என் மலர்
நீங்கள் தேடியது "Beauty Tips"
- சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
- தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.
முடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் ஒரு சில சின்ன வெங்காயம் இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது.
சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் சேர்க்காமல் பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள சாறை பிழிந்து அதனை தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.
பத்து நிமிடம் மசாஜ் செய்த பின் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். கண் எரிச்சல் சிறிது இருந்தாலும் எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.
இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்தும் தலையில் தடவலாம். தொடர்ந்து ஆறு மாதத்திற்கு இதை பயன்படுத்தி வருபவர்கள் முடி உதிர்வு குறைத்துள்ளதாக பல சமூக வலைதளங்களில் எழுதி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நவநாகரிக உலகில் கூந்தலுக்கு ஷாம்புகள் போடுவதால் தான் முடி கொட்டும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஷாம்புகள் அனைத்துமே ரசாயன கலப்புகள் இருக்கும் என்பதால் நமது பாரம்பரிய சிகைக்காய் தூளை பயன்படுத்தினால் உச்சந்தலை குளிர வைத்து உடல் சூட்டை குறைப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும் பளபளப்பை தரும் என்றும் முடி கொட்டும் பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
ஷாம்புகளை பயன்படுத்தினால் பக்க விளைவுகளை ஏற்படும் ஆனால் சிகைக்காய் பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வாமையினாலும் கழுத்து கருப்பாகிவிடுகிறது.
- நாள்பட்ட கருமையாக இருந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக இந்த கழுத்து பகுதிகளில் கருமை நிறம் படிவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல சூரிய வெளிச்சம் படுறது இல்லை. ஆண்களாக இருந்தால் காலர் துணி கழுத்தை மறைத்துக்கொள்வதாலும், பெண்களுக்கு அவர்களி அணியக்கூடிய அணிகலன்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள். பெண்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய ஜெயின் எப்போதும் அணிந்து கொண்டே இருப்பதால் அது கழுத்தில் பதிந்து பதிந்து கருப்பாகிவிடும்.
அப்படி இல்லையென்றால் சில பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமையினாலும் கழுத்து கருப்பாகிவிடுகிறது. அதாவது சிலர் கவரிங் ஜெயின்களை பயன்படுத்துவதாலும் கழுத்து கருப்பாகிவிடுவதுண்டு. இப்படி நிறைய காரணங்கள் இருக்கிறது கழுத்தில் கருமை நிறம் ஏற்படுவதற்கு அதனால் ஆரம்பத்திலேயே நாம் அதை கவனித்தால் எளிதில் அதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அல்லது நாள்பட்ட கருமையாக இருந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நிவாரணம் கிடைக்கும்.
நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இந்த தீர்வினை பெறலாம். அதற்கு காய்ச்சாத பசும்பால் அல்லது பாக்கெட் பாலை ஒரு பஞ்சில் தொட்டு கழுத்தில் உள்ள கருமையான இடங்களில் தடவி மசாஜ் செய்தால் நாள்பட நாள்பட கருமை நிறம் மறைந்துவிடும். இதில் வேண்டுமென்றால் ரோஸ்வாட்டரும் சேர்த்துக்கொள்ளலாம்.
முகத்திற்கு ஃபேசியல் போடுகிற மாதிரி கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறுவதற்கு ஒரு முறை இருக்கிறது. அதற்கு ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்து அதில் ஒரு டவள் கொண்டு கழுத்தை முதலில் நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். அதன்பிற ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒருபகுதியில் வெள்ளை சர்க்கரையை தொட்டு கழுத்துப்பகுதியில் உள்ள கருப்பு பகுதியில் 10 நிமிடம் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதன்பிறகு டவள் கொண்டு சுடு தண்ணீரில் முக்கி நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.
கடலை மாவு அல்லது முல்தானிமெட்டி இவை இரண்டில் எது உங்களுக்கு கிடைக்கிறதோ அதனை கொண்டு ரோஸ்வாட்டரில் கலந்து பேக் மாதிரி கழுத்தும் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பிறகு ஈரமான டவள் கொண்டு நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை செய்து வந்தால் ரொம்ப சீக்கிரமாகவே கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறைந்துபோகும்.
