search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai couple"

    • புகாரின் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சென்னை தம்பதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து புகார் அளித்து வருவதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    கோவை:

    கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். டிராவல்ஸ் உரிமையாளர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை சென்னை திருவொற்றியூரை சேர்ந்த லட்சுமிபதி(62) மற்றும் அவரது மனைவி நிர்மலா(52) ஆகியோர் சந்தித்து, நிர்மலா சாய்பாபாவின் மறுஅவதாரம் எனவும், தாங்கள் கூறும் நிறுவனம் மற்றும் தங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் 3 மடங்கு செல்வம் பெருகும் என தெரிவித்தனர்.

    இதனை நம்பிய சந்திரசேகர், லட்சுமிபதி பங்குதாரராக உள்ள நிறுவனம், மற்றும் அவர்களது உறவினர்களிடம் கோவை சிங்காநல்லூர் வங்கி கிளையில் இருந்து பல தவணைகளாக ரூ.1.45 கோடி பணத்தை பெற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

    3 மாதத்தில் லாபம் கிடைக்கும் என கூறிய அவர்கள் முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை லாபம் என கூறி கொடுத்ததுடன், அதிலிருந்து ரூ.3 லட்சத்தை பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென கேட்டு பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே சந்திரசேகருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் அவர்கள் இது போல் பணத்தை பலரிடம் பெற்று மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர் கோவை மாநகர குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சென்னை தம்பதிகளான லட்சுமிபதி மற்றும் நிர்மலா ஆகியோர் பாபா பேரை சொல்லி ஏமாற்றியதாக அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது பெற்றோரிடம் ரூ.3 லட்சமும், திருப்பூரை சேர்ந்த சத்திய நாராயணனிடம் ரூ.4 லட்சம், திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளத்தை சேர்ந்த தர்மலிங்கத்திடம் ரூ.2 லட்சம், கோவை ஆர்.எஸ்.புரம் முத்து நாகரத்தினம் என்பவரிடம் ரூ.1.30 லட்சம், கோவை வெள்ளலூரை சேரந்த சூர்யா என்பவரிடம் ரூ.4.15 லட்சம் வாங்கி மோசடி செய்ததாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல இந்த சென்னை தம்பதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து புகார் அளித்து வருவதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு போனது. #DiamondJewellery #Theft #CharminarExpress
    சென்னை:

    சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு போனது. நகைகளை திருடிய மர்ம நபர்களை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    சென்னை திருவள்ளூர் சாந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 65). இவர் தனது மனைவி கோமளாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து, நேற்று முன்தினம் மாலை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டார்.



    சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் தம்பதியினர் பயணம் செய்தனர். முன்னதாக தாங்கள் வைத்திருந்த விலை மதிப்புமிக்க வைர நகைகளை கைப்பையில் வைத்து, தனது தலையணையில் வைத்து பிரபுகுமார் படுத்துக்கொண்டார். ரெயில் திருட்டு பயம் காரணமாக நகைகளை அவர் இந்த வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நினைத்திருந்தார்.

    ரெயில் பயணத்தின்போது அவ்வப்போது கண்விழித்து நகைப்பையை இருக்கிறதா? என்று சோதித்து பார்த்து பிரபுகுமார் திருப்தி அடைந்து கொண்டார். ஆனால் ‘காப்பானை விட கள்ளனே பெரியவன்’ என்பது பிரபுகுமாரின் வாழ்க்கையில் உண்மையாகி போனது.

    சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் ரெயில் நிலையத்தை தாண்டி செல்கையில், பிரபுகுமார் தன் தலையணை அடியில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை சோதித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கைப்பையை காணவில்லை.

    இதனால் பதறிப்போன பிரபுகுமார், மனைவி கோமளாவுடன் ரெயில் பெட்டி முழுவதும் தேடி அலைந்தார். நகைப்பை கிடைக்காததால் தம்பதியினர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து ‘சென்னையில் இறங்கியதும் போலீசில் புகார் செய்யுங்கள்’ என்று சக பயணிகள் கூறியதை தொடர்ந்து சோகத்துடன் அமைதியானார்கள்.

