search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Usman Khawaja"

    • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.
    • பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.

    துபாய்:

    பெர்த் நகரில், ஆஸ்தி ரேலியா-பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.

     

    இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது. இதையடுத்து அவர் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார். இது ஐ.சி.சி.யின் ஆடை மற்றும் உபகரண விதி மீறல்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கவாஜாவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கூறும்போது, "உஸ்மான் கவாஜா, தனிப்பட்ட செய்தியை காட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. முன் அனுமதி பெறாமல் கருப்பு பட்டை அணிந்துள்ளார். இது ஒரு விதி மீறல் ஆகும். முதல் கட்ட விதி மீறலையடுத்து கண்டனம் தெரிவிக்கப்படுகிறது" என்றார்.

    இது தொடர்பாக கவாஜா கூறும்போது, "தனிப்பட்ட துக்கத்திற்காக கருப்பு பட்டையை அணிந்ததாக ஐ.சி.சி.யிடம் கூறினேன். ஐ.சி.சி.யால் நான் கண்டிக்கப்பட்டதாக நினைக்கவில்லை" என்றார்.

    • ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகளையும் ஐசிசி குறைத்துள்ளது.

    சிட்னி:

    சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி விதித்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், ஐ.சி.சி.யின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் இரு நாட்கள் பெய்த மழை காரணமாக 2-வது இன்னிங்சில் எங்களுக்கு பந்துவீச கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஐ.சி.சி. பந்துவீச்சில் தாமதம் செய்ததாகக் கூறி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து 10 புள்ளிகளை எங்களிடம் இருந்து பறித்துள்ளது. இது எப்படி நியாயமானது என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை.
    • விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இந்தியா வரவுள்ளது. இந்த மாதம் 9-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த அணியுடன் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில், எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். உஸ்மான் கவாஜாவுக்கு இந்தியா விசா இன்று கிடைத்துவிடும் எனவும், உஸ்மான் நாளை ஒரு விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தீவிரவாத மிரட்டல் புகார் விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன கவாஜாவின் சகோதரர் அர்சகான் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். #Khawaja
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். சமீபத்தில் இந்தியாவில் நடந்த கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு விளையாடினார். காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.

    கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    இவரது சகோதரர் அர்சகான் கவாஜா (39). சமீபத்தில் இவர் சிட்னி புறநகர் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிரவாத தடுப்பு போலீசாரால் ஒரு ஆவணம் கைப்பற்றப்பட்டது.



    அதில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் தாக்குதல் நடத்துபவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த ஆவணம் அர்சகான் கவாஜா உடன் படிக்கும் முகமது கமெர் நிஷாம்தீன் எழுதியாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாணையில் நிஷாம்தீன் கையெழுத்து அந்த கடிதத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதை அறிந்த போலீசார் அவரை எந்தவித வழக்கும் இல்லாமல் விடுவித்தனர்.

    இந்நிலையில் ஒரு பெண் விவகாரத்தில் அர்சகான் கவாஜா அந்த கடிதத்தை எழுதியதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×