இதன்பிறகு தேன், எலுமிச்சை சாறு, சர்க்கரை இது மூன்றையும் சேர்த்து ஒரு பேக்காக செய்து கூட நாம் இந்த கருமை நிறத்தை போக்க முடியும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த கற்றாலை ஜெல்லை தடவி வரலாம். அதேபோல் ரோஜா இதழ் அதுடன் பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைத்து அதையும் தடவி ஒருமணிநேரம் கழித்து கழுவி வந்தாலும் நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்.
அதேபோல் தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்தும் அதில் எலுமிச்சை பழத்தை கொண்டும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைய ஸ்க்ரப் செய்து வந்தாலும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறும். இந்த கருமை நிறம் மாறுவதுமட்டுமில்லாமல் வெள்ளையாக மாறுவதற்கு கோதுமைமாவு, ஓட்ஸ் இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி அதை ஒரு பேக் செய்து போட்டு வந்தாலும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து வெண்மை ஆவதற்கு நல்ல பலன் கொடுக்கும்.
- முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான்.
- கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.
முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான். வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்பது தவறான கருத்து. முகம் எப்போதும் பொலிவாக இருக்கவும், பார்த்தவுடனேயே பளீச்சென்று இருப்பதற்கு நிறைய கிரீம், பவுடர் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
நம்ம வீடுகளில், இருக்கின்ற சில பொருட்களை கொண்டு எளிமையான முறையில் நம்மை நாம் பராமரிக்கலாம். முந்தைய காலங்களில் எல்லாம் இப்படி தெருவுக்கு தெரு பார்லர்கள் இல்லையே. அனைவரும் வீடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டே பெண்கள் தங்களை அழகுபடுத்தி வந்தனர்.
கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் கடலைமாவை பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
வறண்ட சருமத்திற்கு கடலைமாவுடன் வாழைப்பழம், கற்றாலை ஜெல் பயன்படுத்தலாம். அல்லது சென்சிட்டிவ் ஸ்கின் என்றால் கடலைமாவுடன் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துகொள்ளலாம். ஆயில் சருமம் என்றால் கடலை மாவுடன் டீ டிக்காசன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சாதாரண சருமத்திற்கு பாதாம் ஆயில், முல்தானிமெட்டி ஆகியவற்றை கடலை மாவுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
வயதுக்கு வந்த பெண்குழந்தைகளுக்கும் பெரிய பிரச்சினையே முகத்தில் உள்ள முகப்பருக்கள் தான். முகப்பருக்கள் நிறைய இருப்பவர்கள் கடலைமாவினை கிரீன் டீயில் கரைத்து அதை முகத்தில் பேக்காக போட்டு வந்தால் நாளடைவில் முகப்பருவில் இருந்தும், அதனால் ஏற்படக்கூடிய தழும்புகளில் இருந்தும் விடுபடலாம். இந்த பேக்கை போட்டு வெதுவெதுப்பான நீரில் ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பளீச்சென்று இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வினை கொடுக்கும்.
- கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது.
- முதுமை பருவ பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும்.
கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது. இளம் வயது பெண்களின் தோற்றமும், முதுமை பருவத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும். அந்த அளவுக்கு அவர்களின் முகத்தோற்றம் பிரகாசத்தில் ஜொலிக்கும். முகப்பருக்கள், சுருக்கங்கள் எதுவும் தெரியாத அளவிற்கு நேர்த்தியாக சருமத்தை பராமரிப்பார்கள். செயற்கை அழகுசாதன பொருட்களை நாடாமல் இயற்கை பொருட்களை நாடுவதுதான் அவர்களது அழகின் ரகசியத்திற்கு காரணம்.
பொதுவாகவே வயது அதிகரிக்கும்போது சரும சுருக்க பிரச்சினை எட்டிப்பார்க்கும். சருமத்திற்கு போதிய கவனம் செலுத்தாதது, ரசாயனங்கள் அதிகம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவது, போதிய நீர்ச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதது போன்ற காரணங்களால் இளம் பருவத்திலேயே பலருக்கும் சரும சுருக்கம் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.