    இந்த நிலையில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து பிரபு குமார்-கோமளா தம்பதியினர் உடனடியாக சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையம் சென்றனர். ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் தொலைந்து போனது குறித்து புகார் செய்தனர். உடனடியாக சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த சம்பவம் ஆந்திராவில் உள்ள ஓங்கோல்-காவலி இடையே நடந்துள்ளதாக சந்தேகிக்கிறோம். எனவே சட்டப்படி இந்த வழக்கு ஓங்கோல் ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட இருக்கிறது” என்றார்.

    கடந்த 9-ந் தேதி, காக்கிநாடா-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்ட சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணின் தாலி சங்கிலி, வளையல் உள்ளிட்ட 32 பவுன் நகைகள் திருட்டு போனது.

    நகைகளை பத்திரமாக பையில் வைத்திருந்த விஜயலட்சுமி, தூக்க கலக்கத்தில் இருந்தபோது அவரிடம் மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டு தப்பிவிட்டனர். இந்த சம்பவம் ஆந்திரா மாநிலம் ஓங்கோல் அருகே நடந்தது. தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு ரெயில் திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    எனவே ஆந்திரா மார்க்கமாக ரெயில் செல்லும்போது குறிப்பிட்ட நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக தமிழர்களை குறிவைத்தே இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. கைதேர்ந்த வெளிமாநில திருடர்கள்தான் தொடர் ரெயில் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. எனவே ரெயில்வே போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.  #DiamondJewellery #Theft #CharminarExpress
    மதுரையில் கணவன்-மனைவியை குழந்தைகளுடன் காரில் கடத்திச் சென்று ரூ.26 லட்சம் நகை-பணத்தை பறித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி லட்சுமி (வயது 42). இவர்களுக்கும், மதுரை வடபழஞ்சி புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் தரப்புக்கும் இடையே கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி சென்னையில் இருந்து வெங்கடேசன் தனது மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளுடன் மதுரை வந்தார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் லட்சுமி தனது ஆராய்ச்சி படிப்புக்கான (பி.எச்.டி.) கல்வி சான்றிதழை வாங்கி விட்டு பல்கலைக்கழக அலுவலகம் முன்பு நின்றிருந்த போது அங்கு திடீரென வந்த ஜெயச்சந்திரன் மற்றும் 10 பேர் ஆயுதங்களை காட்டி மிரட்டி வெங்கடேசனையும், லட்சுமி மற்றும் குழந்தைகளையும் காரில் கடத்திச் சென்றனர்.

    பொள்ளாச்சி பகுதிக்கு கடத்திச் சென்ற அந்த கும்பல் அவர்களை மிரட்டி ரூ. 17 லட்சம் மற்றும் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை பறித்துக் கொண்டது.

    மேலும் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்னை தம்பதியை விட்டு விட்டு அந்த கும்பல் சென்று விட்டது.

    அதன் பின்னர் அடிக்கடி கூடுதல் பணம் கேட்டு போனில் தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது. பணம் தராவிட்டால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

    இது குறித்து வெங்கடேசன் சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரை மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு போலீஸ் டி.ஜி.பி. அனுப்பி வைத்து சம்பந்தப்பட்ட கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னை தம்பதியை குழந்தைகளுடன் கடத்தி பணம் பறித்த வடபழஞ்சி புதுரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் தலைமறைவாகி விட்டார்.

    கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மதுரை புளியங்குளத்தைச் சேர்ந்த ரவி (39), குருபிரபு (22), ஜெகதீஷ் பாண்டியன் (27), கருப்பசாமி (24), குமாரவேல் (22), மாரிச்சாமி (22), குரு (22), செந்தில் (28) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். கோபி உள்ளிட்ட சிலர் தலைமறைவாகி விட்டனர்.

    கைதான 8 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது ஆள் கடத்தல், பணம் பறிப்பு, சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை தம்பதியை கடத்தி பணம்-நகைகளை பறித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×