search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Curry feast"

    • மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    • சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து.

    பசும்பொன்:

    ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வாறு நடைபெறும் விழாக்க ளில் நேர்த்திக்கடனாக ஆட்டுக்கிடாய்களை சுவா மிக்கு பலியிட்டு, பின்னர் அதன் கறியை கமகமக்கும் வகையில் சமையல் செய்து பக்தர்களுக்கு விருந்தாக படைப்பது காலம் காலமாய் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம் மன் மற்றும் கருப்பண்ண சாமி, வன்னி குலசாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமிகள் மற்றும் தேவதைகளுக்கு 17-ம் ஆண்டு மாசி களரி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

     இதில் சுவாமிகளுக்கு நேர்த்திக்கடனாக 51 ஆட்டு கிடாய்களைப் பலியிட்டு, 1,008 கிலோ வெள்ளாட்டுக்கறியை அதிகாலையில் சமையல் செய்து தங்களது குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து வைத்தனர்.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குலதெய்வ வழிபாடு செய்து, பின்னர் நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று ஆட்டுக்கிடாய் கறி விருந்தை ருசித்து சாப்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மழை வேண்டி கறி விருந்து நடந்தது.
    • இதில் அனைத்து மதத்தினர் பங்கேற்றனர்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா பருத்திக் கண்மாயில் புனித மரியாயி கல்லறை உள்ளது. இந்த கல்லறை கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 23-ந் தேதி திருப்பலி பூஜையும் கறிவிருந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கறிவிருந்துடன் கூடிய அன்னதானம் நடைபெற்றது. இதில் பருத்திகண்மாய் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டார்கள்.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மரியாயி என்ற இளம் பெண் அப்பகுதியில் இயற்கை வைத்தியம் செய்து வந்தார்.இவரது சிகிச்சை முலம் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். அவர் இறந்த பின்னர் அவரது சேவையை நினைவு கூறும்வகையில் சிவகங்கை அரசர் மாமன்னர் மருது பாண்டியர்கள் அப்பகுதியில் கல்லறைகட்ட இடம் கொடுத்தார்கள். கிராமமக்கள் சிறிதாக கோயில் அமைத்து கல்லறை அமைத்துள்ளார்கள் .அவரது நினைவைப் போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி 23-ந் தேதி மழைபெய்யவும் ,உலகமக்கள் நோயின்றி நலமுடன் வாழ்வதற்காக திருப்பலி மற்றும் அன்னதானத்தை கிராமமக்கள் சார்பில் நடத்தி வருகிறார்கள்.இந்த ஆண்டு நேற்று நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை பருத்தி கண்மாய் கிராம மக்கள் செய்திருந்தார் கள்

    • திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
    • விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி. இங்கு காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

    ஆனால் இந்த ஆண்டு ஆனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

    இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையாசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

    இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை நடந்தது. காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர். பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 250 மூடை அரிசியில் சாதம் தயாரானது.

    இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் கலைந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவர்.

    இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொர்க்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, குண்ணனம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.

    ஜாதி மத வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக கறுப்பு நிறத்தில் உள்ள வெள்ளாடுகளை வளர்த்து நேர்த்திகடனாக செலுத்துவது வழக்கமாக உள்ளது. 

    ×