கொரிய பெண்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை. அதற்கு முறையான சரும பராமரிப்பும், இயற்கை அழகு சாதன பொருட்களும்தான் காரணம். சருமத்திற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் என்ன தெரியுமா? முட்டையும், காபி தூளும், தக்காளியும்தான். ஆம்! அவற்றை கொண்டே தங்கள் சருமத்தை பொலிவாக்குகிறார்கள்.
நன்மைகள்:
இந்த ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். சரும சுருக்கத்தையும், ஆரம்ப நிலையில் சருமத்தில் தென்படும் நுண்ணிய கோடுகளையும் குறைக்கும். சருமத்தை இளமை பொலிவுடன் தக்கவைக்க துணைபுரியும். சருமத்தில் ஆரம்ப நிலையில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்யும் தன்மை முட்டையின் வெள்ளைக்கருவுக்கு உண்டு. அது சரும துளைக்குள் ஆழமாக சென்று அதில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தை சுத்தம் செய்துவிடும். அந்த ஃபேஸ் மாஸ்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை -1 (வெள்ளைக்கரு மட்டும்)
காபி தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி ஜூஸ் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வருவது போல் நன்றாக அடித்து கலக்கிக்கொள்ளுங்கள்.
* அதனுடன் தக்காளி ஜூஸ் மற்றும் காபி தூளை சேர்த்து கிளறுங்கள். முகத்தில் தடவும் பதத்துக்கு தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
* முகம் துடைக்க பயன்படுத்தும் டவலை வெந்நீரில் முக்கி அதனை நன்றாக பிழிந்து கொள்ளுங்கள்.
* அந்த டவல் முகத்தில் ஒற்றி எடுக்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அந்த பதத்தில் முகத்தின் அனைத்து பகுதிகளிலும் அழுத்தி எடுங்கள்.
* பின்பு முட்டை, காபி தூள் பேஸ்டை முகம் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும்.
* 20 நிமிடங்கள் கழித்த பிறகு நன்கு உலர்ந்திருக்கும். அதனை எடுத்தால் அப்படியே பிரிந்து வந்துவிடும். அதனை மெதுவாக பிரித்தெடுத்துவிட்டு சாதாரண நீரில் முகத்தை கழுவினால் போதுமானது.
* வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். அதன் மூலம் சருமத்தில் படர்ந்திருக்கும் அழுக்குகள், மாசுக்களை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம்.
- அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.
ஆடை அணிகலன்களோடு பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனையோ வகையான சிகை அலங்காரங்கள் இருந்த போதும் சில தலைமுறைகளுக்கு முன்னாள் பிரபலமாக இருந்த கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.
நவீன இந்திய கொண்டை
குட்டையான மற்றும் அடர்த்தியான முடி உள்ள பெண்களுக்கு இந்த வகையான கொண்டை பொருத்தமாக இருக்கும். பண்டிகைகள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள இது சரியான தேர்வாகும். கவுன்கள் மற்றும் முழங்கால் வரையிலான ஆடைகள் அணியும்போது இந்த வகையான சிகை அலங்காரம் கூடுதல் அழகு சேர்க்கும். ஓவல், வட்டம் மற்றும் வைரவடிவ முகத்தோற்றம் கொண்ட பெண்கள் நவீன இந்திய கொண்டை அலங்காரத்தை தேர்வு செய்யலாம்.
பன் கொண்டை
எல்லா வயது பெண்களுக்கும் பொருத்தக்கூடிய எளிமையான கொண்டை வகை இது. பார்ட்டிகளுக்கும், பயணங்களுக்கும், அலுவலக நிகழ்ச்சிகளுக்கும் இந்த வகை கொண்டை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது பன் கொண்டையில் பூக்கம் மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.
டாப் பன் கொண்டை
டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள். திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.
ஆஃப் பன் கொண்டை
ஆஃப் பன் கொண்டை எனப்படும் இந்த கொண்டை இன்றைய இளம் பெண்களிடம் பிரபலமாக உள்ளது. விருந்துகளில் கலந்து கொள்பவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும். குட்டையான அல்லது நடுத்தரமான நீளம் கொண்ட கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்த வகை கொண்டை மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சைடு பன் கொண்டை
பக்கவாட்டு கொண்டை எனப்படும் இந்த கொண்டை அலங்காரம் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றம் அளிக்கும். இந்த வகை சிகை அலங்காரம் விருந்துகள், திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அலங்கரித்துக்கொள்ள ஏற்றது.
