக நகர் முழுவதும் கூடுதலாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கலவர பகுதிகள் முழுவதும் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இன்று அந்த பகுதியில் ஊழியர்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

    தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் ஏ.டி.எம் சேவை முடங்கியுள்ளது. நகரில் உள்ள 75 ஏ.டி.எம் மையங்களும் முடங்கியுள்ளன. நகர்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீசார் தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தூத்துக்குடி அண்ணாநகர், பிரைண்ட் நகர், கலெக்டர் அலுவலக பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிவிரைவுப்படை போலீசார் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  #SterliteProtest

    ×