லோ பன் கொண்டை
கனமான அலங்கார பொருட்கள் இல்லாமல் எளிமையாக செய்யப்படும் இந்த வகை கொண்டை அலங்காரம் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அல்லது சாதாரண பண்டிகை நாட்களில் கலந்துகொள்வதற்கு ஏற்றது.
மெஸ்ஸி டாப் பன் கொண்டை
நேரமில்லாமல் அவசரமாக கிளம்பக்கூடிய நிகழ்வுகளுக்கு ஏற்ற கொண்டை அலங்காரம் இது. சில நொடிகளில் செய்யக் கூடிய இந்த வகை சிகை அலங்காரம் எளிமையாக இருந்தாலும் உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்க கூடியது.
- 40 வயதை கடந்தது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையான விசயம் தான்.
- முகம் நன்றாக இருக்கனும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இளமையை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கிறார்கள் இந்த உலகில். 40 வயதை கடந்ததும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது இயற்கையான விசயம் தான். ஆனால் இப்போது 30 வயது, 20 வயதிலேயும் பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சிலர் அறுபது வயதில் கூட முகத்தை இளமையாக சின்ன குழந்தை மாதிரி வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
முகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதனால் முகத்தை நல்லா வைத்திருக்க நினைப்பவர்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும்.
அதேபோல் நம் முகத்தில் ஒரு இருக்கம், பரபரப்பு, டென்ஷன் எது இருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் தசைகள் தளர்வுறும்போதும் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு அடிக்கடி சிரித்துக்கொண்டு இருந்தாலே முகத்திற்கு நல்ல பயிற்சி. ஆனால் நாம் சிரிப்பை மறந்து திரிகிறோம்.
அடுத்ததாக நாம் முகத்திற்கு போடும் மேக்கப். இந்த மேக்கப்பில் உள்ள கெமிக்கல்ஸ். இதனால் நம் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டும். மேக்கப் ரிமூவரை பயன்படுத்தும் போது அதில் உள்ள கெமிக்கல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அந்த காலத்தில் மேக்கப்பை அழிப்பதற்கு தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் ஆயில் தான் தேய்ப்பார்கள். அதற்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் கொடுத்து முகத்தில் உள்ள தசைகளை இறுகச்செய்து இன்னும் முகத்திற்கு பொலிவை கொடுக்கிறது. அதன்பிறகு காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பழங்களான பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றை பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். மற்றும் பழவகைகளையும் முகத்திற்கு ஃபேஷியலாக பயன்படுத்தலாம். அல்லது கடலைமாவு, பால் சேர்த்து கலந்து அந்த பேஸ்டையும் வாரத்திற்கு இரண்டுமுறை முகத்திற்கு தடவி வர முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாகி சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இல்லையென்றால் ஐஸ்கியூப்பை கூட முகத்தில் தேய்த்து கழுவலாம். புதினா இலைகளை அரைத்து ஒரு ஐஸ்கியூப் பாக்சில் ஊற்றி எடுத்து தேவைப்படும் போது அதனை பயன்படுத்தலாம். நீங்க எப்போதெல்லாம் பிரஷ்சாக இருக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த கியூப்களை எடுத்து முகம் முழுக்க தடவினால் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம்.
இதோட இல்லாம பாசிபயிறு, கோதுமை, கடலைமாவு, ஓட்ஸ் இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வாரத்திற்கு ஒருநாள் இந்த பொருளுடன் பன்னீர் அல்லது பாலில் குளைத்து பேக் போட்டு வந்தாலே முகம் இறுக்கமாக மாறும். மனம் தான் இறுக்கமாக இருக்க கூடாது. முகம் இறுக்கமாக இருந்தால் தான் வயதான தோற்றம் அவ்வளவு சீக்கிரமாக நமக்கு வராது.
- முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- ஃபேஷியல் ஐஸ் கியூபை முகம், கை, கழுத்து பகுதியில் மசாஜ் கொடுத்து 10 நிமிடம் கழித்து கழுவவும்.
ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னாலே பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். காரணம் அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தான். அதிலும் இந்த மாதம் அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும் மாதமாக இருப்பதால், இதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று ஃபேசியலோ, பிளீச்சிங்கோ செய்து கொண்டு இருப்பார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே நாம் அருமையான ஒரு ஃபேஸ் பேக்கை தயார் செய்து போட்டோம் என்றால் முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த வகையில் 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் மட்டும் செலவு செய்து ஒரு குளோயிங் ஃபேஷியல் பண்ற மாதிரி ஒரு ஆர்கானிக்கான ஃபேஷியல் எப்படி செய்யலாம் என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்:
கற்றாலை ஜெல்- 2 ஸ்பூன்
பீட்ருட் பொடி- 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் பொடி- 1 ஸ்பூன்
ஆரஞ்சு தோல் பொடி- 2 ஸ்பூன்
கடலைமாவு- 2 ஸ்பூன்
சந்தனப்பொடி- ஒரு ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரில் கற்றாலையில் உள்ள ஜெல் பகுதியை மட்டும் பிரித்து எடுத்து சேர்த்துக்கொள்ளவும், பின்னர் கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளான பீட்ருட் பொடி, ஆரஞ்சுதோல் பொடி, கஸ்தூரிமஞ்சள், சந்தனப்பொடி, கடலைமாவு ஆகியவற்றை சேர்க்கவும். இறுதியாக இதில் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை ஒரு சிலிகான் ஐஸ் டிரேயில் ஊற்றி வைத்து அதனை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்து வைத்துக்கொள்ளவும். குளிக்கப்போகும் போதும் இந்த ஃபேஷியல் ஐஸ் கியூபை எடுத்து முகத்திற்கும், கைகளுக்கும் ஒரு மசாஜ் கொடுத்து 10 நிமிடம் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து முகத்திலும், கழுத்து பகுதியிலும் பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம். 10 நிமிடத்தில் ஒரு நல்ல தீர்வை பெறலாம்.
- தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது.
- தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.
தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.
தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.
பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
அதேபோல் தங்காளி ஜூஸ் 3 ஸ்பூன், உருளைகிழங்கு ஜூஸ் 2 ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
- தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
- வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.
உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை.
இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது என்று கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
பொதுவாக முடி நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். நீங்கள் முடி தீர்வு தேடுகிறீர்களானால், வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம். அதிக விலையில் விற்பனையாகக்கூடிய எண்ணெய் வகைகளை பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.
அந்தவகையில் தற்போது முடி கொட்டும் பிரச்சினையை எப்படி எளியமுறையில் சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
செம்பருத்தி பூ- இரு 10 பூ
செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி
வேப்பிலை- ஒரு கைப்பிடி
மருதாணி இலை- ஒரு கைப்பிடி
சாம்பார் வெங்காயம்- 5 நம்பர் (இடித்தது)
சோற்றுக்கற்றாலை- ஒரு கப்
வெந்தயம்- 2 டீஸ்பூன்
பெரிய நெல்லிக்காய்- 3 (இடித்தது)
கருசீரகம்- 2 டீஸ்பூன்
வெட்டிவேர்- ஒரு கைப்பிடி
செய்முறை:
ஒரு பெரிய அயன் கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும், கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி, வெங்காயம், நெல்லிக்காய் இதனை இடித்து சேர்க்க வேண்டும். கற்றாலையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும். சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் எசன்ஸ்சும் அந்த தேங்காய் எண்ணெயில் நன்றாக ஊறி இறங்கிய பிறகு வடிகட்டி அதனை தேவையான டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம். 2, 3 மாதங்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது.
முடிகொட்டுதல் பிரச்சினை மற்றும் முடி அடர்த்தி அதிகமாக இல்லை என்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும், பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.
- பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம்.
- சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள்.
வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.
ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.
பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.
பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.
மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.
சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.
சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.
சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.